Followers

Sunday, December 28, 2008

கோளங்களின் புள்ளிகளில்-பகுதி 4

மூன்றாம் பாகத்தை எங்கே விட்டோம்?இஃகி!இஃகி(பழமைகிட்டயிருந்து தொத்திகிச்சு:)) நினைவுக்கு வந்திருச்சு!"நீங்க நமிதாவ வச்சிகிட்டு வேதாளத்தை இன்னும் கொஞ்சம் தூரம் கதை சொல்ல அனுப்பறீங்களான்னு சொன்னதுதான் தாமதம்...... //

"வேதாளத்த எங்க வேணும்னாலும் அனுப்பி வைக்கலாம்...அது எப்பிடினா ஒழிஞ்சா சரி! இந்த மாதித்தன் பயலும் தான்.. அது ரெண்டையும் அப்படியே எங்கனா அண்ட வெளில தள்ளி விட்றுங்க!"// என்று என் காதில் கிசுகிசுத்தார்.

வேதாளக் காதாயிற்றே! அதுசரி யின் முணுமுணுப்பு வேதாளத்தின் காதில் கணீரென்று கேட்டது.உடனே விக்கிரமாதித்தனிடம் "இவரு பொன்னியின் செல்வன் மிதப்பில பழைய நட்பையெல்லாம் மதிக்காம உன்னையும் என்னையும் அண்டத்துல விடறதுக்கு "கூ" செய்யறாரு பார்த்தியான்னு சொன்னதும் அதற்கு விக்கிரமாதித்தன் " இவருக்கென்ன நவாஸ் செரிப் பின்னு நினைப்பா? முஷ்ரஃப் விமானத்தில் ஏறியதும் விமானத்துல சுத்த விடறதுக்கு!முஷ்ரஃப் திரும்ப வந்து என்னென்னல்லாம் நடந்துருச்சுன்னு வா அவருக்கு மறுபடியும் கதை சொல்வோம்" என்றான்.

நானும் இரண்டுபேரும் என்னிடம் சமத்தாகத்தானே இருந்தீங்க!உங்களை ஏன் அண்டத்துல விடறதுக்கு நினைக்கிறாருன்னு சொன்னதும் வேதாளம் " இந்த சிறுக்கி நமிதா ஏதாவது கொடுத்து மயக்கி இருப்பா" என்றது.அப்பொழுதுதான் நான் நமிதாவின் நினைவு வந்தவனாக " என்ன நமிதா! மச்சான் நல்லா கவனிச்சிகிட்டாரா என்று கேட்டேன்.அதற்கு நமிதா இனிமேல் நான் அதுசரி மச்சான்ஸ் கூடவே சுத்தப்போறேன்.உன்கூட வந்தா வெறும் கொள்ளுத்தண்ணிதான் கிடைக்கும்.இவர் டெக்கீலாவெல்லாம் கொடுத்து என்ன நல்லாக் கவனிச்சுக்கிறாரு.அதனால நான் உன்கூட "டூ" நான் வரமாட்டேன் என்றது.நீ கா ன்னுல்ல முன்னமெல்லாம் பாட்டுப் பாடிட்டுருந்த.இப்ப என்ன டூ ன்னல்லாம் புதுசா என்னென்னமெல்லாமோ சொல்கிறாய் என்றேன்.இதெல்லாம் நம்ம மச்சான்ஸ் அதுசரிகிட்ட கத்துகிட்டேன் என்றது.

அந்த நேரம் பார்த்து சந்திராயன் நிலவுக்குப் போய் விட்டு திரும்ப வருவது தெரிந்தது.பரவாயில்லையே கோளங்கள் ரொம்பத்தான் முன்னேறிடுச்சு.நினைச்ச இடத்துக்கெல்லாம் வண்டி கிடைக்குதேன்னு வியப்புல நம்ம பழைய ஸ்டைல் பஸ் நிறுத்தும் கோணத்தில் நின்றேன்.பிரயாணத்துக்கு முன்னால எத்தனைதான் வீட்டிலருந்து துவங்கி ரயில்வே ஸ்டேசன்,பஸ் ஸ்டாண்டு வரைக்கும் பழம பேசுனாலும் அந்த வண்டி புறப்படுறதுக்கு சில வினாடிகளுக்கு முன்னாடி "கண்னு!நேரம் நேரத்துக்கு சாப்பிடு!நல்லாப் படி!கோடி வீட்டு கண்ணாத்தாள கேட்டதாச் சொல்லு! இந்த மாதிரி குசலம் பேசிக்கிற சுகமே தனிதான்.

நானும் பழைய பழக்கத்துல அனைவருக்கும் டாட்டா சொல்லி சந்திராயனுக்குள் போகலாமுன்னு வாசல் கதவை நெருங்கியதும் அதுசரியிடம் "நமிதாவ நல்லாக் கவனிச்சுக்கங்க!இப்ப வேதாளம்,விக்கிரமாதித்தன்,நமிதா கெட்டப்புல பார்க்க நல்லாவே இருக்கீங்க!இருந்தாலும் துளசி டீச்சர் கிட்ட சொல்லி ஒரு நாய்க்குட்டியும் கூட்டத்துல சேர்த்துகிட்டீங்கன்னா அந்தக்காலத்து ரஞ்சன் மாதிரி காடு,மலைன்னு சுத்திப் பாட்டு பாடிகிட்டே கதை சொல்லலாம்!நான் ஊருக்குப் போய் சேர்ந்ததும் கடுதாசி போடறேன்"என்று சொல்லி விட்டு சந்திராயனுக்குள் நுழைந்தேன்.சந்திராயன் என்னை முதலாம் பாகம் துவக்கம் கொல்லைப்புறத் தோட்டம் நோக்கி பயணித்தது.


சும்மா சொல்லக்கூடாது சந்திராயனை.ஆள் இல்லாம உட்கார்ந்த இடத்துல இருந்துகிட்டே இம்புட்டு தூரப் பிரயாணம் போறது சாதனைதானே!ன்னு வியப்பில் ஆற அமர்ந்து கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தால் எனது கோர்வையில்லாத சிந்தனை மனித குல வளர்ச்சி பற்றி Bigbang தியரிலிருந்து ஆரம்பிச்சு மனிதகுல துவக்க நியாண்டர்தால் மனிதன் துவங்கி மனிதனின் முதல் கண்டு பிடிப்புக்களாய் நெருப்பின் உபயோகம்,கூடவே தெய்வம் கொள்கைப் பரிணாமம், காடு மேடா அலைந்ததில் மிதமிஞ்சிய நிலைக்கு வந்து விட்டதாலும்,காட்டு வாழ்க்கை மாறி நீர் நிலங்கள் தேடி குடியேற்றம்,நீர் நிலம் அக்கம் பக்கத்து தனது இன வளர்ப்பு வாழ்க்கை பிடித்து மொகஞ்சோ தாரா,ஹரப்பா,சிந்து சமவெளி சுமேரியா நாகரீகம்,திராவிட ஆரிய,எகிப்திய,ரோம் நாகரீகம், போர்க்குணம் ரத்தத்தின் அணுக்களில் துவங்கிய வாழ்க்கை மண்,பெண்,பொன் என்று பரவல்,நிறம்,மொழி,பழக்க வழக்கங்களில் துவங்கி தேசங்கள் உருவாக்கம்,தேசங்கள் உருவானதும் அதன் விரிவாக்கம் என போர்கள்.
நாகரீக பரிமாறல்கள் கூடவே மோதல்கள் என நாகரீகங்கள் மற்றும் கலாச்சார மோதல்களுக்கிடையில் வாழ்க்கைப் பாடம் இலக்கியம்,இசை,நடனம்,மருத்துவம்,கணிதம்,பொருளாதாரம்,விஞ்ஞானம், புதியன கண்டுபிடி, தத்துவம்,மதம் என்று கோட்பாடுகள் நீண்டன.

போர்கள் மத,இன வெறுப்பின் அடையாளமாகத் தோன்றியதும் எதிர்வினையாக தத்துவத்தின் அடிப்படையில் நாத்திகம் தோன்றியது.சைவ,வைஷ்ணவ,ஜைன,புத்த,மொகலாய,ஆங்கில கோட்பாடுகளின் அடிப்படையில் கலாச்சாரம்,கட்டிடக் கலைகள்,அரசியல்,வணிகம் பிறந்தன.
இவைகளின் உரசலிலும் தனிமனித விருப்பு வெறுப்புக்களிலும் போர்கள் துவங்கின.கூடவே உலகம் வெல்லும் கனவுகளும் அலெக்சாண்டர் போன்ற மனிதர்களுக்கு உதித்தன.நிலத்தில் யானை,குதிரை என்று நடந்தால் தூரம் என்று அறிந்து கடல்வழிகள் கண்டு பிடிப்பு,இந்தியாவைக் கண்டு பிடிக்கிறேன் என்று அமெரிக்கா தோன்றல், ஒரே குளிர் என்ற சூழலிருந்து சம தட்ப வெட்ப கால நிலைகள் பிடித்துப் போகவே சாம்ராஜ்யக் கனவுகள் நிலை கொண்டன.
எகிப்திய ஆதிக்கம்,ரோம் படையெடுப்பு,துருக்கிய,ஆட்டோமன் பேரரசு,யூத அவலங்கள்,உலகப் போர்கள் என்று போர்ப்படலம் விரிந்தது.போர்கள் மத,இன வெறுப்பின் அடையாளமாகத் தோன்றியதும் எதிர்வினையாக நாத்திகம் தத்துவத்தின் அடிப்படையிலும் தர்க்கவாதம் அடிப்படையில் தோன்றியது.ஆனாலும் தனக்கும் அறியாத தெரியாத புலன்களினாலும்,விந்தைகளாலும் மதம் பரவலாக்கப் பட்டு விட்ட பொது புத்தியாலும் இயற்கையின் அதீத சக்திகளாலும் தன்னையும் மீறிய ஒன்று என்ற கோட்பாட்டில் மனிதன் இன்னும் நம்பிக்கை வைத்துக் கொண்டுள்ளான்.

அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் மதம் மனிதனுக்கு பெரும் நம்பிக்கைதான்.இவ்வளவு தூரப் பயணத்தை விஞ்ஞானக் கண் கொண்டு பார்ப்பதும் விந்தையென வியப்பதும் அல்லது பிள்ளையார் சுழி போட்டுக் கொள்வதும் தனி மனித உரிமை.இதையெல்லாம் தாண்டி மனிதனே உருவாக்கிக்கொண்ட மனிதனுக்கு தேவையில்லாத தீயவைகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டு மனித இனம் சுதந்திரம் தேட எத்தனிக்கிறது.

இது வரை பார்த்ததில் கண்ணுக்குத் தெரியாத அல்லது இல்லாத சில விசயங்கள்,கோட்பாடுகள் என்னவென்று நோக்கினால் ஜாதிகள்,மதங்கள்,தேச எல்லைகள் என்ற மனக்கோடுகள்.ஆனால் மனித குலத்தை ஆக்கிரமிக்கும் செயல் வடிவங்களாய் இவைகளே முன்னிற்கின்றன.ஒருவேளை இதுவரை சென்ற நமது பயணங்களின் தூரங்களில் இவைகள் இனிவரும் காலத்தில் பொய்ப்பிக்கப்படலாம்.


யுகங்களின் மாறுதல்களில் இனி வரப்போகும் மாறுதல்கள் யாரரிவார்?இத்துடன் அண்டங்கள் அடங்கிய மேல் நோக்கிய மேக்ரோ பயணம் நிறைவடைகிறது.இத்துடன் சுபம் போட்டு விட்டு விடுவேன் என்று பதிவுப் பக்கம் எட்டிப் பார்க்கும் பெருந்தகைகள் வேட்டி,சேலை குப்பையை தட்டி விட்டு எழுந்து போய் விடவேண்டாம். இனி கீழ் நோக்கிய மைக்ரோ பாடங்கள் ஆரம்பம்.....

Tuesday, December 16, 2008

கோளங்களின் புள்ளிகளில்-பகுதி3

நல்ல தூக்கத்தில் இருந்த என்னை யாரோ முதுகில் தட்டுவது போல் இருந்தது.அரைக்கண்ணில் நோக்கினால் மாரியம்மா கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறாள்.இன்னா மேன்! இம்புட்டு தூக்கம் விடுகிறாய் என்றபடி இந்தா குடி என்று பெட்காபி கொடுத்தாள்.

அட கெரகத்தே!நான் தூங்கி எழுந்தா பல் விளக்கி,இரண்டு குட்டிக்கரணம் போட்டு விட்டு,குளித்துவிட்டு,அப்புறம் கொஞ்சம் வயிற்றைக் காய வைத்து தண்ணீர் குடித்துவிட்டு அப்புறம்தான் நெஸ்காபியெல்லாம் குடிக்கிற பழக்கமென்றேன்.குட்டிக்கரணம்தான் அதுபாட்டுக்கு நடக்குதே அப்புறம் நீ என்ன தனியாக குட்டிக்கரணம் போடப்போடுகிறாய் என்றாள்.அதற்கு நான் எங்க ஊர்ல இதுக்கு யோகா என்று பெயரென்றேன். சரி!சரி என்னமோ பண்ணித் தொலை ஆனால் இங்கே பிரெஞ்சு பாத் மட்டும்தான் அனுமதி என்று சொல்லிவிட்டு காபியை டேபிளில் வைத்துவிட்டுப் போய்விட்டாள்.இந்த சிரமங்களெல்லாம் நம்மூருக்குப் போக வரைக்கும்தானே,சமாளித்துக் கொள்ளலாமென்று நினைத்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொஞ்சம் மூச்சை மட்டும் உள்ளிழுத்து சில வினாடிகள் நம்மூர் சகாக்கள் "தம்"மை விட்டு அனுபவிப்பது போல் மூச்சை உட்கார விட்டு பின் வெளியே என பத்து முறை மூச்சிழுத்து விட்டு மனதுக்குள் A paradox of same action with different results = a cigarette Puff and Yoga என்று நினைத்துக்கொண்டேன்.

பின் தலையை திருப்பிப் பார்த்தால் முதுகில் ஆக்ஸிஜன் பொட்டியை சுமந்தபடி நீல் காற்றுவெளியே மிதந்து கொண்டிருந்தான்.கூடவே மூக்கில் பேசும் குரலில் நாசாவுக்கு ஏதோ தகவல் சொல்லிக்கொண்டிருந்தான்.அந்த நேரம் பார்த்து மரியா மீண்டும் வந்து இப்படியே போய்க் கொண்டே இருக்கலாம்.இந்தப் பயணத்துக்கு எல்லையே இல்லை!ஆனால் நாங்கள் கொஞ்சம் டேரா போட்டு நீர்,நிலம்,அணு,மினரல் போன்ற சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது.அதனால் நீ வேற ஏதாவது வண்டி புடிச்சு போற வேலையப் பாரு என்றாள்.கூடவே இப்பவெல்லாம் இந்தியா கூட சந்திராயன் வண்டி கட்டிகிட்டு இங்கேயெல்லாம் சுத்துறாங்க என்றாள்.அதற்கு நான் சந்திரன் சுற்றுவட்டத்துக்கு அல்லவா போகவேண்டுமென்று மனதுக்குள் முணுமுணுத்தேன்.

இதற்கிடையில் நமிதா வேறு அங்கே தூங்கிகிட்டு இருக்குதே!எப்படி பூலோகம் போய்ச் சேர்வது என்ற கவலையும் சேர்ந்து கொண்டது.சரி உதவிக்கு யாராவது இருக்கிறார்களா என்று இகலப்பையில் நோக்கினால் அங்கே "அதுசரி" முதல் பாகம் 8வது படத்துக்குப் பக்கத்துல விக்கிரமாதித்தன் கூடவும் வேதாளத்து கூடவும் கதையடிச்சுகிட்டு இருக்கார்.சரியான நேரத்துல சரியான ஆள்தான் மாட்டினார்ன்னு சந்தோசத்துல "அண்ணா!ஊருக்கு திரும்ப போறதுக்கு வழி தெரியாம வண்டியில்லாம மாட்டிகிட்டேன்.கூடவே நமிதாவ வேற பிக்கப் பண்ணனும்!என்ன செய்யறதுன்னு முழிச்சுகிட்டு இருக்கேனுங்கண்ணா"ன்னு சொன்னதும் அவர் //டயர்டா இருக்குன்னா விட்றுங்கண்ணா...நான் அந்த வழியா தான் வர்றேன்...அப்பிடியே பிக்கப் பண்ணிக்கிறேன் :))// என்றார்.

சண்டிக்குதிரைய இவர் தலையில கட்டுற சந்தோசத்துல " அண்ணா! அப்ப நீங்க நமீதாவ வெச்சிக்குங்க!வேதாளத்தைக் கொஞ்சம் இங்கே அனுப்புங்க என்றேன்.அதற்கு அவர் வேதாளத்தைப் பிரிஞ்சு விக்கிரமாதித்தன் எப்பவுமே பிரிஞ்சு இருக்கிறதில்லை அதனால விக்கியும் கூடவே வருவான் என்றார்.அதற்கு நான் விக்கிரமாதித்தன் கிட்ட கொஞ்சம் டெக்கீலாவ வாங்கி நமிதாவுக்கு கொடுக்கச் சொல்லிட்டு இரண்டுபேரையும் இங்கே அனுப்பி வையுங்கண்ணா என்றேன்.

