Followers

Wednesday, August 31, 2011

மரணதண்டனைக்கும் அப்பால்!

இந்திய அரசியலமைப்பு சட்டம், பாராளுமன்றம், குற்றவியல், நீதித்துறை, மக்களாட்சி போன்ற ஜனநாயகத்தின் தூண்கள் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடை முக்கியமான ஒரு கால கட்டத்திற்கு வந்துள்ளது.இதற்கு முன்பும் நீதிமன்ற மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட சான்றுகள் இருந்தாலும் முந்தைய பிரதமர் ராஜிவ் காந்தி மரணம் நிகழ்ந்த விதம்,சோனியா குடும்பத்தாரின் அரசியல் பங்கீடு மற்றும் காங்கிரஸ் விசுவாசிகளின் அழுத்தம்,நீதிமன்ற தீர்ப்பின் காலகட்டம், தமிழர்களின் உணர்வு போன்றவை மரணதண்டனை குறித்தான  புதிய கேள்விகளைஉருவாக்கி உள்ளது.

 ஒருபக்கம் மரணதண்டனையை நிறுத்துவது குற்றங்களை ஊக்குவிக்கும் என்றும்,இன்னொரு பக்கம் ஒரு உயிரைக் கொல்லும் அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு இல்லையென்ற மனித உரிமைக்குரல்கள் என்ற இருபக்கங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றும் கூட ஒரு நீதிபதி மரணதண்டனை விதித்தால் மட்டுமே இன்னொருவன் குற்றங்களுக்கு பயந்து குற்றம் செய்ய மாட்டான் என்று NTDV யில் கருத்து தெரிவித்தார்.தேசிய அளவில் தமிழக மக்களின் குரலும், மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்க வேண்டுமென்ற அ.தி.மு.க அரசின் சட்டசபை தீர்மானமும் இன்னும் தலைக்கு மேல் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் மரணதண்டனை இடைக்கால தடையும் என்ன பாதிப்புக்களை உருவாக்கும் என்ற கருத்துரையாடல் என்.டி.டிவியில் நிகழ்ந்தது.

மரணதண்டனைக்கு ஆதரவாக சுப்ரமணியன் சுவாமி,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி, ராஜிவ் காந்தி கொலைவழக்கை துப்பு துலக்கிய கார்த்திகேயனும்,மரணதண்டனைக்கு எதிரான குரலாக வழக்கறிஞர் வைகை,மீனா கந்தசாமியும் குரல்கொடுத்தார்கள்.நீதிமன்ற தீர்ப்பின் சார்பாக ஜெசிகா லால் கொலைவழக்கில் தீர்ப்பு வழங்கிய முன்னாள் நீதிபதி ஆர்.எஸ்.சோதி(R.S.sodhi)யும் பங்கு பெற்றார்கள்.பர்கா தத்தின் நிகழ்ச்சியின் முன்னுரையாக கிரிமினல் லாயர் ராம் ஜெத்மலானி மரணத்தின் வலி 30 வினாடிகள் என்றும் 11 வருடங்கள் தாமதிக்கப்பட்ட கருணைமனு ஆயிரம் மரணதண்டனைகளுக்கு சமம் என்ற தொலைபேசி வாக்கியங்களோடும், சோவின் நிலைப்பாடான மூவருக்கான நீதிமன்ற இடைக்காலத்தடை போல் மற்றவர்களும் கேட்பார்கள் என்ற பெருந்தன்மையான கவலையுடனான  கருத்துரையாடல் துவங்குகிறது.

