Followers

Thursday, March 31, 2011

ஈழத்தில் படர்வது புதிய மேகங்களா?

கிரிக்கெட் வேறு அரசியல் வேறு என்ற நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என்று பி.ஜே.பியின் சுஷ்மா ஸ்வராஜ் சொல்கிறார்.காங்கிரசோ அரசியலுக்குள் கிரிக்கெட்டை நுழைப்பதன் மூலமே நல்லுணர்வுக்கு தீர்வு காண இயலும் என்கின்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்கிறதென்பது பாகிஸ்தானிய ஜிலானியின் வருகையும்,இலங்கையின் ராஜபக்சேவுக்கான உலக கிரிக்கெட் இறுதி ஆட்ட அழைப்பும் தெரிவிக்கும் செய்தியாகும்.

எனவே இந்தியா  இலங்கை,பாகிஸ்தான் நாடுகளின் நல்லுறவை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டையே வெளியுறவுக் கொள்கையாக வைத்திருக்கிறது.இதில் தமிழக தேர்தலும்,காங்கிரஸின் அரசியல் களமும் உள்நாடு சார்ந்த ஒன்றாகவே இந்தியா கருதுகிறதென்பதும் தெளிவு.பொருளாதார உதவிகளை இலங்கைக்கு தருவதன் மூலமாகவே இலங்கையை தனது கட்டுக்குள் வைத்துக் கொள்ள இயலும் என இந்தியா கருதுகிறது.இலங்கையோ இந்தியாவும் நண்பன்,ரஷ்யாவும் நண்பன்,சீனாவும் நண்பன், பாகிஸ்தானும் நண்பன்,லிபியாவின் கடாபியும் நண்பன் என்ற வளையத்தைப் போட்டுக்கொண்டு தனது ஆட்டத்தை சிறப்பாக  ஆடி வருகிறது.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியால் ஈழப் படுகொலைகளும்,மனித உரிமை மீறல்களும் காலப்போக்கில் மறக்கப்பட்டு விடும் என்கின்ற நிலையிலேயே இது வரையிலான அனைத்து தரப்பு காய் நகர்த்தலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

அடிபட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும் என்கின்ற நிலைப்பாட்டில் கடந்த திங்கட்கிழமை மார்ச் 28ம் தேதி குளோபல் தமிழ் அமைப்பின் (Global Tamil Forum) மூலமாக அமெரிக்காவின் வாஷிங்டனில் தெற்காசிய நாடுகளுக்குப் பொறுப்பான ராபர்ட் பிளேக் அலுவலகத்தில் பேராயர் இமானுவேல் (Rev. Father S.J.Emmanuel) தலைமையில் நிகழ்ந்த சந்திப்பு இலங்கை குறித்த விசயத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைகிறது.

ஏற்கனவே அமெரிக்காவின் லிபியா குறித்த நிலைப்பாட்டில் எழுந்து வரும் விமர்சனங்களும்,ஈழ மக்களின் உரிமைகள் பின் தள்ளப்பட்ட நிலை குறித்து மனித உரிமை கழகங்கள் முன் வைக்கும் கேள்விகளும் கூட அமெரிக்காவின் தற்போதய புதிய சந்திப்புக்கு காரணமா அல்லது ஈழத்தமிழர்கள் மூலமாக இலங்கை அரசு மீதான காய் நகர்த்தலாக அமெரிக்கா இதனை நோக்குகிறதா எனத் தெரியவில்லை.அதிகார பூர்வமாக எடுக்கப்பட்ட புகைப்படம் புதிய செய்தியொன்றையே நமக்குத் தருகின்றதென்று தற்போதைக்கு நம்புவோம்.
 Rev. Father S.J.Emmanuel (Germany) included President the USTPAC, Dr. Elias Jeyarajah, Mrs. Grace Williams (USA) and Mr.Suren Surendiran (UK) along with Mr.Robert Blakes, US Assistant Secretary
 
இந்த சந்திப்பு குறித்து பேராயர் இமானுவேல் சொல்லிய சில விசயங்கள் கவனத்தில் கொள்ளத் தக்கது.

1.போரில் துயரப்பட்ட மக்களுக்கான உதவியும், வட,கிழக்கு இலங்கையில் வசிக்கும் மக்களின் குரலும் அதனோடு இணைந்த தமிழ் தேசிய அமைப்பின் வலுவான அரசியலும்
2.புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒட்டு மொத்த ஒருமித்த குரலும்
3.உலகம் தழுவிய தமிழர்களின் நாடுகளுக்கு உட்பட்ட ஆதரவும்
4.மனித உரிமை அமைப்புக்கள்,மற்றும் மேற்கத்திய நாடுகளின் தமிழர்கள் சார்ந்த பார்வையும்
5.இவற்றையெல்லாம் ஒன்று படுத்தவும் முன் நகர்த்தவும் தேவையான பொருளாதார வசதியும்

மேலும் இலங்கை அரசின் போருக்கு அப்பாலான மனித உரிமை பாதுகாப்பு உலகத்தரம் வாய்ந்ததாக இல்லையென்று ராபர்ட் பிளேக் கூறியதாகவும் இது குறித்து அடுத்த வாரம் ராஜபக்சேவை சந்திக்கும் போது வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.

வெளிநாட்டுக் கொள்கைகளில்,அரசியல் களத்தில் சில நிகழ்வுகள் காலம் கருதி செய்யப்படும் passing cloud என்று சொல்லப்படும் முகப்பூச்சாக அமைந்து விடுவதும் உண்டு.அதே போல் ஒரு நிகழ்வின் தொடராக அடுத்த நிகழ்வு என வரிசையாக இணைந்து கொண்டு பெரும் மாற்றங்களை கொண்டு வந்து விடுவதும் உண்டு.இதில் ராபர்ட் பிளேக்கின் உடனான தமிழர்கள் சந்திப்பு எந்த வகையில் சேரும் என்பதை வரும் காலம் மட்டுமே நிரூபிக்கும். 
 
Source: http://tamilweek.com/news-features/archives/2488

துபாய் பதிவர்களும்,ஸ்பைடர் மேன் அலன் ராபர்ட்டும்

மொக்கை போட்டு ரொம்ப நாளாச்சு.பழக்கம் விட்டுப் போகக்கூடாதுன்னும் கூடவே செய்தியாகவும் மீண்டும் ஒரு முயற்சி.முன்னாடியெல்லாம் பார்த்தா ஓரமா நிற்கிற என்னையெல்லாம் அடிச்சு புடிச்சு இடிச்சு தள்ளி விட்டு பொது அறிவு வளர்க்கிறேன், கார்ட்டூன் போடறேன்,சமைக்கிறேன்,ஜோக் சொல்றேனாக்கும் என்று துபாய் விவேகானந்தா குறுக்கு தெருவுலேயிருந்து ஏகப்பட்ட பதிவர்கள்.பின்னூட்டத்துல முதல் வடைங்கிறதுமில்லாம வீட்டுலேயோ,சேட்டன் கடையிலேயோ வடைய பொட்டலம் கட்டிகிட்டு பார்க்குல உட்கார்ந்துகிட்டு போஸ் கொடுத்தவங்களையெல்லாம் இப்ப கண்ணுல பார்க்கவே முடியல.இன்னாமா ஆச்சு?அமெரிக்க பொருளாதார சரிவும்,அதனால் துபாய் ரியல் எஸ்டேட் சரிவும் துபாய்க்காரங்க பம்மிகிட்டதன் காரணமா என்றும் தெரியவில்லை.ஒருவேளை தமிழக அரசியல் காய்ச்சலில் நான் கவனிக்காம கூடப் போயிருக்கலாம்.

இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா துபாயில் நிகழும் சில முக்கிய செய்திகளையும் கூட யாரும் சொல்வதாகக் காணோம்.அதனால் பதிவுக்கு தலைப்பு இப்படி வச்சு துபாய் பதிவர்கள் சார்பாக துபாய்க்கு வந்த பிரெஞ்சுக்காரர் ஸ்பைடர்மேன் அலன் ராபர்ட்டின்(Alain Robert) சாகச கதையிது.
போன வாரம் மண்புழுதிய நினைச்சு எல்லோரும் புலம்பிகிட்டிருந்தா அலன் ராபர்ட் அதையெல்லாம் கண்டுக்காம மலையேறப்போறேன்னு துபாயின் மற்றும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புஜ் கலிபா மீது குரங்கு தாவல் செய்திருக்கார்.வெறும் பெட்ரோலை மட்டும் வச்சுகிட்டு ரொம்ப நாளைக்கு காலம் தள்ள முடியாது,அதனால் வளைகுடா நாடுகளின் முக்கிய பொருளாதார மண்டலமா மாத்திடலாமென்று நினைத்த கனவுகளில் ஒன்றே புஜ் கலிபா உயரமான கட்டிடம்.
ஏனைய வளைகுடா நாடுகள் காரும், பெட்ரோலும் சல்லிசா கிடைக்குத்துன்னு புதிய முயற்சிகளில் ஈடுபடாத போது F1 கார்பந்தயம்,முதல் மெட்ரோ ரயில்,கிரிக்கெட், நம்ம ஊரு குதிரைப் பந்தயம் மாதிரி ஒட்டகப் பந்தயம்ன்னு துபாய் தன்னை தனித்துவப் படுத்திக் கொண்டது.துபாய் புர்ஜ் கலிபா கட்டிடம் உருவாகும் போதே அலன் ராபர்ட்டின் கண்கள் இந்தக் கட்டிடம் மீது கண் வைத்திருக்க கூடும்.அலன் ராபர்ட்டுக்கு உயரமான கட்டிடங்கள், மலைகள் போன்றவையப் பார்த்தா இருட்டுக்கடை அல்வா திங்கிற மாதிரி.

இதுல என்ன முக்கியத்துவம்ன்னா தன் கையும்,காலுமே தனக்குதவின்னு தாவலுக்கு வேறு எந்த விதமான உபகரணங்களோ உபயோகிக்காமல் மலையேறும் மகாதேவன் இவர்.மாறுதலாக துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்துக்கு பாதுகாவலாக வயித்துல நெருப்பைக் கட்டிகிட்டிருக்கேண்டின்னு அம்மாக்கள் பருவ வயதில் இருக்கும் பெண்களை பயமுறுத்துவது போல் இவர் வயிற்றுல கயிற்றைக் கட்டிகிட்டு துபாயை பயமுறுத்துகிறார்.கட்டிடத்தை தாவும் நேரம் ஆறு முதல் ஏழு மணி நேரங்கள் ஆகக்கூடுமென்று அறிக்கை விட்டு தாவலை துவங்கினார்.