சரி என்று அதுசரி சொன்ன சில கணங்களில் வேதாளமும் விக்கிரமாதித்தனும் என்னிடம் வந்து சேர்ந்தார்கள்.வந்து சேர்ந்தவுடன் டிஸ்கவரிக்காரங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு ஹாய் வேதாளம் & விக்கிரமாதித்தன்!சவுக்கியமா இருவரும்?பார்த்து வருசக்கணக்கிலாச்சே என்றேன்.ஆமாம்!முன்பெல்லாம் முருங்கைமரம் மரம் மட்டும்தான் தாண்டிகிட்டு இருந்தேன்.இப்பவெல்லாம் தொழில்நுட்பம் ரொம்ப வளர்ந்துட்டதால தேசம் விட்டு தேசம்,கண்டம் விட்டு கண்டம்,கோளம் விட்டு கோளம் பறந்துகிட்டு இருக்கேன் என்றது வேதாளம்.விக்கிரமாதித்தன் புன்முறுவலுடன் எங்கள் உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

வேதாளம் "நட்! உனக்கொரு நாட் போட்டு கதை சொல்லுகிறேன்.விடையைச் சொல் என்றது.அதற்கு நான் வேதாளம் கண்ணு!நானெல்லாம் கதையிலேயே நாட்டு வைக்கிற பாக்கியராஜ் ஊர்க்காரனாக்கும்.உன்னைப் பற்றி எத்தனையோ வருசத்துக்கு முந்தியே தெரியும்.குசும்பு பண்ணாம கதையை விக்கிகிட்ட சொல் என்றேன்.இதுவரையிலும் ஒன்றுமே பேசாமலே வந்த விக்கிரமாதித்தன் பாக்கியராஜ் பேரைக் கேட்டதும் நானும் ஆட்டையில சேர்ந்துக்குறேன்ன்னு சொன்னான். வசமா மறுபடியும் விக்கிரமாதித்தன் மாட்டிகிட்டான்னு வேதாளம் மனதுக்குள் சிரித்தது.எந்த விடுகதைப் போட்டாலும் விடை சொல்லும் விக்கிரமாதித்தனை வேறு விதத்தில்தான் மடக்கவேண்டுமென்று நினைத்து சரி!சரி!உனக்கு ஒரு கணக்கு சொல்லுகிறேன்!வேணுமுன்னா இதற்கு விடை சொல் என்று நம்ம முதல் பாகம் கணக்கு சொன்னது.

This is a trip at high speed,
jumping distances by factor of 10.
Start with 100 equivalent to 1 meter, and increasing sizes by
factor of 10s ,or 101 (10 meters), 102 (10x10 = 100 meters, 103
(10x10x10 = 1.000 meters), 104 (10x10x10x10 = 10.000 meters),
so on, until the limit of our inmagination in direction to the
macro-cosmos.
.................................................................................................................................................................
விடை சொல்லு பார்க்கலாம் என்றது வேதாளம்.விக்கிரமாதித்தன் அது ஒண்ணுமில்ல கண்ணு

"இது 10 ஆல் பெருக்கும் தூரத்தைக் கடக்கும் ஒரு மிக வேகமான பயணம்.
அதாவது 10 x 10 = 100 மீட்டர்
10 x 10 x 10 = 1000 மீட்டர்
10 x 10 x 10 x 10 = 10000 மீட்டர்
இந்த வேகத்தில்தான் இப்ப பூலோகம் திரும்ப போயிட்டுருக்கோம் என்று முதல்பாகம் படித்த தைரியத்தில் சொன்னான்.சிம்மா சொல்லப்படாது. இம்புட்டு கோளங்கள் சுத்திகிட்டு இருந்தும் அது ஒண்ணுக்கொன்னு முட்டிக்காத இடைவெளியில் அதுபாட்டுக்கு சுத்தி திருஞ்சிகிட்டு கிடக்குதுகள்.வேதாளத்தை இன்னும் கொஞ்சம் பாக்கியராஜ் ஸ்டைல்ல வேதாளத்தை இங்கிலிபீசுல இம்ப்ரஸ் பண்ணலாமேன்னு நினைச்சு

From this distance, all the galaxies look small with inmense empty spaces in between.
The same laws are ruling in all bodies of the Universe.
We could continue traveling upwards with our imagination,
but now we will return home quickly என்று வேதாளத்திடம் சொல்லிவிட்டு

100,000 light-years :We started reaching the periphery of the Milky Way என்று என்னிடம் விளக்கிக் கொண்டு வந்தான்.

சரி!சரி!பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது! நான் அதுசரியின் கட்டளையை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி விக்கிரமாதித்தனையும்,என்னையும் சுமந்து கொண்டு அதுசரியும்,நமீதாவும் இருக்குமிடத்துக்கு வேதாளம் வேக வேகமாக கீழ்நோக்கிச் சென்றது.விக்கிரமாதித்தன் கணக்கின் விடையை வேதாளத்துக்கு இங்கிலிபீசுல சொல்லிக்கொண்டே வந்தான்

1 million light-years : At this tremendous distance we could see all the Milky Way &
other Galaxies too...

10,000 light-years : We continued our travel inside the Milky Way.
1,000 light-years : At this distance we started travelling the Milky Way, our galaxy.
100 light-years : “Nothing” Only stars and Nebulae...
10 light-years : Here we will see nothing in the infinity....
1 light-year: At one light-year the little Sun star is very small

1 trillion km: The Sun now is a small star in the middle of thousands of stars...
100 Billion km : The Solar System starts looking small...
10 billion km : At this height of our trip, we could observe the Solar System and the orbits
of the planets
1 billion km: Orbits of Mercury,Venus, Earth,Mars and Jupiter.


100 million km Orbits of Venus and Earth...




10 Million km Part of the Earth’s Orbit in blue

1 million km: The Earth and the Moon’s orbit in white....
100.000 km: The Earth starts looking small...
10.000 km : The northern hemisphere of Earth, and part of South America
அப்பாடா!ஒரு வழியா ஊர்ப்பக்கம் வந்து விட்டோம் போல இருக்கிறதே என்று நினைத்து பூமியைப் பார்த்தால் அதுசரி பக்கத்தில் டெக்கிலாவை வைத்துக்கொண்டு நமிதாவிடம் ஏதோ சைகை செய்து சிரித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.அதுசரி அண்ணே!உங்க புண்ணியத்திலயும்,வேதாளம்,விக்கிரமாதித்தன் உதவியோடும் மூன்றாம் பகுதிய ஓட்டிட்டேன்!இன்னும் நாலாம் பாகத்துக்குப் போகவேண்டியிருக்குது.நீங்க நமிதாவ வச்சிகிட்டு வேதாளத்தை இன்னும் கொஞ்சம் தூரம் கதை சொல்ல அனுப்பறீங்களான்னு சொன்னதுதான் தாமதம்......

Sunday, December 14, 2008

கோளங்களின் புள்ளிகளில்-பகுதி 2

ஓய்வெடுக்கிறேன் பேர்வழின்னு இப்படி ஒரேயடியா உட்கார்ந்துகிட்டேயே நமிதா!கிளம்பு போகலாம் என்றேன்.எவ்வளவு தூரம் பிரயாணம் செய்திருக்கிறேன்.எனக்கு உடம்பெல்லாம் வலிக்குது,நீ ஒன்று செய்!இந்த வழியாத்தான் நாசாவிலிருந்து அனுப்பும் டிஸ்கவரி ங்கிற பேருல ஒரு வண்டி வரும்.நீ அதை கையக் காட்டி நிறுத்தச் சொல்லி அதுல போ!மீண்டும் திரும்ப இந்த வழியாத்தானே வருவாய்.அப்பொழுது உன்னை நான் பிக்கப் செய்துகொள்கிறேன் என்றது .

ஊருல அம்மாக்கள்,அம்மணிகள்,மாமிகள்,மச்சிகள்,ரிட்டையர்டு தாத்தாக்கள் அத்தனைபேரும் கோலங்கள் தான் பார்க்குறாங்க!அதெல்லாம் உவ்வேங்கிறதால நமீதாவை நம்பி கோளங்களையெல்லாம் சுற்றிப் பார்க்கணுமின்னு வந்தால் நமிதா இப்படி பாதி வழியில டபாய்க்குதே என்று மனதில் புலம்பிக்கொண்டே டிஸ்கவரிக்காக காத்திருந்தேன்.

குதிரைச் சவாரியில போவதை விட டிஸ்கவரியில் போனால் வேகமாகவும் போகலாம்,அதே மாதிரி காக்பிட் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு ஏதாவது பீட்டரடிச்சுகிட்டே போகலாம் என்று நினைத்தேன்.நமிதா சொன்னமாதிரியே டிஸ்கவரி கொஞ்சம் தூரத்துல வருவது தெரிந்தது.டவுனுக்குப் போகிற பஸ் வருவதற்கு ஒரு கிலோ மீட்டர் இருக்கும்போதே கையக் காட்டி நிற்கிற பழக்கத்தில் நானும் கையை நீட்டிக் கொண்டு நின்றிருந்தேன்.

இது யாரிங்கே! பூமியிலுமில்லாம சந்திரனுமில்லாத பகுதியில் குதிரையோட ஒருத்தன் நிற்கிறானே என்று நினைத்து டிஸ்கவரி எனது அருகில் வந்து நின்றது.உள்ளேயிருந்து வயர்லஸ் வாத்தியம் ஏதோ முகத்துக்குப் பக்கத்தில் வைத்து "Where are you going man? என்று பீட்டரில் கேட்டான்.