கலந்துரையாடலில் சுப்ரமணியன் சுவாமி  தனது வாதத்திற்கு துணையாக இந்திய ராணுவம் இலங்கை சென்றது பற்றியும் விடுதலைப்புலிகள் மீதான வெறுப்பைக் காட்டினாலும் மரணதண்டனைக்கு எதிரான தமிழர்களின் குரலின் பின்ணணியில் சோனியா காங்கிரஸின் இலங்கைப் போர்க்குற்றங்களுக்கான ஆதரவு இருப்பதை பதிவு செய்யாமல் மூவரின் மரணதண்டனை இடைக்கால தடையை அப்சல் குருவின் மரணதண்டனையோடு ஒப்பிட்டு மட்டுமே விவாதம் முடிவடைகிறது.

ஆங்கில வாதங்களை நேரில் காண நேரமுள்ளவர்கள் இங்கே போய் கேட்கலாம்.

http://www.ndtv.com/video/player/news/rajiv-killers-should-they-hang/209435

(ஒருவேளை இன்னும் சில தினங்களில் தொடுப்பு நீக்குவார்கள் என்று இணைக்கவில்லை)

நேரம் இல்லாதவர்களுக்கும் பதிவுக்கு இணைய பூ சர்க்கரையாக...

பர்கா தத் முன் வைத்த முதல் கேள்வியாக ரேணுகா சவுத்ரியிடம் இடைக்கால தடை குறித்து நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்பதற்கு காங்கிரஸ் நிலைப்பாட்டில் பதவி சுகம் அனுபவிப்பவர் என்ன சொல்வார் என்று சொல்லத்தேவையில்லை.இருந்தாலும் தமிழக சட்டசபை தீர்மானம் தமிழக அரசைப்பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம்.இந்திய பிரஜையாக இது குறித்து கவலைப்படுகிறேன் என்றார்.

ரேணுகா சவுத்ரியின் கருத்துக்கு சுப்ரமணி சுவாமி ஏன் சிரித்தீர்கள் என்று பர்காதத் கேட்டதற்கு முன்பொரு முறை 2G விவாதத்தில் ஜெயந்தி நடராஜனுக்கு சட்டம் தெரியாது என்று மூஞ்சியை கிழித்த மாதிரியே ரேணுகா சவுத்ரிக்கும் ஒன்றும் தெரியாது என்ற சுப்ரமணியன் சுவாமி தமிழக சட்டமன்ற தீர்மானம் மக்கள் அழுத்தங்களுக்கு பயந்த கோழைத்தனமானது என்றும் இதனால் எந்த தாக்கமும் இல்லையென்றார்.(It has a no impact at all)தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானதா என்ற கேள்வியை ரேணுகா சவுத்ரியிடம் பர்காதத் திருப்ப இதுபற்றி தான் ஒன்றும் சொல்வதற்கில்லை என ரேணுகா தப்பித்துக்கொண்டார்.சுப்ரமணியன் சுவாமி ஒரு சிரிப்பை காமிராவுக்கு தந்தார்.


அடுத்து வழக்கறிஞர் வைகை அவர்கள் மூவரும் தடா மீதான குற்றத்தில் தண்டனை விதிக்கப்பட வில்லையன்றும்,கொலைக்குற்றம் தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்றும் தமிழக சட்டசபை தீர்மானம் கோழைத்தனமானது அல்ல என்றும் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பது சட்டசபையின் பணியென்றும் வாதித்தார் வழக்கறிஞர் வைகை.பர்கா தத்தின் அடுத்த கேள்வியான மரணதண்டனைக்கு எதிரான குரலாக ஒலிக்கிறீர்களா அல்லது வெளிப்படைத்தன்மையில்லாத தீர்ப்பின் அடிப்படையில் வாதிக்கிறீர்களா என்றதற்கு 1998ம் வருடத்தில் கொலை குற்றத்திற்கு 1999ல் கருணைமனு கவர்னரால் நிராகரிக்கப்பட்டு 2000ம் வருடம் முதல் நிறுத்திவைக்கப்பட்ட காலம் கடத்திய அடிப்படையிலே தனது கருத்து என்றார்.