இதுக்கு மேல என்ன சொல்வது?சரக்கு தீர்ந்து போச்சே!சரக்குன்னு சொன்னதும் .மெய்யாலுமே இது வரைக்கும் சொன்ன கலவையான பல எழுத்துக்களில் ஒன்று கூட கலப்படமில்லாத சுத்த மெய்யினால் தயாரிக்கப்பட்ட பதிவுகள்ன்னு பெருமைப் பட்டுக்கிறத விட தமிழகத்தின் டாஸ்மாக்குலயேருந்து நான் தப்பித்து விட்டேன் என்பது மட்டுமே உண்மை:)


ஸ்பைடர் மேன் அலன் ராபர்ட் பற்றிய மேலதிக தகவல்களை

இங்கேயும் பார்க்கலாம்

இங்கேயும் பார்க்கலாம்

Monday, March 28, 2011

இந்த ஊரு சுனாமியை உலகமே கண்டுக்கிறதில்ல!

சுனாமி எதனால் ஏற்படுகிறதென்றெல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பீங்க!புழுதி மழையும் காற்றும் எதனால் ஏற்படுகிறதென்று தெரிந்தவர்கள் யாராவது பதிவுகள் போடுங்க.கிராமப்புறத்தில் தாய்க்குலங்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்குத்தான் மண்ணை வாரி தூவுவாங்க.இயற்கைக்கு வந்த கோபத்தில் ஆடிக்காத்துல அம்மியே பறக்குமுன்னு சொல்வாங்களே அந்த மாதிரி ஒரு விசுவரூபம் எடுத்துகிட்டு வந்துடுச்சு புழுதி காற்று.வந்ததோடு பாலைவனத்துல இருந்த புழுதியெல்லாம் வாரிக்கொண்டு வந்து நகரத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.மணி வரை விடாம வந்து கொட்டிடுச்சு.
குவைத்.... வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சுகிட்டேன்....

 அடுத்த நாள் பார்த்தா சூரியன் மட்டும் பல்லைக்காட்டி சிரிக்குது.முதல் நாள் வந்த மண்புழுதியின் சுவடு கொஞ்சம் கூடமில்லாத வானம்.மொத்த ஊரின் தரை மட்டும்தான் மண்புழுதியில்.ஆனாலும் பறக்கிற காரின் வேகத்தில் வாகன சாலைகள் என்னவோ எப்பவும் போலவே காட்சியளித்தது.தெரிந்தவர்,குவைத்தி ஒருவர் படகை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்கப் போய் இன்னும் என்ன ஆனார் என்று தெரியவில்லை.கூட இருந்த 2 பேரின் உடல் மட்டும் இதுவரை கிடைத்துள்ளது.தெரிந்தவர் கடல் காவலுக்கு SOS அனுப்பி விட்டு  சுழலில் மாட்டிக்கொண்டேன்...வீடு திரும்புவேனா என்பது சந்தேகம் என வீட்டுக்கும் போன் செய்துள்ளார்.
 வாரான்....வாரான் சவுதி அரேபியாவுக்கு வர்ரான்....

பெட்ரோல் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..லிபியாக்காரன் சண்டை,இயற்கையின் சீற்றம்,இன்னும் எதிர்பாராத மிதக்கும் பெட்ரோலிய பொருளாதாரம்  உலகின் அனைத்து தர மக்களையும் பாதிக்கும்.
எனக்கென்னமோ இந்தப் பசங்கதான் புழுதியைக் கிளப்பி விடுறாங்களான்னு ரொம்ப நாளா சந்தேகம்.....

ஈராக்கின் தெற்கு பக்கமான பஸ்ராவில் துவங்கி குவைத்,சவுதி அரேபியா போய் விட்டு கடைசியா துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டதா கேள்வி. 

படங்கள் உதவி:தனி மெயில்,தி டெலிகிராஃப் மற்றும் அனானி பதிவர்.

Saturday, March 26, 2011

சீமானுக்கு முதல் விக்கெட்

சென்ற பதிவோடு தேர்தல் குறித்த பார்வையை நிறுத்திக்கொண்டு  தேர்தல் முடிவுகள் வரை மௌன பார்வையாளனாக இருக்கலாமென்று நினைத்தேன்.

இலவசமாக:) இன்னுமொரு பதிவு சீமான் சார்பாக இடலாம் என நினைக்கின்றேன்.தேர்தல் பதிவுகள் எழுதுவதின் காரணமாக தமிழக மக்கள் நலனோடு, ஈழம் குறித்த கோபமும் அதனை அரசியல் சார்ந்தே தமிழகத்தில் நோக்க வேண்டியதாக இருந்ததாலும் ஏனைய பதிவர்களுடன் நானும் சிறு கற்களை இதுவரையில் எறிந்து வந்தேன்.அதற்கான தேவைகளை குறைக்கும் வண்ணமாக இப்பொழுது காங்கிரஸ் கட்சி அவர்களுக்குள்ளேயே உட்பூசல்களை வளர்த்துக்கொண்டு எனக்கும் ஏனைய பதிவர்களுக்கும் சுமையை குறைத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

இது வரை சொல்லியவற்றில் எந்த ஒரு தனிமனிதர்கள் மற்றும் கட்சிகளின் வெறுப்பில் அல்லாது எதுவெல்லாம் நிகழந்தால் தமிழகத்துக்கு நல்லதல்ல என்ற எனது எண்ணத்தை மட்டுமெ எதிர்வினையாக பதிவிலும் பதிவர்களின் பின்னூட்டத்திலும் பிரதிபலித்து வந்தேன்.

சீமானுக்கும் அதிக தேர்தல் கர்ஜனைகளுக்கு அவசியமில்லாமல் தமிழக காங்கிரஸ் அவர்களுக்குள்ளேயே சீட்டுக்கு தகராறு செய்து கொள்வதும், ஒருவருக்கு எதிராக இன்னொரு குழுத் தொண்டர்கள் குரல் எழுப்பி சண்டையிட்டுக்கொள்வதும் கட்சியின் எப்போதுமான நிலையை பிரதிபலிக்கிறதா அல்லது காங்கிரஸின் ஈழ நிலைப்பாடு காரணமாக தமிழ் உணர்வாளர்களின் கோபம் அவர்களை சுடுகிறதா என்பது அவரவர் பார்வையை பொறுத்த விசயம்.

இதுவரையிலும் ஈழம் என்ற காரணம் கொண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என்று ரயில் தண்டவாளம் போன்ற பொய்ப் பிரச்சாரங்கள் பொய்த்துப் போயிருப்பதும்,எந்த விதமான கலவர நிலையையும் ஈழம் குறித்த உணர்வு காரணமாக வெளிப்படாமையும்,லத்திகா சரணின் அறிக்கைகளும், தமிழ் உணர்வாளர்களுக்கும்,வை.கோ,சீமான் போன்றவர்களுக்கும் வெற்றியே என்பேன்.

தற்போதைய தேர்தல் சூட்டில் காங்கிரஸ் கட்சியின் உட்பூசல்கள் காரணமாகவும்,தி.மு.கவின் ஒப்புக்கு சப்பாணி கூட்டணி நிலையாலும்,பாதுகாப்பு என்ற போர்வையில் ராகுல் காந்தியும்,சோனியா காந்தியும் கூட தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரவில்லையென்று செய்திகள் அடிபடுகின்றன.மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதே உண்மையாக ஜனநாயகத்தில் கட்சியை வளர்க்கும் என்பதாலும்,நிகழ்வுகளின் தவறுகளில் காங்கிரஸ் வருங்காலங்களிலாவது பாடம் கற்றுக்கொண்டு சிங்கள மக்களுக்கு இணையான சமவாழ்க்கை உரிமையை ஈழத்தமிழர்களுக்கும் பெற்றுத்தருமா என்பதில்தான் தமிழகத்தில் காங்கிரஸின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

தற்போதைக்கு சீமானின் எளிய விக்கெட்டுக்கு வாழ்த்துக்கள்! 

Friday, March 25, 2011

தேர்தல் ஆணையத்தை வரவேற்போம்!

 தேர்தல் ஆணையம் பற்றிய விழிப்புணர்வு டி.என்.சேஷன் காலம் தொட்டு வளர்கிறதென்றே நினைக்கின்றேன்.அதற்கும் முற்பட்ட காலத்தில் இப்படி ஒரு ஆணையம் இருப்பதே பெரும்பாலோருக்கு தெரியாமல் இருந்தது. அரசியல்வாதிகளுக்கு அடங்காத சண்டிக்குதிரையாக டி.என்.சேஷன் தேர்தல் ஆணையராக இருந்த காலத்திற்குப் பின் இப்பொழுதே தேர்தல் ஆணையம் களை கட்டுகிறதென நினைக்கின்றேன்.

தேர்தல் ஆணையத்தின் விளம்பரம்

மக்களாட்சிக்கு வாக்களிப்போம்,
மனசாட்சிப்படி வாக்களிப்போம்,
உங்கள் வாக்கு உங்கள் சக்தி,
நீங்கள் காண விரும்பும் மாற்றம் உங்களிட மிருந்தே தொடங்கட்டும்,
உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலம்

மக்களுக்கு கழக ஆட்சியில் இரண்டில் ஒன்றே பழக்கதோசம் எனும் பொழுது தேர்தல் ஆணையத்தின் விளம்பரமும் பலருக்கும் போய்ச் சேர்வது மாற்றங்களை உருவாக்கவும் மன மாற்றத்திற்கும் வழிவகுக்கும்.


Thursday, March 24, 2011

வடிவேலண்ணே!வேண்டாம்ண்ணே!

முன்பொரு முறை வடிவேலு அவரது பங்காளி கூட சண்டை போட்ட போது ஒரு நல்ல சிரிப்பு நடிகனின் தனி மனித வாழ்க்கை பாதிப்பு தமிழகத்து ரசிகர்களுக்கும் இழப்பாகும் என பரிதாபப்பட்டு பதிவு போட்டது நினைவு வருகிறது.

வடிவேலு சுழலில் மாட்டிக்கொண்டு இப்பொழுது தேர்தல் நேரத்தில் விஜயகாந்தை இழிவாய் பேசும் மேடைப்பேச்சும் அதுவும் தி.மு.கவின் தலைவர்கள் முன்பு பேசும் இகழ்ச்சியுரையும் கழகங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டது எப்படி என்பதற்கு தற்போதைய சான்று.தமிழகத்தில் அரசியல் மேடை ஏறுவதற்கு பொது அறிவோ,சமூக உணர்வோ,மக்கள் நலன் குறித்த அக்கறையோ எதுவும் தேவையில்லையென்பதற்கு வடிவேலுவின் அரசியல் பிரச்சாரம் ஒரு உதாரணம்.துவக்க காலம் தொட்டுப் பார்த்தால் தனி மனித சண்டைகளே திராவிட இயக்கங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. திராவிட கழகத்திலிருந்து அண்ணா வெளியேறியதற்கும், தி.மு.க கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க உருவாக்கியதற்கும், ஜானகி-ஜெயலலிதா நீயா?நானா போட்டிக்கும்,தி.மு.கவிலிருந்து வை.கோ பிரிந்ததற்கும், கழகக் கண்மனிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் மரம் விட்டு மரம் தாவுவதற்கும் உட்காரணங்களைப் பார்த்தால் சண்டைக்கோழிகளானதாகவே இருக்கும்.