என்கிட்ட இருந்த இகலப்பையை அழுத்தி கோளங்களையெல்லாம் சும்மா சுற்றிப்பார்க்கலாமென நமிதாவுடன் வந்தேன் என்றேன்."what are you saying man?which part of the cosmos you are?" என்று டிஸ்கவரியின் டேஷ்போர்டில் இரண்டொரு பட்டனைத் தட்டினான்."Google analysis says that you must be somewhere on the earth,southern part of India" என்று ஜோசியம் சொன்னான்.

எனக்கு ஒரே ஆச்சரியம்! உனக்கெப்படி தெரியும் என்று கேட்க மீண்டும் " This is very simple buddy! There are more than 3 million google search for the word "namitha " from the southern part of India" என்று பச்சைக்கலர் எழுத்துக்கள் கண்சிமிட்டுவதைக் காட்டினான்.

சரி வண்டியில ஏறிக்கோ என்று டிஸ்க் பைலட் சொன்னான்.டிஸ்கவரி உள்ளே போனதும் குறுக்கே நெடுக்கே இரண்டு மூன்று பேர் அந்தரத்துல நகர்ந்து கொண்டிருந்தார்கள்.அதில் ஒருஅம்மணியும் ஹலோ என்று ஒற்றைக் கண்ணில் "விங்" குடன் " Hi I am maria! " This is neil junior,Mike,peter,john என்று அனைவரையும் அறிமுகம்படுத்தினாள்.என் பெயர் ராஜ நடராஜன் என்று என்னை அறிமுகப் படுத்தினேன்." Very hard to pronounce man! I will simply call u nat" என்றாள். எனக்கு அப்பொழுதுதான் மின்னலாய் மண்டைக்குள் இப்படித்தான் மாரியம்மாங்கிற பெயர் நாள்வழக்கில் மரியா என்று குறுகி உச்சரிப்பில் மேரி என்றும் மரி என்றும் ஆகி விட்டதோ என நினைத்துக் கொண்டு கண்ணாடியின் வெளியே நோக்கிவிட்டு காக்பிட் திரையில் நோக்கினால் தூரம் 10 மில்லியன் கிமீ காட்டியது.
10 Million km (Part of the Earth’s Orbit in blue)

டிஸ்கவரியை ஒரு நோட்டம் விட்டு விட்டு மீண்டும் திரையை நோக்கினால் வீனஸ் ,பூமி சஞ்சரிக்கும் வரைபடம் திரையில் தெரிந்தது.
100 million km Orbits of: Venus and Earth...
இப்பொழுது திரை வேகம் 1 பில்லியன் கி.மீ என்றது. அட நம்மூர் கிரகங்களைத்தான் மெர்க்குரி,வீனஸ்,மார்ஸ்,ஜீபிடர்ன்னு பேர் மாத்திகிட்டாங்கன்னு மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்

1 billion km Orbits of: Mercury,Venus, Earth,Mars and Jupiter.
பீட்டரும்,மைக்கேலும் வண்டிய ஓட்டிகிட்டு இருந்ததால் என்னிடம் அதிகம் பேசவில்லை.எனவே அரட்டையை நீலுடனும் மரியுடனும் ஆரம்பித்தேன்.

Me: Neil !Do you know this maths

jumping distances by factor of 10.
Start with 100 equivalent to 1 meter, and increasing sizes by
factor of 10s ,or 101 (10 meters), 102 (10x10 = 100 meters, 103
(10x10x10 = 1.000 meters), 104 (10x10x10x10 = 10.000 meters),
so on, until the limit of our inmagination in direction to the
macro-cosmos.

இதைச் சொல்லிவிட்டு திரையைப் பார்த்தால் வேகம் 10 பில்லியன் காட்டியது.

10 billion km (At this height of our trip, we could observe the Solar System and the orbits of the planets)
Neil: We are travelling based on that formula only man!
Maria! make nat comportable and explain time to time of the distance we are speeding" என்று தனது வேலையில் மூழ்கிவிட்டான். மரியும் எனக்கு தூக்கம் வருது.வேகத்தை ஆட்டோ மோடில் போடுகிறன் நீயே பார்த்துக் கொண்டு வா!சந்தேகம் இருந்தால் அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு அடுத்த அறைக்குப் பறந்து விட்டாள்.நான் மட்டும் தூரங்களை திரையில் கவனித்துக் கொண்டே வந்தேன்.திரை வேகத்துடன் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துக் கொண்டே வந்தது.
100 Billion km (The Solar System starts looking small...)
1 trillion km: (The Sun now is a small star in the middle of thousands of stars)
1 light-year: ( At one light-year the little Sun star is very small )
10 light-years : (Here we will see nothing in the infinity....)
100 light-years: “Nothing” Only stars and Nebulae..
1,000 light-years : (At this distance we started travelling the Milky Way, our galaxy.)
10,000 light-years :( We continued our travel inside the Milky Way.)
100,000 light-years : (We started reaching the periphery of the Milky Way)

1 million light-years : (At this tremendous distance we could see all the Milky Way & other Galaxies too...)

நீண்ட பயணத்தில் திடீரென்று ஒரு பழைய நினைப்பு தோன்றியது.கோயம்புத்தூரில் சிதம்பரம் பூங்கா படிப்பகத்தில் கலைக்கதிர் பத்திரிகை நியுட்ரான்,புரோட்டன்னு நிறைய கற்றுக்கொடுக்க முயற்சி செய்தது.அப்பவெல்லாம்,குமுதம்,விகடன் துணுக்குன்னு படிச்சிகிட்டு இப்ப புரிந்தும் புரியாமலும் பயணிக்க வேண்டியுள்ளதேன்னு நினைத்துக் கொண்டு திரும்பிப் பார்த்தால் டிஸ்கவரி டிரைவர்கள் தூக்கத்தின் மயக்கத்தில்.டிஸ்கவரி அதுபாட்டுக்கு தானியங்கி நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நானும் கொஞ்சம் குரட்டை விடலாமே என்று முடிவு செய்து.....

Wednesday, December 10, 2008

கோளங்களின் புள்ளிகளில்-பகுதி 1

முன் டிஸ்கி: கனவுல தூக்கத்தில் எழுதியது.கோ(ர்)வையா இல்லைன்னு யாரும் தயவு செய்து கமெண்ட வேண்டாம்.இந்தப் பதிவிற்கு "கணக்கு வாத்தியாரும் நமிதாவும் கனவுல"ன்னுதான் தலைப்பு வந்தது.சரி நாம்தான் ஹிட் கணக்க கண்டுக்காத ஆளாச்சேன்னு சீரியசான!!! ஒரு விசயத்தைச் சொல்லும் போது தலைப்பும் அண்டங்களைப் பற்றியிருக்கட்டுமேன்னு தலைப்பு மேலே உள்ளபடி.மேலும் படங்கள் எப்படி உல்டா செய்யப்படுகின்றன எனத் தெரிந்து கொள்ள வேண்டியும் இது ஒரு பரிசோதனைப் பதிவு.

இனி.....

நல்ல தூக்கம்.யார் யார் கனவிலோ யார் யாரெல்லாமோ வர்றாங்க.பழமைவாதி கூட காளமேகப் புலவர் வருவதாக சொல்கிறார்.ஒரு அரிஸ்டாடில்,ஒரு சாக்ரடிஸ் இல்லைன்னா நம்ம தாத்தா காந்தி அல்லது பக்கத்து ஊட்டு பெரியாராவது வந்து ஏதாவது சொன்னா நல்லாயிருக்கும்ன்னு மனசுல தோணுது.ஆனால் வந்தது கனவில் எட்டாம் வகுப்புக் கணக்கு வாத்தியார் சுந்தரம் வாத்தி.இப்பத்தான் வாத்திங்கிற மரியாதையெல்லாம்.அப்பவெல்லாம் அந்த நீண்ட கைகளைப் பார்த்தால் எப்ப யாரைக் கேள்வி கேட்பார் யார் கன்னம் பழுக்குமென்றே தெரியாமல் வகுப்பில் பம்மிகிட்டு கிடப்போம்.முன்னால் பெஞ்சுக்காரன் தலைக்குப் பின்னால் ஒளிந்து கொள்வவதெல்லாம் ஒரு கலை.இல்லைன்னா அம்மணிக முன்னால் அறை வாங்குவது யாரு?கணக்கு வாத்தியாருக்கும் கன்னத்துக்கும்,கைக்கும் பிரம்புக்கும் அப்படி என்ன பந்தமோ தெரியவில்லை. கணக்கு பற்றி நினைத்தாலே பிரம்பும் அந்த நீண்ட கைகளும்தான் நினைவுக்கு வருகிறது.