திரும்பவும் பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் கேள்வி எழுப்ப முந்தைய அரசுகள் காலம் கடத்தின என்றும் இதே கருணைமனுவை அப்சல்குருவும் கேட்க கூடும் என்றார்.

அடுத்து முன்னாள் ஜஸ்டிஸ் ஆர்.எஸ்.சோதியிடம் பர்காதத் திரும்ப நீதிமன்ற தீர்ப்பை மாற்ற இயலாதென்றும் இங்கே பிரச்சினையென்னவென்றால் கால தாமதமாக்கப்பட்ட தீர்ப்பு என்று குறிப்பிட்டார்.இரண்டு வருட கால தாமதமான மரணதண்டனையே ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளதென்றும் மூவரின் மரணதண்டனையின் காலம் 11 வருடங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளதென்றும் சொன்னார்.பர்கா தத்தின் மறுகேள்வியான இந்த மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்ற முடியுமா?முடியாதா என்ற கேள்விக்கு ஆம் என்று ஆர்.எஸ்.சோதி பதில் அளித்தார்.

இப்பொழுது முன்னாள் சி.பி.ஐ அதிகாரியும்,ராஜிவ் காந்தி கொலைவழக்கின் காலங்களை நினைவுபடுத்துபவருமான கார்த்திகேயனிடம் பூனைக்குட்டி இப்பொழுது வெளிவருமென்று கவலைப்படுகிறீர்களா என்றதற்கு (Are you worried about the pandora box will be opened now?) நான் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லையென்றும்,மூவரின் மரணதண்டனை நீக்கப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியே என்றும்,தான் தனது கடமையைச் செய்தேன் என்றும் சொன்னார்.மேலும் மூவரின் கருணைமனுவை ஏற்பதற்கு சமூகம், குற்றங்களுக்குப் பின்பான நடத்தை,இதனை விட தாம் செய்தது தவறு என்ற ஒப்புதல் மட்டுமே கருணை மனுவுக்கு தகுதியானது என்றார்.

இந்த நேரத்தில் கார்த்திகேயனின் போலிஸ் மூளை எப்படி வேலை செய்து வழக்கின் ஓட்டைகள் போலவே சிக்கலில் கொண்டு சேர்க்கும் எனபதற்கு நீண்ட வாசிப்பு ரசனையுள்ளவர்களுக்கு பழைய நாவலான சிட்னி ஷெல்டனின் அதர் டைட் ஆஃப் மிட்நைட் (Other side of midnight by Sidney Shelton) புத்தகத்தின் இறுதிப்பகுதி க்ளைமேக்ஸ் கதையின் ட்விஸ்ட்டை சிபாரிசு செய்கிறேன்.
 
இதுவரையிலும் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் கார்த்திகேயன், சுப்ரமணியன் சுவாமி,ரகோத்தமன் என்ற மூவரின் கருத்துக்களும்,ஜெயின் கமிசன் தீர்ப்பு,திருச்சி வேலுச்சாமி,சி.பி.ஐ முன்னாள் ஆய்வாளர் மோகன்ராஜ் போன்றவர்களின் அடக்கி வாசிக்கப்பட்ட மாற்றுக் கருத்துக்களும் இன்னும் வெளிப்படையான உண்மைகள் வெளி வராமலேயே நீதிமன்றத் தீர்ப்பின் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பர்காத்தின் கேள்வியான பேரரறிவாளனின் தாய் தனது மகன் கொலையின் சதித்திட்டம் பற்றி அறிந்திருக்கவில்லையென்றதற்கு சுப்ரமணியன் சுவாமியின் அகந்தையான பேச்சு (Arrogance of...we go as per supreme court judgement and not mother's judgement or girl friend's judgement)உச்சநீதி மன்ற தீர்ப்புதான் தனக்கு முக்கியமென்றும்,தாய்,பெண்நட்பு,ஆண்நட்பு தீர்ப்பையெல்லாம் கணக்கில் கொள்ளவியலாது என்றும் மூவரும் கருணைக்கு தகுதியில்லாதவர்கள் என்றும் கூறினார்.
 