இருக்கும் அரசியல் கலாச்சார சீரழிவுகளோடு  வடிவேலு மாதிரி புதிய காளான்கள் அவ்வப்போது பூப்பதே கழகங்கள் இன்னும் செழித்து வளரும் என்பதற்கான அடையாளங்கள்.

உன் மண்டபம்  இடிச்சா நீ கட்சி ஆர்மபிபியா ? உனக்கு வேட்கம்மா இல்ல ? கூச்ச நாசமா இல்ல ? நான் கருப்பு mgr  னு சொல்ற .. நான் கருப்பு நேரு யா .. நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .. நீ கேப்டன் ? என்னய்யா அது ? தன்நில கப்பல் ஓட்டுறவன் பேரு தான்யா கேப்டன் .. நீ எந்நேரமும் தண்ணில இருக்குற ஆள் யா..... 
 
இப்படி நீளுது வசனங்கள்..... சந்தனம்ன்னு நினைச்சு சேற்றுக்குள்ள காலை வச்சுடீட்டீங்க....இனி மேல் எப்படியோ?

வடிவேலண்ணே!நடிச்சது போக நேரம் போகலையா?அப்படியே வலைப்பக்கம் வாங்க....உங்களோட வசனங்கள் கொடிகட்டிப்பறக்கிறத கண்டு மகிழுங்க.இது வரைக்கும் வடிவேலுக்கு எதிராக ஒரு பதிவு கூட இல்லாம இருக்குதேன்னு ஆச்சரியமாஇருக்கும்.

வந்தீஙகன்னா...படிச்சா...புடிச்சா...பிரண்டுவோம்.புடிக்கலன்னாலும் பொரண்டுவோம்...

உங்களை பணயம் வைக்கும்   ஓடிப்புடிச்சு விளையாடற இந்த விளையாட்டு வேண்டாம்ண்ணே!

Wednesday, March 23, 2011

இந்தியா புண்ணிய பூமியா?சுனாமித் தேவையா?

இங்கே திருடுபவனே தலைவன்
லஞ்சம் கொடுப்பவனே வள்ளல்
இனப்படுகொலைக்கு துணையே வெளி நாட்டுக்கொள்கை
வருமானத்துக்கு அதிகமாக சம்பாதிப்பவனே ஐ.பி.எஸ்
இலவசத்துக்கு கை ஏந்துபவனே வாக்காளன்

இங்கே சர்தாருக்குப் பெயர் மிஸ்டர் க்ளீன்
சக்கர நாற்காலிக்காரனுக்குப் பெயர் ராஜதந்திரி
பதவிக் கனவே தேசத்தொண்டு

ஊழல் இவர்கள் பதவியின் பிறப்புரிமை.
ஓட்டுக்கு காசு கொடுப்பதே அரசியல் சாசனம்


இங்கே அருந்ததிராயும் பினாயக் சென்னும் தேசத்துரோகிகள்
தவறுகளைக் கண்டு கொதித்தால்
நீங்களும் நானும் சேகுவரா அல்ல!

காசு கொடுத்தால் எதுவும் கிடைக்கும் தேசமாகிப் போன
இந்தியாவே நீ இன்னும் புண்ணிய பூமியா
அல்லது ஜப்பானின் சுனாமித் தேவையா?

 (பட உதவி: தெகல்கா இணையதளம்.

காசு கொடுத்தால் ஓட்டு கிடைக்கும் பாராளுமன்ற ஊழல் 2008.)

யோகாவும் மாட்டிறைச்சியும்.

இன்றைய செய்தியாக பெரியார் திராவிட கழகம் யோகா கற்றுக்கொடுக்க வந்த பாபா ராம்தேவ் போதனையில் நுழைந்து மாட்டிறைச்சியை தியானம் செய்து கொண்டிருப்பவர்கள் முன் காட்டினார்களாம்.பெரியார் சேர்த்து வைத்த சொத்து ,  அறிவுக்களஞ்சியம் அனைத்தையும் அடைகாக்கும் வீரமணியை விட சமூக உணர்வாளர்களாக பெ.தி.க செயல்படுகிறதென்றே நினைக்கிறேன்.ஆனால் இது என்ன அத்துமீறல் அடுத்தவன் சுய உரிமையில் தலையிடுவது.?

நெருப்பில் நடப்பதும் விஞ்ஞான ரீதியில் சாத்தியமானதே என்கின்ற பரிசோதனையாகப் பிரச்சாரம் வைக்கும் போது மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் யோகா செய்வது இயலும் என்கின்ற பிரச்சாரமே சரியாக இருக்கும்.அது தவிர்த்து சைவ உணவுகள் சாப்பிடுபவனின் சுதந்திரத்தில் தலையிடுவது தவறு.

பெரியாருக்குப் பின் பகுத்தறிவு படும் பாடு பரிதாபமாக இருக்கிறது.

ஒரு கருத்தை முன்வைக்கும் போது மாற்றுக்கருத்தை முன்வைப்பதுவே சரியான முறையாக இருக்கும்.அது தவிர்த்து ஒருவர் விமர்சிக்கிறார் என்றவுடன் பழ.கருப்பையா வீட்டில் நுழைந்து அடியாட்களை வைத்து தகராறு செய்வது போன்றது பெ.தி.க வின் செயல்.தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அடிமாடுகள் போவதன் காரணம் என்ன தெரியுமா?கேரளாக்காரன் செய்யும் மாட்டிறைச்சி வறுவல் செய்முறை.மசாலா இட்டு வெங்காயம், பூண்டு,சீரகம் இன்னபிற கலவையில் நன்றாக வறுத்த தேங்காய்,கருவேப்பலை, கொத்துமல்லி மணத்தில் அதே மாதிரியான ருசியை மாட்டிறைச்சியில் கொண்டு வருவதே மாட்டிறைச்சி சாப்பிடு என்பதன் உண்மையான நோக்கமாக அமையும்.இதற்கு ஆதரவாக பெயரளவில் திராவிடம் பேசும் கழக ஆட்சியின் டாஸ்மாக்கும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்:)


இனி யோகா பக்கம் தலைகாட்டினால் சைவ உணவு மட்டுமே யோகாவுக்கு சிறந்தது என்ற கோட்பாடு உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும்,அசையா வேலை செய்பவர்களுக்கும் வேண்டுமானால் சரியாக இருக்கும்.அதற்கு மேலும் யோகாவே வாழ்க்கை என்று அதில் தன்னை முழுதும் ஈடுபடுத்திக்கொள்பவர்களுக்கும் வேண்டுமானால் இது துணை புரியும்.ஆனால் உடல் உழைப்பாளிகளுக்கும்,சாதாரண வாழ்வியல் முறையைக் கடைப்பிடிப்பவர்களுக்கும் முழு சைவம் என்பது இயலாத ஒன்றே.மேலும் முன்பை விட தமிழகத்தில் அசைவ உணவு உட்கொள்ளும் பழக்கமும்,மது அருந்துவதும் வாழ்க்கை முறை என்று மாறியிருக்கிறது.இதற்கெல்லாம் மாற்று என்ன என்றால் உடல்பயிற்சி,யோகா,தியான பரிட்சை முறைகளே என்பேன்.

சூழ்நிலைக்கைதியாய் தமிழகம் இருப்பதால் விரும்பினால்
அசைவம் உண்!
மது அருந்து!
ஆனால் தினமும் உடல்பயிற்சி,யோகா,தியானம் செய்!

அன்றாடப் பழக்கத்தில் சைவமா!அசைவமா என்பதை உடல் சொல்லும்.அதற்கேற்ப மாறுவதே நல்லது.முழு தயிர்ச் சாதமும் நல்லதில்லை.கறி தின்றால்தான் பெரியாரியல் என்பதும் தவறு என்பது எனது கோட்பாடு.

முன்பு சுப்பரமணி சாமியின் தோழர்கள் மொரார்ஜி தேசாயும்,ராஜ் நாராயணனும் மூத்திரம் அருந்தினால் உடலுக்கு நல்லது,நீண்ட நாட்கள் வாழலாம் என்ற ஒரு தியரியைக் கொண்டு வந்தார்கள் என்று செய்தியில் படித்தேன்.ராஜ் நாராயணன் தியரியைப் பிரச்சாரம் செய்த நாட்களிலேயே மரணமடைந்தார்.மொரார்ஜி தேசாய் பிரதமர் கனவை நிறைவேற்றி கடலில் குளித்து மகிழ்ந்து மரணமடைந்தார்.உடல் சொல்லும் பாடமே மனதிற்கு மருந்தாக அமையும்.

மது கிடைக்காத ஊரில் இருப்பதால் நான் மது அருந்துவதில்லை.உணவில் எந்த கட்டுப்பாடும் வைத்துக்கொள்வதில்லை.உடற்பயிற்சிகளை இயன்றவரை தினமும் கடைப்பிடிக்கிறேன். இதுவரை எப்பொழுதாவது வரும் சளி, இருமல் தவிர மருந்துகள் எதுவும் சாப்பிட்டதில்லை.உடலும் மனமுமே வாழ்க்கை.   மனமும்,உடலும் ஆரோக்கியமாகவே உள்ளது.

தேர்தல் நேரம்ங்கிறதால நம்மகிட்டருந்து ஆட்டையப்போடுற ஆட்களைக்கண்டவுடன் அடிச்சு புடிச்சு பதிவை படிக்க ஓடுறீங்க.நம்மோடு அன்றாடம் ஒட்டிக்கொள்ளும் வாழ்க்கை முறையை எனது பார்வையில் பரிட்சித்துப் பார்த்த முறையில் சொல்லியிருக்கிறேன்.ஓட்டுப் போடுவதை விட கருத்து சொல்வது புரிதலுக்கு உதவியாக இருக்கும்.

Monday, March 21, 2011

அரசியல் ஆக்டோபஸ்!

இதுவரையிலான அரசியல் பார்வையில் தமிழக மக்களுக்கான தூர நோக்கு நலன் சார்ந்த வாய்ப்புக்கள் இல்லாததால் தி.மு.க vs அ.தி.மு.க இரண்டில் யார் வெல்வார்கள் என்பதை விட தமிழக சட்டமன்ற 2011 ஏப்ரல் 13 தேர்தலைப் பொறுத்தவரை வெல்லப்போவது ஸ்பெக்ட்ரமா?இலவசமா என்பதே கேள்வி! 