நம்ம கதைதான் இப்படியென்று நினைத்தால் ஊர் ஊருக்கு நமக்கு கூட்டாளிகள் இருப்பது பதிவுப் பக்கம் வந்த பிறகுதான் தெரிந்து ரொம்ப சந்தோசப் பட்டேன்:) ஆங்!என்ன சொல்லிகிட்டிருந்தேன்!கணக்கு வாத்தியார் கனவுல வந்தாரா! " வயசுக்கெல்லாம் வந்து என்ன என்னவோ ஆயுடிச்சுங்க சார்ன்னு சொன்னதும்" அப்ப உனக்கு விவரம் அதிகம் வந்திருச்சுன்னு சொல்லு!அப்ப ஆங்கிலத்தில் ஒரு கணக்குப் போடு என்றார்.தமிழிலேயே கணக்கு சுத்தம்!இதுல ஆங்கிலத்தில கணக்குப் போடுன்னு இப்படி பரிட்சை வினாக்களை கொடுத்தால் கணக்குப் போட்ட மாதிரிதான்.

பீட்டர்,பீட்டர்ன்னு ஒரு அமெரிக்கா பையன் ஒருத்தன் இருந்தான். இந்த ஊருக்கு வந்த புதிதில் ஒரு பெப்சி ரூ 10 ஒரு பண்ணு ரூ 5 ஒரு வெனிலா ரூ20ன்னு ஆக மொத்தம் ரூ35ன்னு நான் மனதில் கணக்குப் போட்டு முடிக்கவும், நம்ம பீட்டர் கால்குலேட்டரை கையில் வைத்துக் கொண்டு அலம்பல் செய்து கொண்டிருந்தான்.அப்புறம் ஜப்பான் கால்குலேட்டர் நல்லாயிருக்குன்னு வாங்கியதும் இருந்த மனக்கணக்கும் மறந்து போய் பீட்டர் வந்து ஒட்டிக்கொண்டான்.இதுவாவது பரவாயில்லை அப்பவெல்லாம் தேவையான முக்கியமான தொலைபேசி எண்கள் அத்தனையும் தொலைகாட்சி விளம்பர வேகத்தில் கண்முன்னே நிற்கும்.தற்நாட்களில் எல்லா எண்களையும் செல்போனில் ஒளிச்சு வச்சதும் இப்ப பட்டனை அமுக்குனால் மட்டுமே எண்கள் தெரியும் அவல நிலைக்கு வந்து விட்டேன்.இன்னும் சொல்லப் போனால் எனது செல்போன் எண் தவிர எந்த எண்ணுக்கும் செல்போனைத் தடவினால்தான் ஆச்சு.

இப்படிப் பட்ட நிலையில் இப்படியொரு ஆங்கிலக் கணக்கு.(கனவு எங்கிருந்து எங்கெல்லாம் தாவுது பாருங்க)சுந்தரம் வாத்தியார் மறுபடியும் கனவுத்திரையக் களைச்சிட்டு திரும்ப வந்து ஆங்கிலக் கணக்குக்கு விடை கேட்டார். சரி நாம்தான் மக்கு....

வகுப்புக்கு சில கணக்குப் புலிகள் இருப்பது போல் பதிவுகளிலும் சில கணக்கு கொக்குகள் இருக்கும் என்கின்ற நம்பிக்கையில் இவங்ககிட்ட விடைத்தாள் காட்டினா என்னன்னு ஒரு போதிமர நினைப்புடன் விடைத்தாள் இங்கே.

This is a trip at high speed,
jumping distances by factor of 10.
Start with 100 equivalent to 1 meter, and increasing sizes by
factor of 10s ,or 101 (10 meters), 102 (10x10 = 100 meters, 103
(10x10x10 = 1.000 meters), 104 (10x10x10x10 = 10.000 meters),
so on, until the limit of our inmagination in direction to the
macro-cosmos.

விடை தெரியவில்லையென்றாலும் கணக்கின் படிகளை எழுதினால் சில கணக்கிகள்(கணக்கு வாத்திக்கு மறுபெயர்) மார்க் தருவதால் தெரிந்ததை உளறி வைத்தேன்.

"இது 10 ஆல் பெருக்கும் தூரத்தைக் கடக்கும் ஒரு மிக வேகமான பயணம்.
அதாவது 10 x 10 = 100 மீட்டர்
10 x 10 x 10 = 1000 மீட்டர்
10 x 10 x 10 x 10 = 10000 மீட்டர்
இப்படியே நமது கற்பனைக்கு எட்டியவரை எண்களைப் பெருக்கிக் கொண்டே போனால் என்னவாகும் என்பதனை பிலிம் காட்டும் பயணம் இது" அப்படின்னு சொல்றதுக்குள்ளே வாத்தியார் ஆளைக் காணோம்.

அப்புறம் அரைக்கண் மெல்லத் திறந்தது.அரைத்தூக்கத்தில் அலுவலகத்தில்தான் தூக்க சுகம்ன்னு உறுதிப்படுத்திகிட்டு கண்கள் மீண்டும் சந்தோசமாக மூடிக்கொண்டன.கண்கள் மூடிய சில கணங்களில் இன்னொரு கனவு.



ஒரு அரேபியன் குதிரை மாடர்ன் ஆர்ட்களில் வரும் இறக்கைகள் இல்லாமல் நிஜமான அதன் அழகில் நின்று கொண்டிருந்தது.சரி சும்மா தானே தூங்குகிறாய் என்கூட ஒரு ரவுண்டு வர்றது என்று அரபி மொழியில் கேட்டது.சரின்னு சொன்னதும் எங்கே போகிறோம் என்றதற்கு உங்கள் வீட்டுக் கொல்லப் புறத்து தோட்டத்திலிருந்துதான் பயணம் ஆரம்பம் என்றது. எங்கே போகிறோம் என்பதை பயணத்தில் நீயே தெரிந்து கொள்வாய் என்றது.

கற்பனைக் குதிரை ஜம்முன்னு உட்கார்ந்துகிட்டு நல்லா கடிவாளத்தை மட்டும் இறுக்கப் பிடிச்சுக்க.மற்றதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்றது.குதிரையை அன்பா கழுத்துப் பக்கம் ஒரு தட்டு தட்டுனா ஒரு 100 மீட்டர் மேலே வானத்தை நோக்கிப் பறந்தது. கீழே பார்த்தால் எங்க வீட்டுத் தோட்டம்.


இனி குதிரை ஆட்டோ மோடுல அதுபாட்டுக்கு மேலே சொன்ன கணக்குல பறக்க ஆரம்பித்தது.நான் அடிக்கடி பூலோகத்திலிருந்து எவ்வளவு தூரம் வந்து விட்டோம்ன்னு விமானத்தின் கண்ணாடி சீட்டுலருந்து பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டே வந்தேன்.விமானம்ன்னு நினைப்பு வந்ததும் நல்லவேளை இந்தக் குதிரை "அதுசரி" அண்ணன் பதிவில் வருகிற வேதாளம் மாதிரி விக்கிரமாதித்தன் கிட்ட டெக்கீலாவெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யலை.அரேபியன் குதிரைங்கிறதால சும்மா கொள்ளும்,வெல்லமும்,கொல்லுத்தண்ணியும் வயிறு நிறைய இப்பத்தான் சாப்பிட்டு விட்டு வந்தேன் என்றது.(இல்லாத ஊருக்கு டெக்கீலாவும் கசக்கும்!ன்னு குதிரை முணு முணுப்பது மெல்ல என் காதில் கேட்டது:))வேதாளம் பின்னால போனா அது பாட்டுக்கு கதை சொல்ல ஆரம்பிக்கும்ன்னு நினைச்சு குதிரைய இன்னொரு முறை அன்பா ஒரு தட்டு தட்டினேன்.



கீழே பார்த்தால் குதிரை தோட்டத்தின் மொத்தப் பரப்பளவு கண்ணால அளக்கும் தூரத்துக்கு வந்திடிச்சு

இனி இப்படி ஊர்க்கதையெல்லாம் பேசிட்டு மீட்டர் கணக்கில பயணம் செய்தால் வேலைக்காவது.அதனால் குதிரையை கிலோ மீட்டர் மோடுக்கு மாத்தியாச்சு.கிலோ மீட்டர் கணக்குன்னா குதிரையிலிருந்து தாவி பாராசூட்டுல குதிக்கிற தூரத்துக்கு வந்தாச்சு.

இப்ப குதிரை இலை தாண்டி,வீடு தாண்டி,கட்டிடங்கள் கண்ணுக்குத் தெரியும் தூரத்துக்கு வந்திடுச்சு.யோவ் என்னய்யா நினச்சிகிட்டு இருக்கிறே!அஞ்சு நிமிசத்துக்கு ஒரு முறை குதிரை,குதிரைன்னு மரியாதையில்லாம!ஒழுங்காப் பேர் சொல்லி கூப்பிடுன்னு சொன்னது.சரி நீ அரபிக்குதிரை மாதிரி இருக்கிறாய் என்று மனோராமா ஆச்சியே உன்னோடு ஒப்பிட்ட காரணத்தால் இனிமேல் உன்பெயர் நமிதான்னே அழைக்கப்படுவாயாக என தாஜா பண்ணி குதிரைய சீ.... நமிதாவைக் கன்னத்தில் கிள்ளினால் வெட்கப் பட்டுக்கொண்டு மேலும் பல ஆயிரம் கிலோ மீட்டர் பறந்தது.