பர்காத்தின் கேள்வி மீனா கந்தசாமி என்பவரிடம் திரும்புகிறது.இலங்கை தமிழர்கள் பற்றிய அனுதாபங்கள் தமிழர்களுக்கு இருந்தாலும்,ஒரு தேசிய தலைவரின் கொலைக்கும் அப்பால் இடைக்காலத் தடைக்கான தமிழக மக்களின் மகிழ்ச்சி இந்திய தேசிய உணர்வுக்கு எதிரான ஒன்றாக இருக்குறதே என்பதற்கு மீனா கந்தசாமியின் பதில்.

ராஜிவ் காந்தியின் குற்றவிசாரணை அரசியல் வாதிகளின் முகத்திரையையும் கிழிக்க வேண்டும். பேரறிவாளன் பேட்டரி கொடுத்ததாக வழங்கப்படும் நீதி நியாயமாக இருக்காது.பம்பாய் குண்டு வெடிப்புகளின் போது முஸ்லீம்களின் ஓட்டுரிமையை நீக்க வேண்டும் என்பது போன்ற நிலைப்பாடு நீதியைப் பெற்றுத்தராது.ஒருவேளை ராஜிவின் கொலை தற்கொலை தாக்குதலாக இல்லாமல் வேறு அரசியல் காரணங்களுக்காக இருந்தால் இதுவரை தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனை குறித்த நீதி என்ன?நளினியின் தாய் மருந்து வாங்கிய பார்மசி பில்லின் அடிப்படையில் கூட கைது செய்யப்படும் போது என்ன நீதியை எதிர்பார்க்க முடியும்?இன்றைக்கு நான் பேரறிவாளன் சார்பாக பேசுவதால் நான் கூட சதித்திட்டத்துக்கு உடந்தையென்பதா நீதி?அரசியல் பெரும்புள்ளிகளின் கோணமெல்லாம் விசாரணையில் மறைக்கப்பட்டுவிட்டது என்றார்.

பர்காதத் சுப்ரமணியன் சுவாமியிடம் மீனா கந்தசாமி சுட்டிக்காட்டும் கொள்கை முரண்கள்( Idealogy differences) பற்றி வேறு ஒரு நிகழ்ச்சியில் பேசலாம் என்றார்.

மீண்டும் ஆர்.எஸ்.சோதி  நீதிமன்ற தீர்ப்பு மாற்றமில்லாதது என்று சட்டம் குறித்து சொன்னதற்கு சுப்ரமணியன் சுவாமியின் முகத்தில் சிரிப்புடனான மரணத்தை ரசிக்கும் மகிழ்ச்சி தென்பட்டது

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் எம்.எல்.ஏ அப்சல் குருவின் மரணதண்டனை பற்றிக் குறிப்பிடும் போது தமிழக சட்டசபையின் தீர்மானத்தில் காஷ்மீர் மக்களும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளதென்றார்.

அப்சல் குருவின் மரணதண்டனை பற்றி காஷ்மீர் மக்களும்,சட்டசபையுமே தீர்மானிக்க வேண்டிய ஒன்று என்ற போதிலும் ராஜிவ் காந்தியின் ம்ரணம்,நீதிமன்ற தீர்ப்பு,தமிழக சட்டசபையின் தீர்மானம் போன்றவை இலங்கையை சுற்றிய ஒன்று என்பதும் இலங்கை குறித்த போர்க்குற்றங்கள் பின் தள்ளப்படுவதற்குமான துவக்கமாகக் கூட இந்திய அளவில் காஷ்மீருடனும், பாகிஸ்தானுடனும் அப்சல் குருவின்  தீர்ப்பை இணைக்கும் ஆபத்துமுள்ளது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