தி.மு.க தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் அடிப்படையில் தி.மு.கவின் பலம் மற்றும் பலவீனங்களை அலசியதில் வந்த அரசியல் ஆக்டோபஸ் இது.
தி.மு.க கூட்டணி தோற்றால் பதிவர் உண்மைத்தமிழனுக்கு பதிவுலகம் சார்பாக பழனி முருகனிடம் மொட்டை.அ.தி.மு.க கூட்டணி வென்றால் தமிழக மக்கள் பழைய வில்லியின் புதிய சதுராட்டங்கள் என்னவென்பதைக் காணலாம்.

இனி தி.மு.க கூட்டணியின் பலம் மற்றும் பலவீனங்களின் அடிப்படையில் அரசியல் ஆக்டோபஸ்.

பலமான கூட்டு எண்ணிக்கை

எத்தனை அடித்தாலும் தாங்கும் இதயம் கருணாநிதி
கண் மூடிய பக்தி பொங்கும் கண்மணிகள்
தி.மு.கவுக்கே ஓட்டுப் போட்டுப் பழகிடுச்சு மனநிலையாளர்கள்

இலவசங்களை வரவேற்கும் தினசரி,மாத பட்ஜெட் வாழ்க்கையாளர்கள்
இலவச தொலைக்காட்சி,ஒரு படி அரிசி
புதிய இலவச கதாநாயகியின் தாக்கம் முக்கியமாக
புதிதாய் மனைவியாக கிரைண்டர் துணைவியாக மிக்ஸி:)
ஓட்டும் ஒரு வாங்கும் பொருளே சித்தாந்தம்

நிர்வாகம் பழகிய மந்திரிகள்
ஊழலுக்கிடையிலும் திருப்தி கொள்ளும் நிர்வாகம்
ஸ்டாலினின் மெல்லிய அணுகுமுறை
அழகிரியின் அதிரடி மற்றும் அடாவடி அரசியல்

சன்,கலைஞர் தொலைக்காட்சியின் தேர்தல் பரப்புரை
காங்கிரஸ்,விடுதலைச்சிறுத்தைகள்,பாட்டாளி மக்கள் கட்சிக் கூட்டணி வாக்குகள்
கருணாநிதிக்குப் பதிலாக அறிக்கை விடும் வீரமணி
அரசுத்துறை சார்ந்த தி.மு.க வெற்றிக்கு பாடுபடுபவர்கள்
ஜெயலலிதாவின் இறுதி நேர பைத்தியக்காரத்தனம்
வை.கோவின் அரசியல் துறவறம்


பலவீனங்களின் கூட்டு எண்ணிக்கை

மூன்று மணி நேர உண்ணாவிரதம்
மழை ஓய்ந்தது.தூறல் மட்டுமே
தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பு
ராஜினாமா கடித ஏமாற்று
இனப்படுகொலைக்கு தமிழகத்தின் பங்கு
கூட்டுக்களவானியாக காங்கிரஸ் கூட்டணி
வெறும் கடிதங்கள் மற்றும் மத்திய அரசு சார்பு நிலை

ஸ்பெக்ட்ரம் உழலில் தி.மு.க வின் பங்கு
ஆ.ராசா கைதும்,சாதிக் பாட்ஷாவின் மரணமும்
கலைஞர் தொலைக்காட்சியில் சி.பி.ஐ விசாரணை
கனிமொழி,தயாளு அம்மாள் விசாரணை
இனியும் வரும் சி.பி.ஐ,நீதிமன்ற அதிரடிகள்

குடும்பம் மற்றும் வாரிசு அரசியல்
தன் குடும்ப பதவிக்காக மட்டும் விமானப்பயணம்
கட்சி சீட்டுக்காகவும் விமானபயணம்
நியாயமா கேள்வியும் மூக்கறுபட்ட 63ம்
இலவசங்களுக்கு எதிரான விமர்சனங்கள்
இலவசம் கருவூலத்திற்கு கடன்

நிர்வாகம்,சட்ட,ஒழுங்கு சீர்கேடல்
வழக்கறிஞர்கள்,காவல்துறையினர் கலவரம்
நீண்ட கால திட்டமிடல் குறைபாடு
மீனவர் பிரச்சினையில் திருப்தியின்மை

காங்கிரஸின் கூட்டணிக் குழப்பம்
திரைப்படத்துறையின் மொத்த ஆதிக்கம்
விஜய் ரசிகர்களின் தாக்கம்
ஜெயலலிதாவிற்கான பெண்கள் ஓட்டு
இரட்டை இலைக்கான நிரந்தர ஓட்டு
கம்யூனிஸ்ட்,தேமுக இன்ன பிற கட்சிகளின் கூட்டணி

ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் மாற்றாக தோன்றினாலும் வாரிசு அரசியலை எதிர்க்கிறேன்.மேலும் தும்முவதற்கும் கூட டெல்லியின் அனுமதிக்கு காத்திருக்கும் தமிழக காங்கிரசின் நிலை தமிழகத்தில் தேறுவதாக தெரியவில்லை. ஒருவேளை,காங்கிரஸ் வென்றால் ஈழத்தமிழ் உணர்வாளர்கள் சார்பாக நான் தலையில் துண்டு போட்டுக்குறேன்.

Thursday, March 17, 2011

மாற்று அரசியலுக்கான தேவை

இரு அணி நேரத்து உற்சாகம் கடந்தும் மாற்று அரசியலுக்கான சாத்தியங்களாக மக்கள் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இரு கழக ஆட்சியையே எதிர்பார்க்கும் நிலை பெரும்பாலோரிடம் காணப்படுகின்றது.யதார்த்தமும் அதுவே.

பதிவுலகம் இது வரை கருணாநிதி முதல்வராக இருப்பதாலும்,அவரது செயல்பாடுகள் திருப்தியளிக்காத தன்மையாலும் அவரை முன்னிருத்தியே விமர்சன பதிவுகள் அதிகம் வந்தன.தற்போதைய தேவையாக தி.மு.க கழகத்திற்கு ஓய்வு தேவையென்ற காரணம் கொண்டும்,காங்கிரஸ்க்கு தமிழகத்தில் சாவு மணி அடிக்க வேண்டுமென்ற காரணம் கொண்டே அ.தி.மு.கவிற்கான மாற்று அரசியலை பெரும்பாலோர் ஜெயலலிதாவின் பொருந்தா கூட்டணி என்று தெரிந்தும் சமரசம் செய்து கொண்டு கூட்டணிக்கு வந்தார்கள்.

ஆனால் ஜெயலலிதாவின் முட்டாள்தனமான அவசர புத்தியால் தி.மு.க love ball சொல்லும் நிலைக்கு ஜெயலலிதா வை.கோ என்ற துருப்பு சீட்டு மூலமும் தன்னிச்சையான தொகுதிகள் அறிவிப்பால் ’நீ இன்னும் சிறுபிள்ளையே’ என்று உணர்த்தி விட்டார்.சாணக்கி என்ற புதுபதம் சேர்த்துக்கொள்பவர்களும் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யும் நேரமிது.தற்போதைய நிலையில் அரசியல் ஆட்டத்தைக் களைத்துப் போட்டே ஆட வேண்டிய நிலைக்கு தமிழகம் வந்துள்ளது.தமக்கென ஓட்டு வங்கியை இரு கழகங்களும் வைத்திருந்தாலும் புதிய அணிகள் ஜெயலலிதாவின் கூப்பிடலுக்கே காத்திருக்கும் நிலைக்கு வெட்கபடாதவர்கள் யார் முன் நின்று புதிய அணிகளை ஒன்று சேர்ப்பது என்பதில் தமது ஈகோ களைக்கும் தருணத்தில் மட்டுமே மாற்றங்களுக்கான வாய்ப்புக்கள் இருக்கிறது.இல்லையென்றால் இரு கழகங்களின் ஓட்டுப் பிரிக்கும் தன்மையையே உருவாக்கும்.

சிங்கார சென்னையாக மாற்றுவோம் கோசக்காரர்கள் கோட்டை விட்டு பிற இடங்களை தேர்ந்தெடுப்பதிலிருந்தே சுய பயம் தெளிவாகத் தெரிகிறது.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டார்.

கலைஞர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் போட்டியிடுகிறார்.  

பேராசிரியர் க.அன்பழகன் வில்லிவாக்கத்தில் போட்டியிடுகிறார்.

காட்பாடியில் துரைமுருகன் போட்டியிடுகிறார்.

தற்போதைய ஜெயலலிதாவின் எடுத்தேன் கவிழ்த்தேன் பித்துக்குளித்தனம் தி.மு.க விற்கு கொஞ்சம் டானிக்கோ,டாஸ்மாக் குடிச்ச மாதிரியோ,இருக்குற மகராசனுங்க ரெமி மார்ட்டின்! குடிச்ச மாதிரியோ இருந்தாலும் ஸ்பெக்ட்ரம் பூதமும் அதன் காரணமாய் பினாமி தொழில் ஆபத்து என்ற சாதிக் பாட்ஷாவின் உயிரிழப்பு பாடம் புகட்டி நினைவுறுத்துவதாலும்,அரசியல் சார்ந்தே இந்தியாவில் ஈழத்துயரத்தை அணுகவேண்டியுள்ளதாலும்,மக்களாட்சி கோட்பாட்டில் மாற்றங்கள் அவசியமென்பதாலும்

காலம் இன்னும் கடந்து விடவில்லை.கடைசியாக ஓட்டத்தை துவங்கி முதலில் வெற்றிக்கோப்பையை வென்றவர்கள் நிறைய பேர்.அரசியலிலும் அதற்கான சூழல்கள் இருக்கின்றன.இரு கழகங்களுக்கும் மாற்றாய் புதிய மக்கள் குரல்கள் ஒலிக்கும் காலம் வரையாவது இருப்பதில் ஒன்றை புதுப்பரிட்சை நிகழ்த்துவதில் தவறேயில்லை விளைவுகள் எதுவாயினும்.ஜெயலலிதாவின் ஒற்றை கணிப்பால் தமிழக அரசியல் மாற்றம் என்பது கேள்விக்குரியதும் வருத்தம் தரக்கூடியதும் கூட.கூடி தேர் இழுத்தால் மாற்றங்களுக்கான சாத்தியங்களையும் நம் மக்கள் நிகழ்த்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒழியட்டும் ஆணவ அரசியலும்,குடும்ப சுயநலமும் முக்கியமாக இனம் கருவறுத்த டெல்லி தர்பாரும்....

அவ்வப்போது கிளாஸ்ல உட்கார்ந்து கேட்ட அனுபவத்தில் படிக்காமலே பரிட்சை எழுதியும் சில சமயம் பாஸாகி விடுவதில்லையா:) அப்படியாகிப்போச்சு தற்போதைய தேர்தல் நிலவரங்கள்!