இப்ப இந்த தூரத்தில் பார்த்தால் வீடெல்லாம் மறைந்து ஏதோ ஒரு நகரம் மட்டும் கண்ணில் தெரியுது.நமீதாக் கண்ணு!இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயேன்!

இதென்ன புல்லு புல்லா தெரியுதுன்னு நமிதாகிட்டக் கேட்டா அது சொல்லுது" மச்சா!இது புளோரிடா மாகாணம்"

சரி!சரி!இந்த ஊரெல்லாம் உன் புண்ணியத்துல பார்த்தாச்சு.மேலே கிளம்புன்னு சொன்னதும் இன்னும் 10 மடங்கு வேகத்தில் நமிதா.

இப்ப நமிதா சொன்னது" இந்த தூரத்திலதான் சேட்டிலைட்ல இருந்தெல்லாம் சினிமாப் படம் காட்டுறாங்க,அரசியல்வாதிகளைப் பேட்டி எடுத்து அனுப்புறாங்க அப்படின்னு தொலைகாட்சிக் காரங்களோட ரவுசெல்லாம் இந்த தூரத்திலிருந்துதான் ஆரம்பம்ன்னு சொல்லிச்சு.சரி!சரி இதெல்லாம் உனக்கு மட்டும்தான் தெரியுமுன்னு சும்மா பீத்திக்காம வேகத்தைக் கூட்டுன்னு சொன்னதும் நமீதா போன அடுத்த தூரம் எனக்குப் பிரமிப்பைத் தந்தது.

அடேயப்பா!கண்டம் விட்டு கண்டம் வந்து இப்ப பூமிப் பந்தே கண்ணுக்குத் தெரியுதேன்னு எனக்கு ஒரே வியப்பு.சரி!உன்னோட வேகத்தை இன்னும் 10 மடங்கு கூட்டு என்றேன்.

நமிதாவின் அயராத வேகத்தின் தூரத்தில் இப்ப பூமிப் பந்து ஒரு கால் பந்து அளவிற்கு வந்து விட்டது. அதனைச் சுற்றியும் புள்ளி புள்ளியாக என்னனென்னமோ கிரகங்கள்.அதென்ன பூமியச் சுற்றி எவெனோ அரண் அமைத்து விட்டானே என்று கேட்டதற்கு "ஓ!அதுவா அது சந்திரன் ஊரைச்சுற்றும் வழி என்றது நமிதா

அடேயப்பா!இம்புட்டு தூரத்திலேயா சந்திரன் பூமியைச் சுற்றி வலம் வருதுன்னு நான் வாய் பொளக்க இதுக்கே இப்படி வாயப் பொளக்கிறயெ மச்சா இன்னும் போக வேண்டிய தூரம் சிந்துபாத் கதை மாதிரி எவ்வளவு இருக்குன்னு நமிதா சொன்னதும் அப்ப கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு பயணத்தை தொடங்கலாமென்றேன்.

பின் டிஸ்கி: தூக்கமும் அரேபியன் குதிரை மட்டும்தான் நம்முடைய சரக்கு.POWER OF 10 கணக்கு வாத்தியாரும் படங்களின் நாயகர்களும் யாரென்று தெரியவில்லை.இருந்தாலும் இங்கே நன்றியை முதலில் தெரிவித்து விட்டு பதிவுகளின் பகுதிகள் இறுதியிலும் பட உரிமையாளர்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

Friday, November 28, 2008

பம்பாய் தீவிரவாதத்தின் மூலக்கூறுகள்


நிர்வாகம் கற்றுக்கொள்ள ஒரு சிறந்த இடம் பம்பாய் தாஜ்மகால்.கூடவே கொஞ்சம் இறுக்க முகம் கொண்ட சிறந்த நிர்வாகத்துடன் செயல்படுவதற்குரிய இடம் ஓபராய் என்றே இன்றும் அழைக்கப்படும் டிரைடண்ட்.இரண்டுமே உழைப்பு,உயர்வுக்கான அடையாளச் சின்னங்கள்.பல பிரபலங்களும்,திறமைகளும் கால்பதிந்த இடத்தில் தீவிரவாதம் என்ற ஓநாய்கள் புகுந்துவிட்டது வருத்தமும் கண்டனத்துக்குரிய விசயங்கள்.

கூடவே யூதர்களின் கூட்டு வாழ்க்கை கட்டிடம்,காலனி எச்சத்தில் மிஞ்சிப்போன ரயில் நிலையம் என மனித,இந்திய அடையாளங்களின் மீது தீவிரவாதத் தாக்குதல் மீண்டும் ஒரு முறை திட்டமிட்டு செயல்படுத்தப் பட்டுவிட்டது.எப்பவோ விதைத்த விதைகள் இப்பொழுது அறுவடைக்கு வந்துள்ளன.நேற்றும்,இன்றும் இனி நாளையும் தீவிரவாதக் காட்டில் முப்போகம்தான்.இவற்றிற்கான பணம்,பொருள்,இயக்கம் அனைத்தும் மதம் என்ற போதையில் பரவலாகப் பல திசைகளிலிருந்தும் வீசப் படுகின்றது.கூடவே இந்தியாவின் வளர்ச்சிப் பக்கத்து வீட்டுப் பாகிஸ்தானின் ஒரு பிரிவுக்கு கோபத்தை உண்டாக்கவே செய்கிறது.நண்டுக்கதை தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமல்ல!அதில் இந்திய பாகிஸ்தானும் பங்குதாரர்கள்.

தீவிர வாதத்திற்கெதிரான யுத்தம் என்பது அமெரிக்காவின் சில குறுகிய நலன்களைச் சார்ந்தும்,பாகிஸ்தானை நட்பு படுத்தும் நோக்கிலும் ஆப்கானிஸ்தான் மீது தொடுக்கப்பட்டது.ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் விதைகள் பாகிஸ்தானில் தீவிரவாத இயக்கங்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறதென்று தெரிந்தும் அந்நாட்டுடன் ந்ட்புக் கரம் நீட்டி துவக்கிய வெளிநாட்டுக் கொள்கை சறுக்கல் எனவே சொல்லலாம்.கூடவே ஈராக் யுத்தமும்.ஈராக் யுத்தத்தின் பலனாக பாதுகாப்பு உடன்படிக்கையை அமெரிக்காவும்,ஈராக்கும் கைச் சாத்திட்டதும்,சதாமை அப்புறப்படுத்தியதும் மட்டுமே அமெரிக்காவின் சாதனையெனக் கொள்ளலாம்.

மனித உரிமைகள் மறுக்கப்பட்டும்,மதவாதங்கள் தலையெடுப்பதும்,ஈரானை ஓரங்கட்டி பகைமை கொள்வதும் மத்திய கிழக்கு நாடுகளை எதிர்காலத்தில் மீண்டும் ஒரு யுத்தக் களத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் கொண்டதாகவே உள்ளது.ஒன்றுக்கொன்று தொடர்புகள் கொண்ட வறுமை,மனித முன்னேற்றம்,மதவாதம்,மனித உரிமை மறுப்புக்கள் முட்டி மோதிக் கொள்ளும் நேரத்தில் பிறப்பது தீவிரவாதம்.இதில் மனித நேயங்களை மறக்கச் செய்வதில் முக்கிய பங்கு மதவாதம்.டேராப் போட்டு நடத்திய மத வருட ஆண்டு விழாக்களில் ஊறித்திளைத்தவர்களையும்,உலகம் நோக்கும் பார்வைகளில் ஆர்வமற்று மதம் மட்டுமே என்ற முக்காடு போட்டுக் கொள்ளும் கல்வியிலும் ஊன்றி வளர்ந்தவை தீவிரவாதம்.

கூடப் பணி புரியும் பம்பாய் கிராமப் புறச் சூழலுடன் வாழ்ந்த இந்திய நண்பன் கூட காகிதங்கள்,கணினி,தொழுகையென்ற எல்லைகளைத் தாண்டி செல்வதில்லை.இந்த மாதிரி அப்பாவித்தனங்களும் அறியாமையும் எந்த தொந்தரவு எல்லையையும் தாண்டுவதில்லை.ஆனாலும் நகைச்சுவைக்காக அந்த நல்ல மனிதனுக்கு குத்தப் பட்ட முத்திரை டெரரிஸ்ட்.ஆனால் சூழ்நிலைகளும்,மனமாற்றம் செய்வதற்கான தகுதிகளும் கிடைத்த இளைஞனை நினைத்துப் பாருங்கள்.அப்படியான மனித நேயமிழந்த மனிதர்களின் முகங்களே தொலைகாட்சிகளில் பம்பாய் நிகழ்வில் துப்பாக்கியுடன் பொதுமனிதர்களை தாக்கிய சம்பவங்கள்.

