Followers

Thursday, May 6, 2010

சிரிச்சிகிட்டே அழுதுக்கலாம்

ஐரோப்பாவிலிருந்து Euronews ன்னு தொலைக்காட்சியில No comments ன்னு ஒரே ஒரு நிமிட நிகழ்ச்சி ஒவ்வொரு நாளுக்குமான ஏதாவது ஒரு செய்தியை மெளனமாக சொல்லும்.அந்த மாதிரி ஒரே நிமிடத்தில் கண்ணில் பட்டவை!வானம்பாடிகள் பாலா கண்ணுல மட்டும் பட்டிருந்தா?

காங்கேயம் காளைகளை காக்க வேண்டும்:காங்கிரஸ்

ஜல்லிக்கட்டு விளையாட தயாரா? காங்கிரசுக்கு கலைஞர் கேள்வி!

விரும்பும் இடங்களில் ஜல்லிக்கட்டு: அனைத்து கட்சி எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்

அரசியல்வாதிகளால் நாட்டுக் கோழி இனமே அழிந்து விட்டது:பா.ம.க ஆதங்கம்

ஜெயலலிதா மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு


திட்ட ஒதுக்கீட்டில் மத்திய,மாநில அரசின் பங்கு எவ்வளவு?விஜயகாந்த் கேள்வி

கேரளா செல்லும் சாலைகளை உடைப்போம்:வை.கோ


இந்தியன் படம் எடுத்த இடத்தில் ரகளை:2 வக்கீலுக்கு வெட்டு

சென்னை வந்தது பிரான்ஸ் மோ(போ)ர் கப்பல்

சென்னை:சப் இன்ஸ்பெக்டரை கடத்தியதால் பரபரப்பு


செம்மொழி மாநாடு: ரூ 51/2 கோடி செலவில் பந்தல்.

19 comments:

நசரேயன் said...

ஏன் அழுதுகிட்டே சிரிக்க௬டாதோ?

ராஜ நடராஜன் said...

//ஏன் அழுதுகிட்டே சிரிக்க௬டாதோ?//

நீங்க அமெரிக்காவா?வளைகுடாவா?

இங்கேதான் இடமிருந்து வலம்


அப்ப கீழ இருந்து மேலே படியுங்கள்:)

ராஜ நடராஜன் said...

//இங்கேதான் இடமிருந்து வலம்//

பத்மா said...

எல்லாரும் கிளம்பிட்டாங்க பா
இடமிருந்து வலம்

அமிஞ்சிகரையா

vasu balaji said...

:)).நன்றிண்ணோவ்:))).

ராஜ நடராஜன் said...

//எல்லாரும் கிளம்பிட்டாங்க பா
இடமிருந்து வலம்

அமிஞ்சிகரையா//

அ மிஞ்சி நசரேயன் கூடப் பேசின எழுத்துப்பிழை:)

ராஜ நடராஜன் said...

//:)).நன்றிண்ணோவ்:))).//

நச்ன்னு ஏதாவது கமெண்டலாமுன்னு பார்த்தா கதிர் வேற முன்னாடி வரிசையில நிற்கிறார்:)

கலைஞர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஞானசேகரனுக்கு விட்ட கலகல ஜல்லிக்கட்டு உங்களுக்கு போனஸ்!

//ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று ஞானசேகரன் கேட்கிறார். வீரவிளையாட்டு என்றும் அதை புகழ்ந்து உரைக்கிறார். எனக்குள்ள ஒரு ஆசை என்னவென்றால், அவர் கூறியதுபோல் ஜல்லிக்கட்டுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, முதல் ஜல்லிக்கட்டில், அந்த வீர விளையாட்டில் ஞானசேகரன் கலந்து கொள்வாரா? அப்படி அதற்கு அவர் எழுதித் தந்தால், அதை நம்பி, அதில் ஈடுபடுகின்ற முதல் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரலாம் என்றார்.//

Chitra said...

/////திட்ட ஒதுக்கீட்டில் மத்திய,மாநில அரசின் பங்கு எவ்வளவு?விஜயகாந்த் கேள்வி////



......திட்டுறதுக்கு ஒதுக்கீடா? ..... அரசியல் புளப்பு சிரிக்குது....... நாட்டு நடப்பு அழ வைக்குது. அவ்வ்வ்வ்.....

ஹேமா said...

சிரிச்சுக்கிட்டே அழமுடியுமா !
ஏதோ ஒண்ணுதான் முடியும்.
மத்ததை மனசு செய்யும்.
உண்மைதானே நடராஜன் ?

ராஜ நடராஜன் said...