ஆமா! இதென்ன புது தொழில் நுணுக்கம்.காலை தினசரிக்குள் பணம் பட்டுவாடா!திருந்துங்கப்பா!.நாளைக்கே சுனாமி வந்து அடிச்சுடுச்சுப் போனா என்ன செய்வீங்க?கடல் ஜப்பான்காரனுக்கு மட்டும் சொந்தமில்லை.இருப்பதில் நேர்மையாக,சுகமாக வாழ்க்கையை அனுபவியுங்கள் அரசு,அரசியல் தோழர்களே!

Wednesday, March 16, 2011

வை.கோ வின் அரசியல் நிலைப்பாடு?

வை.கோ மீது பல விமர்சனங்களை முன் வைக்கலாம்.ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர்,அரசியலில் வலம் வந்தவர் எப்படி ஒவ்வொரு முறையும் தவறான முடிவுகளை மட்டும் எடுக்கிறார் என்பதும்,கூட இருந்தவர்களும் இவரை தனித்து விடுமளவுக்கு திரைக்குப்பின்னால் என்ன நிகழ்கிறது என்பதும் புரியாத புதிர்.பொடாவுக்கு அடுத்து ஜெயலலிதாவுடனான கூட்டணி அரசியல் சறுக்கலின் உச்சம் என்பதால் இப்போதைக்கு தனித்து விடப்பட்டது ஒன்றும் பெரிதான விசயமில்லை.கடந்த தினங்களில் விஜயகாந்த் தொட்டு கம்யூனிஸ்ட்டுகள் வரை தொகுதிப் பங்கீடு உடன்பாடு என்பதும் வை.கோ  இறுதி நிலைக்கு தள்ளி காக்க வைத்ததில் ஜெயலலிதாவின் கணக்கீடுகளை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது.

வை.கோ உறுதியாக நிற்கும் ஈழ நிலைப்பாடும் கூட ஜெயலலிதாவின் பார்வையில் காங்கிரஸ் கணக்குப் போடும் எதிர்காலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்கின்ற கோணத்தில் அவரோ அல்லது அவருக்கு ஆலோசனை சொல்பவர்களோட கூட செய்யக்கூடும்.கூடவே நிகழ்கால அரசியல் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்கும் காரணத்தால் வை.கோ கூட்டணியை பெரிதுபடுத்தாத மாதிரியே தெரிகிறது.

மௌனம் காக்கும் வை.கோ எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதும் மீண்டும் ஒரு தவறான முடிவுக்கு திரும்புவாரா என்று அனைவரும் உற்று நோக்கும் நேரத்தில் செங்கோவி கடைக்குப் போனதில் குறிப்பு எழுதுகிறேன் பேர்வழின்னு தெனாவெட்டா நல்லதொரு பின்னூட்டம் போட்டு விட்டு 

   tharuthalai said.....

வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா? 

Friday, March 11, 2011

ஜப்பானிய மக்களுக்கு அனுதாபங்கள்

காலையில் போன் ரிங்கியது.நானோ மனைவியின் கட்டிப்பிடியில் இதமான உறக்கம்.உறவினர்களில் யாராவது கடன் தொல்லைப் போனாக இருக்குமென்று பார்த்தால் உறவினரின் மனைவி கணவன் இரவு வீட்டுக்கு வரவில்லையென்று புலம்பல்.இதே அதிர்வில் மனதில் பல புயல்களை கிளப்ப  தெரிந்தவர்களுக்கு போன் செய்து விசாரித்தால்....

வளைகுடா பிரம்மச்சாரிகள் வாழ்க்கை மட்டுமே வளைகுடாவில் இந்தியர்களின் வாழ்க்கையை சரியாகப் பிரதிபலிக்கும்.வாரக்கடைசி என்பதால் உறவு யாருக்கும் தெரியாத கட்டிங் போட்டுவிட்டு போனையும் அமுத்திவிட்டு காலை 10 மணிக்கு ஒய்யாரமாக வீட்டுக்கு வந்து இந்த பொம்பளைகளே இப்படித்தான் சின்ன விசயத்தையும் ஊதி பெரிதாக்கி விடுவார்கள் என்று என்னிடம் தர்க்கம் செய்கிறார்.

தூக்கம் கலைந்து கூடவே அதிர்வும் சேர்ந்து கொள்ள சி.என்.என் தொலைக்காட்சியைத் திறந்தால் பயங்கர செய்தியாக 8.9 ரெக்டாருக்கு சுனாமி.இந்தோனேசியா சுனாமியில் இலங்கை, தமிழகம் வரை வந்த சுனாமியில் ரெக்டாரின் விகிதாச்சாரம் தெரிந்திருந்ததால் சுனாமியின் தாக்கம் புரிந்தது.

அதற்கும் அடுத்த காட்சியை சி.என்.என் ஒலிபரப்பும் போது இயற்கையின் சீற்றம் மனிதன் திட்டமிட்டு நிகழ்த்தும் அழிவுகளை விட கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் சில நிமிடங்களில் நிகழ்த்தி சென்று விடுவது புரிகிறது.எத்தனையோ இயற்கை சீற்றங்கள் வந்து மனிதனுக்கு எச்சரிக்கைகளை விட்டுச்சென்றாலும் மனிதன் மட்டும் தன்னை திருத்திக்கொள்வதாகவே தெரியவில்லை.

இதோ இந்த பதிவு எழுதிய அடுத்த சில நாட்களில் ஜப்பானின் சுனாமியை உச் கொட்டிவிட்டு வரும்நாட்களில் மனிதன் தனது அழிவின் திட்டங்களில் புகுந்து கொள்வான் பாருங்கள்.கூடவே மக்களின் வாழ்வியலுக்கும், வழிநடத்தும் அரசுகளின் செயல்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் என்பதை இலங்கை குறித்த ஜப்பானின் நிலைப்பாடும், மதம் காரணமான பக்கச்சார்பும் பதிவுசெய்திருக்கின்றன.அதோடு கம்யூனிச காலத்து ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கும் கம்யூனிசம் கடந்து வந்த ரஷ்யாவின் மனிதர்கள் குறித்த நிலைப்பாடுகளாய் செச்சின்யா, இலங்கை இனப்படுகொலைகளைக்கு இலங்கைக்கு ஆதரவு,சமீப சாதனையாய் கடாபிக்கு ஆதரவு நிலை போன்றவை ரஷ்யா, ஜப்பான் நாடுகள் தம்மை மீள் ஆய்வுக்குள் உட்படுத்திக்கொள்வதாக.

ஹிரோசிமா,நாகசாகி அணுகுண்டுகளையே பின் தள்ளி உலக அரங்கில் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட ஜப்பானும், அதன் மக்களின் உழைப்பும் இவைகளைக் கடந்து வரும் என்ற நம்பிக்கையில் ஜப்பானிய மக்களுக்கு மனிதநேயத்தோடு எனது வருத்தங்களை பதிவு செய்கிறேன்.

Wednesday, March 9, 2011

இந்த ஆள திருத்தவே முடியாது:)

ஒரு மனுசன் எப்படியெல்லாம் நாக்கை திருப்பலாமுன்னு படிக்கும் போது வரும் சிரிப்புக்கு அளவேயில்லை.நகைச்சுவை பதிவு போடும் பதிவர்கள்,பின்னூட்டத்துல பின்னுற ரிதமிக் டைமிங்காரர்களுக்கு கொண்டு வந்து கொட்டுறார் கருணாநிதி.சிரிப்பா சிரிக்கும் பொழப்ப நினச்சு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் இந்த பதிவு நகைச்சுவை பதிவில் இடம் பெறுகிறது:)

இனியும் கேட்கிறவன் கேனயன்ங்கிற நினப்புல உதிர்த்த முத்துக்கள்....

தி.மு.க கூட்டணியில் கட்சிகள் இணையும் போது நடக்கும் சில சாதாரண நிகழ்வுகளை வேண்டுமென்றே சில பத்திரிகைகள் திசை திருப்பி விட்டன. கூட்டணி அமைப்பதிலே இழுபறி, தயக்கம் என்றெல்லாம் நிலை இருப்பதாக நம்முடைய அன்பிற்குரிய பத்திரிகையாளர்கள் சில பேர் மிகமிக கேவலமாக ஆத்திரத்தோடு, பொறமையோடு, அசூயையோடு இந்த அணி உருவாக கூடாது, உறவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தால் தவறான செய்திகளை திசைதிருப்பல்களை செய்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நல்ல பதிலாக இன்றைய நாள் (காங்கிரஸ் உடன் கூட்டணி) அமைந்திருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகம் இன்று இந்த அணியிலே இருக்கின்ற கட்சிகள் இவைகள் எல்லாம் எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு, தோழமையோடு, நேசம் நட்பு இவைகளிலே நீங்காத பற்றுமு கொண்டவை என்பதற்கு எடுத்துக்காட்டாக தி.மு.கழகம் 121 இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் போட்டியிடுகின்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பாட்டாளி  மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க 31 இடத்திலே ஒரு இடத்தை விட்டு தந்து 30 இடங்களாக பா.ம.க தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதைப் போலவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் தான் இருந்தன. அவர்கள் ஒரு இடத்தை விட்டுக் கொடுத்து இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டனர். இவைகளை எல்லாம் கூட்டினால் தான் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்துள்ளன.
 
வடிவேலு தோற்றார் போங்க:)

Tuesday, March 8, 2011

ஹி...ஹி.....பேரம் படிஞ்சிடுச்சு:)

கேட்டீகளா கதையை!பேரம் படிஞ்சிடுச்சாம்.இனி நாங்க இரண்டு பேரும் அடிச்சும் ஆடுவோம்.அடிச்சுகிட்டும் ஆடுவோம்.வாழ்த்துக்கள் காங்கிரஸ்.

காங்கிரசுக்கு 63 தொகுதிகள்: குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

திமுக - காங்கிரசார் சாலை மறியலும் கல்லூரி பேருந்து விழாவும்

மாணவ,கல்லூரிப் பருவங்களை தாண்டி அம்மணிக கிட்ட அடிவாங்கும் வயதில் உள்ளவர்களோ அல்லது வாங்கி கட்டிக்க தயாரான நிலையில் இருப்பவர்களோ மாணவப் பருவ லூட்டிகளையெல்லாம் மறந்து விட்டு இன்று உத்தம புத்திரன்களாக பச்சையப்பன் கல்லூரி,சட்டக்கல்லூரி மாணவர்களுக்குப் பொறுக்கிப் பட்டம் கட்டி தங்களை கல்லெறியும் தகுதி படைத்தவர்களாக மாறிப்போகிறார்கள்.விதைப்பதுதான் முளைக்கும் என்ற அரிச்சுவடி புரிய வேண்டும்.இங்கே மேய்ப்பனே சரியில்லையெனும் போது ஆடுகளை ஏன் குற்றம் சொல்கிறீர்கள்?