தலிபான்கள் உச்சக் கட்ட தர்பார் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் நமது இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திய கால கட்டங்களில், நடந்துகொண்டிருந்த என்னை இந்தியர் ஒருவர் வழிமறித்து இந்தியில் அளவளாவ ஆரம்பித்தார்.பொதுவான தேச நலன்கள் விசாரித்து விட்டு நேரடியாக விசயம் மதம் பற்றி திரும்பியது.பேச்சின் இடையில் நான் தமிழகத்தைச் சேர்ந்தவன் என்பது அறிந்ததும் உரையாடல் தானும் தமிழ்நாடு என்ற மீள் அறிமுகத்துடன் தமிழுக்கு தாவியது.இந்த உரையாடலில் குறிப்பிடப்பட வேண்டிய “என்ன கொடுமை சரவணா” விற்கான வசனம் என்னவென்றால் இந்த நவீன யுக மனித முன்னேற்றங்கள் எதற்கு?தொலைப் பேசி எதற்கு,விமானங்கள் எதற்கு என்று இந்தியாவிலிருந்து விமானம் ஏறிவந்த நண்பர் கூறவும் பிய்த்துக் கொண்டு வந்த எரிச்சலில் “நீங்கள் இன்னொரு உலகத்தில் வாழுகிறீர்கள்” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தேன்.

இந்த நிகழ்வுக்குப் பின் வந்த காலத்தில் இரட்டைக் கோபுர விமானத் தாக்குதல்.இதற்குப் பின் தீவிரவாதம் லண்டன் பயணம் செய்து மீண்டும் ஆப்கானிஸ்தானத்திற்குள்ளும்,பாகிஸ்தானுக்குள்ளும் போய் அடைக்கலம் புகுந்து விட்டது.

போர்முனைக் கருவிகள் பொருளாதார ரீதியான வியாபாரமாகிப் போய் விட்ட நிலையிலும்,இந்த வியாபாரம் கணக்கில் வராதப் பணமாக ஹவாலா என்ற கறுப்புப் பணம் புதிய முகத்துடன் சில வங்கி அதிகாரப் பெயரில் சுற்றுக்கு விடப் படுகிறது.இன்று ஒரு பதிவில் சுற்றுக்கு விடப்பட்ட எஸ்.பி.ஐ ,வி.ஐ.பி ஒலிப்பதிவின் நகைச்சுவையளவுக்கு நமது வங்கிக் கணக்குகள் முன்னேறும் போதும்,வெளிநாட்டு வாழ் இந்தியப் பணம் சரியான சேனல்களாக வங்கிப் பதிவு பெற்று இந்தியா அடைந்தாலும் பக்கத்து வீட்டு பாகிஸ்தான் கொடுக்கல் வாங்கல்கள் அரசு கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு கைமாற்றம் செய்யப்படுகிறது. எந்த மிதவாதமான பாகிஸ்தான் அரசும் தலைதூக்கும் தீவிரவாத அமைப்புக்களை ஓரளவுக்கு அனுசரித்துப் போகும்படியான சூழலில்தான் இயங்க முடியும் எனும்படியான மதம் என்ற உணர்வுபூர்வமான விசயம் அரசியலில் களம் காண்கிறது.

இனி நம்மூர் அரசியலுக்கு வந்தோமென்றால் என்று ரதயாத்திரை,மசூதி இடிப்பு என்ற மதம் தலைக்குள் பூந்து கொண்டதோ அன்றே சோம்பேறி கழுதைக்கு சறுக்கினதே சாக்கு எனும்படி ஊற்றி வளர்த்த தீவிரவாதத்தை இந்தியாவுக்குள் நுழைப்பதற்கு ஏதுவாகிப் போனது.மதங்கள் செத்துப் போய்விட்டன.உண்மையான ஈகையும்,தொழுகையும் இஸ்லாத்தின் மூலக்கூறு என்ற அழகை புறம் தள்ளிவிட்டு ஜிஹாத்,ஜிஹாதி,ஜமாத் என்ற வார்த்தைகள் வேரூன்றி விட்டன.இன்றும் கோயில்களில் அழகும்,கலையுணர்வும் வேரூன்றி இருந்தாலும் அதனையும் தாண்டி காவித்துணிகளும்,துறவித்தனமும் இழந்து இந்து தீவிரவாதம் தலைதூக்குகிறது.அனைத்தையும் துற என்ற புத்தனின் கோட்பாடுகள் மறந்து புத்தபிட்சுகளும்,கூடவே இலங்கை அரசும் ஒரு இனத்தை அழிக்கும் அநியாயத்தைச் செய்கிறது.இரண்டாம் தரக் குடிமகனாக வாழ்வதற்கு தயாரென்றால் உனக்கு கிழக்கு திசையை தாரை வார்க்கிறேன் என்ற பேரத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி நல்லபடியாகவே செயல்படுகிறது.இனி புத்தம் சரணம் கட்சாமியல்ல....யுத்தம் சரணம் பிட்சுக்களே! இந்த எல்லைகளைக் கடந்து மனித நேயம் ஓங்கட்டும் என நினைத்து பகுத்தறிவு தளைக்கட்டுமென்று பார்த்தால் நாத்திகமும் பார்ப்பனன் என்ற மனித துவேசத்தில் மூழ்கி விடுகிறது.

பி.ஜே.பி காலத்து பாராளுமன்ற முற்றுகை,தற்போதைய காங்கிரசின் பம்பாய் தீவிரவாதம் இரண்டுமே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தீவிரவாதிகளின் கை ஓங்கியிருப்பதையும் நினைத்த நேரத்தில் தங்கள் பலத்தைக் காட்ட இயலும் என்பதனை நிருபித்துள்ளார்கள்.

இந்த நேரத்தில் ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் , அஷோக் காம்தே என்ற உண்மைக் கதாநாயகர்களுக்கும் ஏனைய காவல்துறையிலும், மற்ற இறந்த பொதுமனிதர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்.

ஐயா!ஊடகத்துறை சேர்ந்த மற்றும் சினிமாத்துறை சார்ந்த பொதுநலன் துறை சார்ந்தவர்களே தயவு செய்து எதிர்க் கதாநாயகர்களை ஊக்கப்படுத்தாதீர்கள்.நம்மிடையே அன்றாட வாழ்வில் ஏகப்பட்ட கதாநாயகர்கள் உலாவருகிறார்கள்.அவர்களை கவுரப் படுத்துங்கள்.யாரும் ரத்தமும்,தீவிரவாதங்களை மிகைப் படுத்திச் சொல்லி படம் எடுக்கச் சொல்வதில்லை.நீங்கள் எதனைப் பரிமாறுகிறீர்களோ அதனையே சம்தாயம் உள்வாங்கிக் கொள்கிறது.நாளை பம்பாய் நிகழ்வினைப் படம் எடுக்க விரும்பினால் கூட ஹேமந்த் கர்காரே, விஜய் சலாஸ்கர் , அஷோக் காம்தே என்ற கதாநாயகர்களை முன்னிலைப் படுத்துங்கள்.முகங்களிலேயே தீவிரவாதம் காட்டும் பொறுக்கிகளை கண்ணாடியின் மூலையில் நிறுத்துங்கள்.

அரசாங்கத்துக்கும் அப்பாற்ப்பட்ட விழிப்புணர்வும்,தேசம்,மனிதம் நேசிக்காத மனிதர்கள் உங்கள் பக்கத்து வீட்டிலேயே சிரித்துக் கொண்டு நம்மிடையே உலா வரலாம்.இதெல்லாம் அடையாளம் காண நமக்கு ஏகப்பட்ட சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.நமக்கேன் வம்பென்ற மனோபாவம் போகட்டும்.உதவிக்கு வரும் குடிமகனை மரியாதை செலுத்த போலிஸ் துறையும் கற்றுக் கொள்ளுங்கள்.உங்களின் சேவை மகத்தான பாராட்டுக்குரியதாக இருந்தாலும்,கையூட்டு,தேச நலனுக்கு பணம் என்ற ஒரே காரணத்துக்காக சோரம் போவதை நிறுத்துங்கள்.போலிஸ்துறை மேம்படுத்தப் பட்டும்,தனது அளவிற்கதிகமான அதிகாரத்தை கவுரவப் படுத்தினாலே பிரச்சினைகளின் தீவிரவாதத்தின் ஒரு கோடியைப் பிடித்து விடலாம்.அதனையும் அடுத்து அரசாங்கப் பொதுத்துறை.அரசாங்க ஊழியம் என்பது எவ்வளவு கவுரமானது?கையூட்டும்,குறுகிய கால அரசியல்வாதிக்கு தவறான வழியில் துணை போவதை தடுத்தாலே அரசியல்வாதிகள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்.பீரோகிராட்டிக்குகள் மட்டுமே தேச நலனுக்குப் பொறுப்பானவர்கள்.ஆழத்தோண்டினால் அவர்களின் சாணக்கியத்தனமே அரசியல்வாதிக்கு தவறான வழிகளுக்குத் துணை புரிகிறது.அரசியல்வாதிகள் வெறும் ஆட்டுவிப்பவர்களே.

இவற்றையெல்லாம் கடந்து புதிய உலகம் ஒருநாள் தோன்றட்டும் என நானும் கனவு காண்கிறேன்..அப்பொழுது மனித இனத்தின் அவலங்களை,அசிங்கங்களைப் புறம் தள்ளி விட்டு மனித நேயம் மட்டுமே ஆளுமை செய்யும் காலம் வரட்டும்.வரும் காலத்தின் மாறுதல்களில் புதிய மனித சிந்தனைகள் பிறக்கட்டும்.

