Followers

Thursday, February 18, 2010

வானம்பாடிக்கு எதிர் நாவல்

"கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுபோல தாவிற்றாம்" பாட்டு ஸ்வரம் எழுப்பி வானம்பாடிகள் இடுகையில் அயன்ராண்ட் பற்றி சொன்ன போது உள்ளே தூங்கிகிட்டு இருந்த ஷிட்னி ஷெல்டனுக்கு வான்கோழி கொக்கரக்கோ சொல்லிடுச்சு.

நசரேயன் குடுகுடுப்பையாருக்கு எதிர் கவுஜயெல்லாம் போடும் போது எதிர் நாவல் போட்டா இன்னா தப்பு:)

எனவே நமக்கெல்லாம் எதுக்கு அயன்ராண்ட்,ரோர்க்கு மாதிரியெல்லாம் ஆகவேண்டும் என்ற கெட்ட(!) எண்ணமெல்லாம்.ரோர்க் மாதிரி நம் கண் முன்னால இருந்தவனை விமர்சிக்க மட்டுமே நம்மால் இயலும்.

ஓசுல கிடைக்கிறது இல்லைன்னா அண்ணாசாலையில கூறுகட்டி விற்கிறத வாங்குறதுதான் நம்ம பொழப்பு.ஹிக்கின் பாதம்ஸ்,ஸ்பென்சர் எல்லாம் பெரிய பெரிய படிப்பாளிக,டாவு சமாச்சாரங்க.நமக்கு தூரத்து காதல் பார்வை(சைட்) தவிர அது சரிப்பட்டு வருவதில்லை.எனவே ஓசு ரசிப்போ இல்ல ரோட்டுல மேஞ்ச பின் மல்லாந்து படிக்க ஆரம்பித்ததோ The other side of midnight.
நாவல்,திரைப்படம்,தொலைக்காட்சி மெகா,நம்மூர் சினிமா காபின்னு சக்கை போடு போடும் கதை.

முழுக் கதை வேணூமா கதைச் சுருக்கம் வேணுமா?

முழுக்கதை வேண்டுமென்றாலும் கதை படிச்சே எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளவும் இங்கே

http://www.ammas.com/uploadedfiles/14690827979669_1467-the-other-side-of-midnight.pdf

சத்யராஜ் ஸ்டைலில் கதை கேட்பவர்களுக்கு மட்டும் சுருக்கம்:

இரண்டு கதாநாயகி,ஒரு கதாநாயகன் கதை.

நேரா ரெண்டு கையும் வச்சுகிட்டு பிலிம் பிடிக்கிற ஸ்டைலில் காமிரா இரண்டாம் உலக யுத்த பிரான்ஸ் நாட்டுக்கு போகுதுங்க சார்.அங்க நோயல் நோயல்னு (ஒரே நோயல்)ஒரு பிரான்சு பொண்ணுங்க.அப்படியே காமிராவ இந்தப் பக்கம் திருப்பினா லாரி டக்ளஸ்ன்னு ஒரு விமான பைலட்.ரெண்டு பேருக்கும் லவ்வாயிடுச்சு.அப்படியே பிரான்ஸ்ல ஒரு காதல் டூயட் பாடி அதுக்குள்ளேயே கசாமுசாவெல்லாம் ஆயிடுது.லாரி லோடு செய்துட்டு வந்து கல்யாணம் செய்துக்கிறேன்னுட்டு அமெரிக்கா போயிடறான்.போனவன் போனவன்தான் ஆள் அம்பேல்.இதனால் கோபமடைந்த நோயல் எப்படியாவது பணமும் புகழும் பெறவேண்டுமென்று நடிகையாகி விடுகிறாள்.சினிமாவில் புகழடைந்த பின் கான்ஸ்டாண்டின் டெமரிஸ் என்ற கிரேக்கப் பணக்காரனை கல்யாணம் செய்து கொள்கிறாள்.

காமிராவை ஒரு லாங்க் ஷாட்ல சிகாகோவுக்கு திருப்பறோம்.இங்கே காதரின் அலெக்ஸாண்டர்ன்னு ஒரு பெண்ணை லாரி டக்ளஸ் திருமணம் செய்து கொள்கிறான்.

இப்ப கதைல ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம்.

நோயல்,லாரி டக்ளஸ் சந்தர்ப்பவசத்தால் மீண்டும் சந்திக்கிறாங்க.எனவே லாரி டக்ளசை தனது விமான ஓட்டியாக நியமிக்கிறாள்.நோயலின் புதிய பணம்,நடிகை அந்தஸ்து போன்றவற்றை அறிந்த பின் பழைய நினைப்பு மீண்டும் மலர்கிறது.லாரி டக்ளஸ் காத்ரீனை விவாகரத்து செய்து விட்டு நோயலை மணம் முடிக்க விரும்புகிறான்.ஆனால் காத்ரீன் விவாகரத்துக்கு மறுப்பதால் நோயலும்,லாரியும் காத்ரீனை கொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.