மனிதனே மண்ணுக்குப் போகும் போது காலணி அபிஷேகம் பெறும் தலைவர்களின் படங்கள் செவ்வாய் கிரகித்திலா போய் பூஜை மடம் கட்டப்போகின்றன?மாமியா ஒடைச்சா மண்குடம் மருமக ஒடைச்சா பொண் குடமாங்கிற மாதிரி கல்லூரி மாணவன் கலாட்டாக்கள் நடந்தால் அப்படியே வந்து கோபம் அப்பிக்கொள்ளும்.சமூக ஒழுக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டியவன் சாலை மறியல் செய்தாலோ அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா கவுண்டமணிய பின்னூட்டப்பக்கத்துல உட்கார வச்சிக்க வேண்டியது.எத்தனை கரணம் போட்டாலும்,தில்லாலங்கடி செய்தாலும் இந்த முறை சங்குதான் என்பது தீர்ப்பாகி விட்ட ஒன்று.அதிலும் அவரவர் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இப்படியே தொல்லை கொடுத்தால் ஊ..ஊ.ஊஊன்னு சங்கு சத்தம் கடல் கடந்தும் கேட்கின்றது.

முதல்வன் படத்தில் ரகுவரன் நேர்காணலை ஹனிபா நிறுத்துன்னு வந்து மக்களுக்கு பிலிம் காட்டுவதுதான் நினைவுக்கு வருகிறது.இனி கவுண்டமணிகிட்ட போய் உட்கார்ந்து கொள்வதோ,பல்லைக்கடிச்சுகிட்டு எட்டிமட்டும் பார்த்து விட்டுப் போவதோ வந்ததுக்கு முய் வச்சிட்டுப்போறதும் அவரவர் விருப்பம்.பதிவுக்கான செய்தி இனி.....

திமுக - காங்கிரசார் சாலை மறியல்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் படம் வைக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இதனால் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் உள்ள முதல் அமைச்சர் கருணாநிதி, துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் படங்கள் எடுக்கப்பட்டன.

இதையடுத்து பெரம்பலூர் திமுக எம்எல்ஏ ராஜ்குமார், பெரம்பலூர் காங்கிரஸ் நகர மன்ற சேர்மேன் இளையராஜா ஆகியோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 200 பேர் இந்த சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து டி.ஆர்.ஓ. பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதற்கிடையே திமுக மேலிடமும், காங்கிரஸ் மேலிடமும் தங்கள் கட்சியினரை தொடர்புகொண்டு கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்குப் பிறகு சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் பேருந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

டிஸ்கி: பிளாக்குபவனும் பிளாக்மெயில் பண்றவனும் ஒண்ணா சேர்ந்ததா சரித்திரமே கிடையாது.

Monday, March 7, 2011

கருணாநிதி ,ஸ்பெக்ட்ரம்,தேர்தல்-ஓர் பார்வை

வழக்கமாக தமிழக தேர்தல் களம் சூடு பிடித்தே துவங்கி தேர்தல் முடிவில் கண்ணா ரெண்டு லட்டு தின்னு கொண்டாட்டங்களும்,தலையில் துண்டு போட்டுக்கொள்ளும் படலங்களும் நிரந்தரமான ஒன்று.சாராயம்,பிரியாணி, வெத்தலை பாக்கோடு பணம் திருட்டு ஜனநாயகமெல்லாம் புதிதாய் பிறந்தவை.மக்கள் விரோத ஜனநாயகத்தை அரசு இயந்திரமான தேர்தல் ஆணையமோ,மக்களின் சமூக அக்கறை கொண்டவர்களோ விரும்பவில்லை.இதனை விரும்புவர்கள் சுயநல நோக்கோடு தமது எதிர்காலம் சிறக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே.

இதில் அ.தி.மு.க தற்போது பதவியில் இல்லாவிட்டாலும் சமூக விரோத பங்கில் இந்தக்கட்சிக்கும் பங்குண்டே.இப்போதைக்கு ஆட்சியில் இல்லாத காரணத்தாலும்,கடந்த கால ஊழல்களோடு ஒப்பிடும் போது தி.மு.க வின் சாதனை பெறுவதாலும் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருப்பதாலும் விமர்சனத்தை தி.மு.க அரசு மீது முன்வைக்கலாம்.இரவு 9 மணி வாக்கில் ஜெயலலிதா-விஜயகாந்த் கூட்டணி உடன்படிக்கையை முடிவு செய்த அதே தினம் இரவு 12 மணிக்கு 60 சீட்டுக்கு ஒப்புக்கொண்டோம் ஆனால் காங்கிரஸ் 63 கேட்கிறார்கள் கூடவே தாம் விருப்பபடும் தேர்தல் இடங்களையும் கேட்கிறார்கள் இது நியாயமா என்று அறிக்கை விடுகிறார்.பக்கச்சார்பின்றி பார்த்தால் மத்தியில் தாம் விரும்பிய இடங்களை வாங்கும் போது கூட்டணி நியாயப்படி காங்கிரஸ் கேட்கும் 63ம் ஆட்சியில் பங்கு,விரும்பும் இடங்கள் என்பவை நியாயமானவையே.முழு மனதான கூட்டணி எனும் போது இவைகள் ஒரு பொருட்டே அல்ல என்பது அரசியல் நோக்கர்களுக்குப் புரியும்.பின் கூட்டணி முறிவு வரையிலுமான முடிவுக்குப் பின் புலமென்ன?

1.ஸ்பெக்ட்ரம் என்ற பூதத்தின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் உண்மைகள்.
2.அதனைத் தொடர்ந்த சி.பி.ஐ ரெய்டுகள்
3.கலைஞர் தொலைக்காட்சி ரெய்டும் பணமாற்றங்களும்,
4.ஒருவேளை இனியும் காத்திருக்கும் அதிர்ச்சிகளும்
5.தமிழக ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸின் கோரிக்கை

ஸ்பெக்ட்ரம் பூதம் கிளம்பாமல் இருந்திருந்தால் தமிழக ஆட்சியென்ற கோரிக்கையும் கூட தி.மு.கவின் நிர்வாக குழுவின் ஆலோசனைக்கு விடப்பட்டிருக்கும்.ஸ்பெக்ட்ரம் காலத்து தேர்தலில் தனக்கோ,தனது கட்சிக்கோ ஆபத்தும் வந்து விடக்கூடாது,அதே நேரத்தில் காங்கிரஸையும் தமிழகத்தில் கவிழ்க்கவேண்டுமென்ற இரவு 12 மணி அறிக்கை தி.மு.க அனுதாபிகள் பார்வையில் சாணக்கியன் என்ற அடைமொழி வியப்பும்,காங்கிரஸின் பார்வையில் நம்பினவரை கழுத்தருப்பவர் கருணாநிதி என்ற கோபமும் இருக்கும்.

தற்போதைய சூழலில் அ.தி.மு.கவுக்கான வெற்றி வாய்ப்புக்களை கருணாநிதியே வலிய உருவாக்கி கொடுத்துள்ளார்.இதில் தனிப்பட்ட மகிழ்ச்சியா என்றால் இல்லை.மனிதர்களின் முகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் சுயநலங்களை உண்ணாவிரதங்களும்,குஜராத்தின் பூகம்பத்துக்கு அள்ளிக்கொடுத்த தமிழகம் இறையாண்மை பொய் பேசி இனப்பழி சுமந்த கோபத்திலும் இயலாமை என்ற சொல்லுக்கும் அப்பால் சக மனிதனுக்கு குரல் கொடுக்கவே முயலாத காலங்களாய் இதோ ஸ்பெக்ட்ரத்தின் குரல்களாய் தனக்குத்தானே போட்டுக்கொண்ட மதியோ மத்திய அரசின் சதியோ ,சிலர் நம்பும் விதியோ

தீரா பழி சுமந்தாய் நீ!

Sunday, March 6, 2011

பதிவர்கள் தஞ்சாவூர் பொம்மைகளா?

ஒவ்வொருவருக்கும் ஒரு சார்பு மனப்பான்மையோடு உடன் பிறப்புக்களாகவோ,ரத்தத்தின் ரத்தங்களாகவோ இருப்பதில் தவறு இல்லை.ஏனென்றால் இவர்கள் ஒரு இசத்துக்கு மந்திரித்து விடப்பட்டவர்கள்.தமிழ்நாட்டு வாக்காளர்களின் மனநிலைகள் என்னவாக இருக்கும் என்பதற்கும்,பதிவுலக கோயபல்சுகளுக்கும் நிறைய இடைவெளி என்பதை முந்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நன்றாக விளக்கியும்,பதிவுலகின் பல்வேறு கோண கருத்துக்கள் வலம் வந்தும் பகுத்தறியும் திறன் இல்லாது நேற்று முதல்வர் கருணாநிதியின் இன்னுமொரு high risk stunt ஐப் பார்த்து ஆஹா!சாணக்கியன் என்றும் இதுமாதிரி தில்லாலங்கடி யாரால் இயலும் என்று புல்லரித்துப்போனவர்கள் நிறைய பேர் என்பதை பதிவுகள் சொல்லுகின்றன.கழக கண்மணிகளின் மனநிலைகளும் கூட இதே மாதிரி இருக்கவும் செய்யலாம்.வீரமணியின் மூலமான அலையோட்டம் பார்க்கும்  முன்னோட்ட அறிக்கைக்கும், தி.மு.கவின் முடிவை வரவேற்கிறோம் என்று திருமாவளவன் சொல்வதற்கும் சுயதேவைகளான லாபங்கள் இருக்கின்றன.ஆனால் பதிவர்களுக்கு சுயசிந்தனை என்ற ஒன்றைத்தவிர வேறு ஒரு லாபமுமில்லை.

முதல்வரின் நேற்றைய முடிவால் இதயம் இனிப்பவர்கள் இதோ இன்று பிரணாப்பும்,குலாம் நபி ஆசாத்தும் மறுபடியும் குடு குடுவென ஓடி வருகிறார்களாம்.வந்து இகிகீன்னு முகம் காட்டி கருணாநிதிக்கும் இதயம் இனித்து விட்டால் சார்பு பதிவர்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக்கொள்வார்கள்?உடைந்த கண்ணாடியை ஒட்டவைத்து பார்ப்பதிலும் மீண்டும் ஒரு உற்சாகம் பொங்கி வருமா?ஒரு வேளை ஸ்பெக்ட்ரமில் ஆப்பு வைத்து ராசாவை உள்ளே தள்ளிய கோபம் தணியாமல் அறிக்கை அறிக்கைதான்னு நின்றாலும் அங்கே ஜெயலலிதா ஆதரவுக்கரம் மத்தியில் திரட்டுகிறேன் என்ற வாக்கை காப்பாற்ற நினைத்தால் ரத்தத்தின் ரத்தங்கள்,வை.கோ,கம்யூனிஸ்ட்களின் எதிர்கால நிலைப்பாடு என்னவாக இருக்கும்?ஆதிக்க சக்திகள் என்பவற்றிற்கு பொருள் விளங்காமலும், வலிமையின் அதிகார மையங்களின்  இழுப்புக்கு தகுந்த மாதிரி மொத்த தமிழகத்தின் எதிர்கால சரித்திரமும் இன்னும் எழுதியாக வேண்டிய நிர்பந்தத்தில் தமிழகமா?