//திட்ட ஒதுக்கீட்டில் மத்திய,மாநில அரசின் பங்கு எவ்வளவு?விஜயகாந்த் கேள்வி//



"......திட்டுறதுக்கு ஒதுக்கீடா? ..... அரசியல் புளப்பு சிரிக்குது....... நாட்டு நடப்பு அழ வைக்குது. அவ்வ்வ்வ்....."

இந்தப் பின்னூட்டத்துக்கு பதிலாக போபர்ஸ் முதல் ஸ்பெட்ரம் வரை இடுகை உங்களுக்கு போனஸ்.

ராஜ நடராஜன் said...

//சிரிச்சுக்கிட்டே அழமுடியுமா !
ஏதோ ஒண்ணுதான் முடியும்.
மத்ததை மனசு செய்யும்.
உண்மைதானே நடராஜன் ?//

அய்யோ சிவாஜியையும்,கண்ணதாசனையும் இவ்வளவு சீக்கிரம் மறக்கறாங்களே

உங்களுக்கு இந்த வரிகள் போனஸ்

சிலர் சிரிப்பார்
சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்.

ராஜ நடராஜன் said...

////சிரிச்சுக்கிட்டே அழமுடியுமா !
ஏதோ ஒண்ணுதான் முடியும்.
மத்ததை மனசு செய்யும்.
உண்மைதானே நடராஜன் ?////

போபர்ஸ் முதல் ஸ்பெக்ட்ரம் வரை இடுகை அடைப்பான் வெட்டி ஒட்டுதலில் நோட்பேட்ல காணாம போயிடுச்சு.

இப்ப நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்.

ஹேமா said...

எப்பிடியும் சரிவராது நடராஜன்.
தப்பு தப்பு.ஒண்ணு அழணும்.
இல்லாட்டிச் சிரிக்கணும்.முகத்தில ஒரு பாவம்தான் தெரியும்.ட்ரை பண்ணிப் பாருங்க.அதான் உங்க முகத்தைப் பாதில மறைச்சு வச்சிருக்கீங்கபோல !

ராஜ நடராஜன் said...

//எப்பிடியும் சரிவராது நடராஜன்.
தப்பு தப்பு.ஒண்ணு அழணும்.
இல்லாட்டிச் சிரிக்கணும்.முகத்தில ஒரு பாவம்தான் தெரியும்.ட்ரை பண்ணிப் பாருங்க.அதான் உங்க முகத்தைப் பாதில மறைச்சு வச்சிருக்கீங்கபோல !//

சிவாஜி சார்!உதவிக்கு வாருங்களேன்!
பாதி முகம் மறைஞ்சிருக்கிறதப் பத்தி யாராவது கேட்பாங்களான்னு பார்த்தேன்.இதுவரை யாரும் கேட்கவேயில்லை.

இந்தப் படம் நான் முதல் முதலா டிஜிட்டல் காமிரா வாங்கி என்னை நானே கிளிக் செய்த முதல் படம்.படமே இப்படித்தான் வந்தது:)

ஹிப்பகிரெசி இல்லாமல் இருக்கணுமின்னுதான் பதிவுலகம் வந்தேன்.ஆனால் பதிவுலக ஆட்டத்துல ஆடற அழுகிணி ஆட்டத்தப் பார்த்துட்டு ம்ஹும்!இது தேறாதுன்னு தனிப்பட்ட அனுபவங்களையெல்லாம் பகிர்ந்துக்கவே பயமா இருக்குது:(

ஹேமா said...

சரி சரி பாவம் அழாதீங்க !
போட்டோ நல்லாவே இருக்கு.

ராஜ நடராஜன் said...

//சரி சரி பாவம் அழாதீங்க !
போட்டோ நல்லாவே இருக்கு.//


கருப்பா இருந்தாலும் களையா இருக்கேன்னுதானே எங்க வீட்டு அம்மணி மூஞ்சியப் பாரு!மொகறையப் பாருன்னு எப்பவும் சொல்லுது:)

ஹேமா said...

போட்டோவைத்தான்
நல்லாருக்குன்னு சொன்னேன் !
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சாம் ! சிரிங்க !

ராஜ நடராஜன் said...

//போட்டோவைத்தான்
நல்லாருக்குன்னு சொன்னேன் !
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சாம் ! சிரிங்க//

நல்லா பழமொழி கண்டு புடிச்சாங்க எனக்கின்னே:)

ஜெயந்தி said...

சிரிச்சுக்கிட்டே அழலாம். அரசியல்வாதிங்க அடிக்கிற கூத்தப்பார்த்து சிரிச்சுக்கலாம். அதுனால வர்ற விளைவுகளை நினைத்து (உ.ம்.விலைவாசி உயர்வு) அழலாம்.