கதையில் இன்னும் பல திருப்பங்கள்...கிளைமாக்ஸ் சொல்லிட்டா கதை போணியாகாது என்பதால் இத்துடன் கதை சொல்லி முடிக்கிறேன்.

இங்கேயும் ஒரு நோஸ்டர்டாமஸ்

ஒரே ஒரு பூமி சுழற்சி

ராமர் பாலம் நீருக்கு வெளியே

கேது இல்லா சேது

அகண்ட பாரதக் கனவு

முதுகெலும்புள்ள எதிர்கால பிரதமர்

மூப்பர்களில்லா அரியணை

நூற்றாண்டின் மாற்றத்தில் புதிதாய் பாலம்

சீனா வருகை

அகம் புலம் ஒற்றுமை

ஏதாவது ஒன்று
நீ இந்தியாவின் ஒரு பகுதி

Thursday, February 4, 2010

வடிவேலு

திரைக்கும் அப்பால் உள்ள நடிகர்,நடிகைகளுக்கு ஒரு முகம் இருக்கக் கூடும்.திரைப்பட பார்வையாளனாக அதுபற்றி பொதுமக்களுக்கு அக்கறை இல்லை,சினிமா செய்திகள்,கிசு கிசுக்கள் என்ற பொது வைப்பு தவிர.பொதுப் பார்வையில் ஏதாவது வில்லங்கத்தில் மாட்டாத வரையில் எதுவும் யாருக்கும் தெரியப் போவதில்லை.குற்றங்களின் மூல காரணங்களை தேடினோமென்றால் மது,மாது,பணம்,அரசியல் என்று பெரும்பாலானவை சுருங்கி விடும்.அதே போல் மனிதனின் கோபங்களின் வெளிப்பாடுகளின் காரணங்களாகக் கூட இவை அமைந்து விடுகிறது.அந்த வகையில் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்படும் வாய் வார்த்தைகளில் ஏதோ ஒரு புள்ளியில் விவகாரம் விசுவரூபமெடுத்து விடும்.

சொந்த அனுபவமாக நீண்ட நாள் நண்பனுக்கு வியாபார உதவிக்கு பணம் கொடுத்தேன்.பணம் திரும்பி வரவில்லை.அந்த சூழ்நிலையிலும் ஒரு நாள் குழந்தை மாதிரி அழுதுகொண்டு சாம்சங்க் கடைக்காரன் 6 மாதம் கட்டாத தவணைப் பணத்தை கேட்டு 1/2 நாள் மட்டும் அவகாசம் கொடுக்க என் கையிலிருந்த வீட்டு வாடகைப் பணம் உட்பட கொடுத்து சிக்கலில் இருந்து தப்பிக்க விட்டு பின் நான் வீட்டு வாடகை கூட கட்ட இயலாத சிக்கலில் மாட்டிக் கொண்டேன்.இப்படியாக துவங்கிய பணவிவகாரம் இன்று வரை இருவரின் நட்புக்கு சுவர் எழுப்பி இனி பணத்தை திருப்பி கேட்பதில்லை என்று விட்டு விட்டேன்.இதுவே இந்திய சூழலாய் இருந்திருந்தால் பிரச்சினை திசை மாறிப் போயிருக்கும்.

இனி வடிவேலு சிங்கமுத்துவின் பக்கம் திரும்பினால் சினிமாவில் நகைச்சுவை லூட்டிக்கும் பின்னால் நட்பு என்ற கோட்டில் இருவரும் பயணித்து இருக்கக் கூடும்.இருவரின் உடல் மொழிகளைப் பார்த்தால் சிங்கமுத்து வில்லனாக இருக்கக்கூடும்.கூடவே வடிவேலு தொழிலில் கொடி கட்டிப்பறப்பது சிங்கமுத்து உட்பட சிலருக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தக் கூடும்.நகைச்சுவை எவ்வளவு பெரிய வரம். முகபாவங்களால்,சொல்லின் நவரசத்தால் தமிழகத்தையே திரை,தொலைக்காட்சி,இணையத்தின் முன்னால் கட்டிப் போடுவதென்பது சாதாரண விசயமல்ல.எல்லோரும்தான் நகைக்க வைக்கிறார்கள் சிங்கமுத்து உட்பட.ஆனால் நகைச்சுவை தனித்துவம் என்பது திறன்,உழைப்பு,மனதை கவருவதில் வருவது.சொந்த வாழ்க்கை சிக்கலில்லாமல் இருந்தால்தான் நகைச்சுவையின் பரிணாமங்களை இன்னும் இன்னும் வடிவேலு வெளிப்படுத்த இயலும்.அந்த விதத்தில் அவர் சிக்கல்களில் விடுபட்டு நமது முகங்களை மலர வைக்க வாழ்த்துவோம்.