வலையுலகம் வலம் வரும் பதிவர்களே தஞ்சாவூர் பொம்மைகளாகும் போது கண்கட்டி விடப்பட்ட சாலைக்குதிரையாய் ஓடும் சராசரி தமிழனை குறை சொல்வதில் பயனில்லை.

Cool down babies!

நேற்று பயணத்தின் ஓட்டத்தில் மெல்லியதோர் மின்னலாய் ஒரு எண்ணம். பணி புரிந்து ஓய்வில் இருக்கும் அரசு,பொதுத்துறை பணியாளர்களுக்கு ஓய்வுக்கான அவகாசம் நிறைய இருக்குமே.இவர்களில் சமூக அக்கறையுள்ளவர்கள் பதிவிடவோ, பதிவுகளை காணவோ வருகிறார்களா? 

Saturday, March 5, 2011

சூப்பரப்பு யார்?

எப்ப பார்த்தாலும் எங்க ஊரு தாத்தாவையே குறை சொல்றதே இந்த பதிவர்களுக்கு வேலையாப்போச்சு.எத்தனை தாத்தாக்கள் நாடு முழுதும் இருக்கிறாங்க.யாராவது ஒரு ஆள்...ஒரு ஆள் வாய் திறக்கிறீங்களா?பிரணாப் முகர்ஜி நானெல்லாம் யூத்தாக்கும்ன்னு சொல்லிட்டு 10 தாத்தாக்களை மட்டும் சூப்பர் சிட்டிசன் அட்டவணையில் அறிமுகப்படுத்தியிருக்கார்.

ஏ.ஆர்.அந்துலே 81
முந்தைய மகாராஷ்ட்ரிய முதல்வர்,
இப்பொழுது லோக் சபா அங்கத்தினர்
சாதனை: மத்திய அமைச்சர்-சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்

சையத அலி ஷா ஜிலானி 81
இப்பொழுது: ஹரியத் கான்பரன்ஸ் சேர்மன்
சாதனை: எல்லா பார்ட்டியும் சேர்ந்த ஹரியத் கான்பரன்ஸ்

எல்.கே.அத்வானி 82
இப்பொழுது:பி.ஜே.பி பார்லிமெண்டரி பார்ட்டி சேர்மன்
சாதனை:துணை பிரதமர்

பிரகாஷ் சிங் பதால் 83
இப்பொழுது: முதல் மந்திரி,பஞ்சாப்
சாதனை:மத்திய விவாசயத்துறை மந்திரி

ஏ.பி.பர்தன் 85
இப்பொழுது: பொதுச்செயலாளர்,CPI
சாதனை: பொதுச்செயலாளர்

என்.டி.திவாரி 85
இப்பொழுது:ஹி...ஹி...Faded Congressman avoiding paternity case
(தமிழ் தெரியலீங்ண்ணா)
சாதனை: மறுபடியும் ஒரு ஹி...ஹி...இருந்தாலும் ஆந்திர கவர்னர்,உ.பி முதல்வர்

பால் தாக்கரே 85
இப்பொழுது:அவ்வப்போது ஐடியலிஸ்ட்,முழு நேர குடும்பத்தில் மூத்தவர்
சாதனை:கதி கலக்கும் சிவ சேனா

மு.கருணாநிதி 86
இப்பொழுது:முதல்வர்,தமிழகம்
சாதனை:முதல்வர்,முதல்வர்,முதல்வர்

ராம் ஜெத்மலானி 87
இப்பொழுது:ராஜ்ய சபா உறுப்பினர்
சாதனை:சட்டம்,நீதி மத்திய அமைச்சர்.

வி.எஸ்.அச்சுதானந்தன் 87
இப்பொழுது;முதல்வர்,கேரளா
சாதனை:முதல்வர்,கேரளா







இந்திய ஜனநாயகத்தில் ஓட்டைகள் நிறையத்தான்.படத்தில் உள்ள சாதனை மனிதர்களிடமும் கூட தில்லுமுல்லுகளும், தில்லாலங்கடிகளும் கூடவே அவர்களது தேச பங்கீடும்.இப்போதைய தேர்தல் களத்தை உற்று நோக்கினால் வெறும் நிறங்களை அடையாளம் காட்டி ஓட்டுப்போட்ட மக்கள் காலம்,பின் கட்சிகளின் அடையாளச்சின்னங்களில் முத்திரைக்காலம், இப்பொழுது கணினி மயமாக்கப்பட்ட தேர்தல்,தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம்,நீதித்துறையின் சுய அதிகாரம் என்று மொத்த நோக்கில் இந்தியாவும் இந்திய ஜனநாயகமும் முன்சென்று கொண்டிருக்கிறதென்ற நம்பிக்கையையும் கண்கள் பனித்தோ இதயம் கனக்காமலோ நம்புவோம்.படத்தின் உயர் குடிமகன்கள் அவர்களால் இயன்ற அர்ப்பணிப்பையும், அவரவர் சுயநலங்களையும் நம்மிடையே விதைத்திருக்கிறார்கள். இவைகளையும் கடந்து இந்திய ஜனநாயகம்  கருத்து சுதந்திரத்தோடு வீறுநடை போடும் என்ற நம்பிக்கையோடு இந்திய ஜனநாயகம் வாழ்க.

Friday, March 4, 2011

ராஜபக்சே,கடாபி மீதான போர்க்குற்றங்கள்

முந்தைய பதிவுகளில் ஒன்றில் லிபியாவுக்கு குரல் கொடுத்து விட்டு மழையுமில்லாமல் வெயிலுமில்லாமல் இரவில் குடை பிடிக்கும் கடாபி இன்னும் வில்ல்ங்கம் செய்வான் என்ற எண்ணத்தில் லிபியாவின் மக்களுக்கு அனுதாபம் சொல்லி முடித்து விட்டு இதுவரை மக்கள் குரலுக்கு டிமிக்கி கொடுக்கும் கடாபி மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல்,குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள்,ஐரோப்பிய நாடுகளின் நிலையைக் கவனித்தால் லிபியாவில் கடாபி மீதான சுருக்கு கயிறு இறுகும் காலம் வெகு தூரத்தில் இல்லையென்றே தெரிகிறது.சுய தேவைகளாய் பெட்ரோலிய எரிபொருளின் அவசியம் கொண்டு கடாபி குற்றம் சாட்டும் அல்கொய்தாவே கலகக்காரர்கள் என்பதனையும் புறம் தள்ளி விட்டு போர்க்குற்ற விசாரணக்கு தீவிரம் காட்டுவது புரிகிறது.மனித உரிமைக் குழு சார்ந்த நிகழ்ச்சி நிரலில் கூட ஈழ அவலங்கள் ஒலிக்காமலே போனது வருத்தம்.

அதற்கு முத்தாய்ப்பாய் போர்க்குற்றவாளி பிரகடனத்துக்காக புகைப்படங்கள்,யூட்யூப்,அமெச்சூர் காமிரா,குரல் ஒலிப்பதிவென்று கிடைப்பதெல்லாம் ஆவணப்படுத்தும் வேலை நடக்கின்றது.சி.என்.என்.பி.பி.சி, முக்கியமாக அல்ஜசிரா தொலைக்காட்சி செய்திகளின் படி நோக்கினாலும் இதுவரையில் இணையம் மூலமாய் வெளிவந்த ஆவணங்களாய் ஈழப்படுகொலையின் அவலங்களுடன் ஒப்பிடும் போது ராஜபக்சே கடாபிக்கும் முன்னால் தூக்கில் தொங்க வேண்டியவன்,ராஜபக்சேவை காக்கும் வேலி என்ன?தற்போதைக்கு கடாபியின் பதாகைகளுடன் ராஜபக்சேவின் படத்தையும் இணைத்து லிபியாவுக்கான குரலாக குரல் கொடுப்பது யாரிவன் கடாபியின் அண்ணனா?தம்பியா என்ற உலக பொது உணர்வு பலனையாவது  த்ரும்.

ஈழத்திற்கான குரலாய்  சர்வதேச ரீதியில் லிபியா போன்ற சந்தர்ப்பங்களில் அவ்வப்போது ஒலித்துக்கொண்டிருந்தால் மட்டுமே இன்றோ நாளையோ இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இதற்கான விடியலைக்காண இயலும்.அரசு என்ற கட்டமைப்பில் இலங்கை இயங்குவதன் காரணம் கொண்டே இலங்கை அரசுக்கு உலகரீதியாக சாதிப்பது எளிதாக அமைகிறது.இராணுவ ரீதியாக பிரபாகரன் கட்டமைப்பில் சில விகிதாச்சாரம் கூட அரசியல் ரீதியாக தற்போது முன் நகர்த்தி செல்ல இயலவில்லை என்பதே உண்மை. ஒன்றிரண்டாக அமிதாப்பச்சனை உணரவைத்ததும்,ராஜபக்சேவை லண்டனிலிருந்து துரத்தியது மட்டுமே இப்போதான சாத்தியங்களானவை.

இலக்கிய முகமூடிகள் அணிந்து கொண்டு புலியெதிர்ப்பு செய்தவர்களின் முக விகாரங்கள் மது,பெண்ணுடல் என்று போதைக்குள் பல்லிளிக்கின்றன. இப்படியான இங்கொன்றும் அங்கொன்றுமாய் இதிகாசமாய்த் தொடரும் எட்டப்பன்களை இனி மேல் துணிவாக பொதுக்கருத்துக்களில் புறம் தள்ளலாம்.பல சுழிவுகளில் மெல்ல நகரும் தமிழகம் ஈழத்திற்கு வரமா? சாபமா?

Thursday, March 3, 2011

பாரதிராஜா,இளையராஜா,கங்கை அமரன்,வைரமுத்து,மலேசியா வாசுதேவன்

நேற்று முதல் மரியாதை திரைப்படத்தில் பூங்காற்று திரும்புமா என்று இளையராஜாவின் மனதை அள்ளும் இசையில் மலேசியா வாசுதேவன் பாடுவதைக் கேட்டதும் தமிழ் திரையுலகம் மலேசியா வாசுதேவனை இழந்தது மட்டுமல்லாமல் நட்பு என்ற சொல்லுக்கு இலக்கணமாக இருக்கவேண்டிய தலைப்புக் கட்டுக்காரர்களின் நட்பும் திசை மாறிப்போய் விட்டது என்ற சோகம் என்னை அப்பிக்கொண்டது.தனி மனிதர்களாக இவர்களுக்கு நட்பின்  ஆழம் குறைந்த இழப்பும் இசையில் தமிழகத்துக்கு பேரிழப்பும் என்ற உணர்வு.