Monday, November 10, 2008

ஆந்திரா கிராமத்திலிருந்து கூகுள் வரை.


இந்த சாதனையாளரின் படம் நணபர் ராம்பாபு என்பவர் மூலமாக தனிமடலில் வந்தது.நானெல்லாம் ஐ.ஐ.டி நீச்சல் குளத்தில் நீந்தி குட்டிக்கரணம் போட்டதோடு சரி. மற்றபடி ஐ.ஐ.டி விழாக்கள் பற்றி கொஞ்சம் வாசனை உண்டு.நண்பர் சதாவின் மூத்த சகோதரர் ஐ.ஐ.டி தங்கமெடல்காரர். அவ்வளவுதான் எனது ஐ.ஐ.டியின் பந்தம்.

இனி ஆங்கில மூலக் கதைக்கு:

'God has always been planning things for me'


Naga Naresh Karutura has just passed out of IIT Madras in Computer Science and has joined Google in Bangalore.

You may ask, what's so special about this 21-year-old when there are hundreds of students passing out from various IITs and joining big companies like Google?

Naresh is special. His parents are illiterate. He has no legs and moves around in his powered wheel chair. (In fact, when I could not locate his lab, he told me over the mobile phone, 'I will come and pick you up'. And in no time, he was there to guide me)

Ever smiling, optimistic and full of spirit; that is Naresh. He says, "God has always been planning things for me. That is why I feel I am lucky."

Read why Naresh feels he is lucky.

Childhood in a village
I spent the first seven years of my life in Teeparru, a small village in Andhra Pradesh, on the banks of the river Godavari. My father Prasad was a lorry driver and my mother Kumari, a house wife. Though they were illiterate, my parents instilled in me and my elder sister (Sirisha) the importance of studying.

Looking back, one thing that surprises me now is the way my father taught me when I was in the 1st and 2nd standards. My father would ask me questions from the text book, and I would answer them. At that time, I didn't know he could not read or write but to make me happy, he helped me in my studies!

Another memory that doesn't go away is the floods in the village and how I was carried on top of a buffalo by my uncle. I also remember plucking fruits from a tree that was full of thorns.

I used to be very naughty, running around and playing all the time with my friends. I used to get a lot of scolding for disturbing the elders who slept in the afternoon. The moment they started scolding, I would run away to the fields!

I also remember finishing my school work fast in class and sleeping on the teacher's lap!

January 11, 1993, the fateful day
On the January 11, 1993 when we had the sankranti holidays, my mother took my sister and me to a nearby village for a family function. From there we were to go with our grandmother to our native place. But my grandmother did not come there. As there were no buses that day, my mother took a lift in my father's friend's lorry. As there were many people in the lorry, he made me sit next to him, close to the door.

It was my fault; I fiddled with the door latch and it opened wide throwing me out. As I fell, my legs got cut by the iron rods protruding from the lorry. Nothing happened to me except scratches on my legs.

The accident had happened just in front of a big private hospital but they refused to treat me saying it was an accident case. Then a police constable who was passing by took us to a government hospital.

First I underwent an operation as my small intestine got twisted. The doctors also bandaged my legs. I was there for a week. When the doctors found that gangrene had developed and it had reached up to my knees, they asked my father to take me to a district hospital. There, the doctors scolded my parents a lot for neglecting the wounds and allowing the gangrene to develop. But what could my ignorant parents do?

In no time, both my legs were amputated up to the hips.

I remember waking up and asking my mother, where are my legs? I also remember that my mother cried when I asked the question. I was in the hospital for three months.

Life without legs
I don't think my life changed dramatically after I lost both my legs. Because all at home were doting on me, I was enjoying all the attention rather than pitying myself. I was happy that I got a lot of fruits and biscuits.

'I never wallowed in self-pity'



The day I reached my village, my house was flooded with curious people; all of them wanted to know how a boy without legs looked. But I was not bothered; I was happy to see so many of them coming to see me, especially my friends!

All my friends saw to it that I was part of all the games they played; they carried me everywhere.

God's hand
I believe in God. I believe in destiny. I feel he plans everything for you. If not for the accident, we would not have moved from the village to Tanuku, a town. There I joined a missionary school, and my father built a house next to the school. Till the tenth standard, I studied in that school.

If I had continued in Teeparu, I may not have studied after the 10th. I may have started working as a farmer or someone like that after my studies. I am sure God had other plans for me.

My sister, my friend
When the school was about to reopen, my parents moved from Teeparu to Tanuku, a town, and admitted both of us in a Missionary school. They decided to put my sister also in the same class though she is two years older. They thought she could take care of me if both of us were in the same class. My sister never complained.

She would be there for everything. Many of my friends used to tell me, you are so lucky to have such a loving sister. There are many who do not care for their siblings.

She carried me in the school for a few years and after a while, my friends took over the task. When I got the tricycle, my sister used to push me around in the school.

My life, I would say, was normal, as everyone treated me like a normal kid. I never wallowed in self-pity. I was a happy boy and competed with others to be on top and the others also looked at me as a competitor.

Inspiration
I was inspired by two people when in school; my Maths teacher Pramod Lal who encouraged me to participate in various local talent tests, and a brilliant boy called Chowdhary, who was my senior.

When I came to know that he had joined Gowtham Junior College to prepare for IIT-JEE, it became my dream too. I was school first in 10th scoring 542/600.

Because I topped in the state exams, Gowtham Junior College waived the fee for me. Pramod Sir's recommendation also helped. The fee was around Rs 50,000 per year, which my parents could never afford.

Moving to a residential school
Living in a residential school was a big change for me because till then my life centred around home and school and I had my parents and sister to take care of all my needs. It was the first time that I was interacting with society. It took one year for me to adjust to the new life.

There, my inspiration was a boy called K K S Bhaskar who was in the top 10 in IIT-JEE exams. He used to come to our school to encourage us. Though my parents didn't know anything about Gowtham Junior School or IIT, they always saw to it that I was encouraged in whatever I wanted to do. If the results were good, they would praise me to the skies and if bad, they would try to see something good in that. They did not want me to feel bad.

They are such wonderful supportive parents.

Life at IIT- Madras
Though my overall rank in the IIT-JEE was not that great (992), I was 4th in the physically handicapped category. So, I joined IIT, Madras to study Computer Science.

Here, my role model was Karthik who was also my senior in school. I looked up to him during my years at IIT- Madras.

He had asked for attached bathrooms for those with special needs before I came here itself. So, when I came here, the room had attached bath. He used to help me and guide me a lot when I was here.

I evolved as a person in these four years, both academically and personally. It has been a great experience studying here. The people I was interacting with were so brilliant that I felt privileged to sit along with them in the class. Just by speaking to my lab mates, I gained a lot.

'There are more good people in society than bad ones'




Words are inadequate to express my gratitude to Prof Pandurangan and all my lab mates; all were simply great. I was sent to Boston along with four others for our internship by Prof Pandurangan. It was a great experience.

Joining Google R&D
I did not want to pursue PhD as I wanted my parents to take rest now.

Morgan Stanley selected me first but I preferred Google because I wanted to work in pure computer science, algorithms and game theory.

I am lucky
Do you know why I say I am lucky?

I get help from total strangers without me asking for it. Once after my second year at IIT, I with some of my friends was travelling in a train for a conference. We met a kind gentleman called Sundar in the train, and he has been taking care of my hostel fees from then on.

I have to mention about Jaipur foot. I had Jaipur foot when I was in 3rd standard. After two years, I stopped using them. As I had almost no stems on my legs, it was very tough to tie them to the body. I found walking with Jaipur foot very, very slow. Sitting also was a problem. I found my tricycle faster because I am one guy who wants to do things faster.

One great thing about the hospital is, they don't think their role ends by just fixing the Jaipur foot; they arrange for livelihood for all. They asked me what help I needed from them. I told them at that time, if I got into an IIT, I needed financial help from them. So, from the day I joined IIT, Madras, my fees were taken care of by them. So, my education at the IIT was never a burden on my parents and they could take care of my sister's Nursing studies.

Surprise awaited me at IIT
After my first year, when I went home, two things happened here at the Institute without my knowledge.

I got a letter from my department that they had arranged a lift and ramps at the department for me. It also said that if I came a bit early and checked whether it met with my requirements, it would be good.

Second surprise was, the Dean, Prof Idichandy and the Students General Secretary, Prasad had located a place that sold powered wheel chairs. The cost was Rs 55,000. What they did was, they did not buy the wheel chair; they gave me the money so that the wheel chair belonged to me and not the institute.

My life changed after that. I felt free and independent.

That's why I say I am lucky. God has planned things for me and takes care of me at every step.

The world is full of good people
I also feel if you are motivated and show some initiative, people around you will always help you. I also feel there are more good people in society than bad ones. I want all those who read this to feel that if Naresh can achieve something in life, you can too