இளையராஜா இசையை பலவிதமாக யாரும் பரிட்சித்துப்பார்க்காத விதத்தில் தமிழுக்கு தந்திருந்தாலும் எம். எஸ். விஸ்வநாதன், கண்ணதாசன், டி,  எம். சௌந்தர்ராஜனின் கூட்டுக்கலவையில் தொனிக்கும் இதம் மிக அதிகம்.வைரமுத்துவின் குரலில் ஒலிக்கும் தமிழின் இசை அவரது திரைப்படப் பாடல்களில் இல்லை.கூடவே பரிசுக்கு பாடும் புலவன் போல்  வைரமுத்து முதுகொடிந்து போனதில் இன்னும் அதிக சோகம்.பாரதிராஜாவின் கேமிரா பார்க்கும் கோணமும்,இளையராஜாவின் சப்த நாதங்களும் ஒன்றிணைந்தாலும் அங்கே வைரமுத்துவின் வைர வரிகள் காணாமல் போய் விடுகின்றது.கண் மூடினால் கண்ணதாசனின் வரிகள் சொல்லும் வார்த்தையின் இயல்புக்கு இதுவரையிலும் எந்த தமிழ் திரைக்கவிஞனும் இணையில்லை.

பணம்,புகழ் சேர்ந்தவுடன் பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து, கங்கை அமரன், மலேசியா வாசுதேவன் கூட்டத்தை ஈகோ என்ற குணம் பல திசைகளிலும் அலைக்கழித்து விட்டிருக்கலாம்.இவர்களின் கூட்டு கலைந்து போனதின் ரகசியம் இவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் பிரிவுக்குப் பின்னும் கூட எம்.எஸ்,விஸ்வநாதனின் இசை அர்ப்பணிப்பு போலவே இளையராஜாவின் தனி ஆவர்த்தனத்தையும் உணர்கிறேன்.

கல்லூரிக்காலங்கள் ஹார்மோன் சுரப்பியின் பொற்காலங்கள்.

கல்லூரிக் காலங்களில் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார்கள் எந்தக் கல்லூரியில் சேர்கிறார்கள் என்பதை விட பொதுவாக கல்லூரிக் காலங்கள் படிப்புடன் கூடிய கலாட்டாக் காலங்கள் என்பதே சரியான பார்வையாய் இருக்கும்.

பச்சையப்பன் கல்லூரியின் கீழ்ப்பாக்க வளாகம்,சட்டக்கல்லூரியின் பாரிஸ் கார்னர் போன்ற நகரின் முக்கிய இட அமைப்புக்களே இவ்விரு கல்லூரிகளின் பெயருக்கு களங்கம் விளைவிக்கிறதென்பேன்.ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் தரமணி கலாட்டாக்கள் வெளியே வருவதில்லை.ராகிங் என்றால் மருத்துவக்கல்லூரிதான் என்ற பெயரெல்லாம் மக்கள் மனதில் பதிந்ததில்லை.கஞ்சாவும்,போதை மருந்துகளும் சரளமாகப் புழங்கிய இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற கல்லூரி வளாகத்துக்குள் சம்மணம் போட்டு வெறும் பார்வையாளனாக இருந்த அனுபவம் எனக்குண்டு.இவைகள் அனைத்தும் கல்லூரி வளாகம் என்ற சுற்றுக்குள் விளைவதால் சமூகம் இதற்கெல்லாம் பொறுப்பேற்பதில்லை.ரயில் தொழிலாளர்களுடன்,பேருந்து இயக்குபவர்களுடன் தகராறு என்பதும் பேருந்து தினம் பொது மக்களுக்கு இடையூறு என்ற காரணம் கொண்டே மாணவர்கள் விவாதப்பொருளாகிறார்கள்.

விவேகானந்தா கல்லூரி மாணவர்களும் கூட பேருந்து நாளை அதே கோலாகலத்துடன் கொண்டாடியதாக அறிந்தேன்.கலாட்டா செய்தாலும் சமத்து பசங்க பெயர் சிலருக்கு இயல்பாய் வந்து விடுவதும், உரிமைக்கும், மொழிக்கும் கூடவே கொஞ்சம் கலவரங்களுக்கும் இடம் கொடுப்பதால் இரு கல்லூரிகள் ஓரம் கட்டப்படுவது வேதனைக்குரியது.இதனையும் கடந்து இந்தக்கல்லூரிகள் தங்கள் பங்களிப்பை சமூகத்திற்கு அளித்திருக்கிறது.

என்னமோ ஏனைய கல்லூரி மாணவர்கள் மட்டும் வாழ்க்கை கடலில் நீந்தி கடந்து விடுவது போலவும்,இவ்விரு கல்லூரி மாணவர்களும் சமுதாய ரவுடிகளாகிப்போவதும் மாதிரியான பிம்பங்கள் சரியென படவில்லை.முதலில் ரவுடியிசம் என்பது குவாரி,மணல்,துறைமுகம் இன்னும் பல தொழில் சார்ந்த கட்டிங்க்,வசூல் எதிர்க்குழு வெட்டு குத்து என்பவற்றோடு அரசியல்வாதியின் பெரும் கடலில் தஞ்சம் என்பதில் சங்கமமாகிறது என்பதோடு ரவுடியிசத்தின் மொத்த குத்தகைக்காரர்கள் அரசியல்வாதிகளே என்ற புரிதல் வேண்டும்.இந்த அரசியல் இலக்கணத்துக்குள் பெரும்பான்மையான ரவுடியிசம் வந்து விடும்.

விமர்சனங்களில் மாட்டிக்கொண்டும் பதிவர்கள் சொல்லும் அவரவர் சார்ந்த கருத்துக்கள் மன உணர்வின் வெளிப்பாடு என்ற நோக்கில் சரியென்றால் கல்லூரி கலாட்டக்களும் அவர்களது வயது சார்ந்த,இளமை, குழு சார்ந்த நோக்கில் சரியானதுதான்.இதற்கு எதிர்வினை செய்ய யாராவது துடித்தால் வின் தொலைக்காட்சியில் எஸ்.வி.சேகர் இது குறித்து கருத்து சொன்ன டி.சியக்கொடுத்து அனுப்பினாலும் தப்பில்லங்கிற கருத்து மாதிரி சுய அளவீடுகளோடு விமர்சனம் செய்பவர்கள் என்பேன்.சேர்ந்து வாழும் மனோபாவத்துக்கு நல்ல உதாரணங்கள் பள்ளி வாழ்க்கையும்,கல்லூரி வாழ்க்கையும் என்பேன்.இது தொழில்,அலுவலகம் என்று மேல் நோக்கி நகரும் போதும் வாழ்க்கையில் ஒரு வேளை பிரதிபலிக்கலாம் அல்லது வாழ்க்கை தரும் பாடங்களில் மாறியும் போகலாம்.எதுவும் உத்தரவாதமானதல்ல. 

குறும்புகள் என்பவை ஒரு சில நண்பர்களோடு சேர்ந்து வரும் உடல் தசைகளின் குஸ்தி.கலாட்டாக்கள் என்பது குழு என்ற கூட்ட உணர்வின் வெளிப்பாடு.கல்லூரிப்பசங்கன்னா குறும்பு,எதிர்பால் ஈர்ப்பு,கேளிக்கைன்னு இருந்தாலும் பரிட்சைக்கு 10 நாட்கள் முன்பாவது பாடப்புத்தகத்தை படிக்கும் பொறுப்பு வந்து விடும்.சோடாப்புட்டி கண்களோடு முதல் வகுப்பு மாணவர்கள் விதிவிலக்குகள் என்பதால் இது பொதுவான மாணவனுக்கான பார்வையாக நோக்குவது நல்லது.

நடு நிசி நாய்களை விமர்சிக்கும் இக்கால பதிவர்களை விட நடுநிசி சாயா குடித்தாவது தேர்வின் வெற்றியை தேடும் பொறுப்பானவர்கள்தான் மாணவர்கள்.பதிவுலக கொட்டங்கள்,சண்டைகளை விட மாணவர் கலாட்டக்கள் அந்த அந்த காலகட்டத்தோடு மறைந்து விடும் ஒன்றுதான்.அதோடு வாழ்க்கையின் போராட்டங்களோடு சங்கமிப்பதில் மாணவன் என்பவனே அடையாளம் தெரியாமல் போய் விடுகிறான்.இவனை பிற்காலத்தில் எங்கே தேடி கண்டுபிடிப்பீர்கள்?


ஆமா! இந்த பேருந்து தினம் எப்ப எப்படி முளைச்சது?எப்படியோ முளைச்சிடுச்சு அதனை சீராக எப்படி வளர்ப்பதென்பதில் இனி  கவனம் செலுத்தலாம்.ஜல்லிக்கட்டுல கூடத்தான் மாட்டுக்கு சாராயம்,மொளகாய்ப் பொடி தில்லுமுல்லுக நடக்கிறதா கேள்விப்படுகிறேன்.அதற்காக ஜல்லிக்கட்டே வேண்டாமென்றா நீதித்துறை தீர்ப்பு சொல்கிறது.கல்லூரி பேருந்து தினமும் ஒழுங்கு படுத்த வேண்டிய ஒன்றே.பயணத்திற்கே மூச்சுத்திணறும் பொதுமக்களின் 2 ட்ராக் பயண பாதையில் மாணவர்கள் குறுக்கீடே முதல் அத்துமீறல் என்பேன். 

கல்லூரிக்காலங்களில் பெண்கள் எவ்வளவு பொறுப்பாக வீடு,கல்லூரி,டிபன் கேரியர்,கர்சீப்,படிப்பு,சிலருக்கு மெல்லிய காதல்ன்னு ஸ்மார்ட்டா இருக்காங்க.ஆனால் அடிப்படியும்,குடும்ப அரவணைப்புமென்று இவர்கள் வட்டம் குறுகிப்போகிறது.கலாட்டாகள்,தேடல் என்பவற்றோடு மாணவன் சமூக டாமினேசியாகிறான்.A paradox of Iife.

டிஸ்கி: கண்ணுகளா!பதிவில் சொன்னமாதிரி பச்சையப்பன் கல்லூரி கீழ்ப்பாக்கத்தில் என்பதும்,சட்டக்கல்லூரி பாரிஸ் கார்னரில் என்பதும் தவிர அதன் சுவர்களின் முழு திசைகள் கூட நான் அறியேன்.கூடவே முன்பு கல்லூரிப்போராட்டங்களை கண்டு எரிச்சல் பட்டுக்கொண்டு ஒரு கல்லையும் கூட எறியாத அகிம்சைவாதி நான்:)