சுப்ரமணியன் சுவாமியின் வாதப்படி இந்தியாவிடம் இருக்கும் குற்றங்களுக்கான எதிர்ப்பு கருவியாக விளங்குவது மரணதண்டனை மட்டுமே என்றார்.முந்தைய கால கட்டத்தில் மரணதண்டனை குற்றங்களுக்கான எதிர்ப்பு சக்தியாக விளங்கியிருக்க கூடும்.ஆனால் இப்பொழுது உயிரையும் மதிக்காத தற்கொலைத் தாக்குதல் நிகழும் கால கட்டத்தில் மரணதண்டனை எப்படி எதிர்ப்பு கருவியாக பயன்படும் என்று மீனா கந்தசாமி எதிர்க்கேள்வியை முன் வைத்தார்.

இன்னும் எத்தனை விவாதங்களை முன் வைத்தாலும் ராஜிவ் காந்தியின் படுகொலை தவறான ஒன்று என்பதிலும்,ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை முற்றுலுமாகப் புரட்டிப்போட்டு விட்ட நிகழ்வு என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கொள்ல இயலாது.அதே வேளையில் முந்தைய பிரதமர் என்ற ஒரே காரணத்துக்காக தமிழர்கள் கொடுத்த உயிர்ப்பலிகளின் விலையும் அதிகம்.இந்தக்கோட்டிலிருந்து விலகியும்,ராஜிவ் காந்தி இலங்கை ராணுவ அணிவகுப்பில் அவமதிப்பை சந்தித்தும், இலங்கைக்கான உதவியும்,அது இந்தியாவையே மீண்டும் வந்து தாக்கும் பூமராங் என்பதையெல்லாம் எந்த தொலைக்காட்சிகளும் முன்வைத்து விவாதிப்பதில்லை.
 
ராஜிவ் காந்தியின் கொலைக்குற்ற விசாரணக்குப் பின்பான மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கு தடா போன்ற சட்டங்கள் எல்லாம் பயன்படுத்தி வாய்மூடிகளாய் போன தமிழர்களின் குரல் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைகளுக்குப் பின் மீண்டும் எழுந்துள்ளது.முந்தைய தி.மு.கவின் அரசியல் நிலைப்பாட்டால் ஆட்சி இழப்பு போன்ற நிகழ்வுகள் நடந்த உள்குத்து வேலையையும்,மக்களின் குரல்வளை நெரிக்கும் திட்டங்களும் கூட காங்கிரஸாலும்,சுப்ரமணியன் சுவாமி போன்றவர்களின் மரணதண்டனைக்கு ஆதரவாளர்களாலும் தமிழர்களின் முதுகில் குத்தும் வேலையாக பின்புலத்தில் நிகழ்த்தப்படக் கூடுமெனபதை இவர்களின் எண்ண வெளிப்பாடாக வெளிவருகின்றன.இதனை விட முக்கியமாக பேரறிவாளன்,சாந்தன், முருகனின் மரணத்தின் தூக்கு கயிறு இன்னும் முற்றிலுமாக நீக்கப்பட வில்லையென்பதையும் தமிழர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

பட உதவி: கூகிள்

.

Tuesday, August 30, 2011

3 பேரை தூக்கில் போட்டா எதிர்ப்பதில் தப்பேயில்லை!

நாயகன் படத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பேயில்லை என்ற வசனம் பிடிக்காதவர்கள் சுப்ரமணீயன் சுவாமி,சோ,என்.ராம்,ராம கோபாலன் போன்ற இந்துத்வாவாதிகள்.இந்த லட்சணத்தில் இவர்கள் இன்று போய் நாளை வா என்ற ராமயாண கலாட்சேப காதலர்கள வேறு.

விடுதலைப்புலிகள் மீதான கோபம் அவர்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கோ,மசூதிகளிலிருந்து விரட்டப்பட்டார்கள் என்ற இஸ்லாமியர்களுக்கோ இன்னும் சொல்லப்போனால் சோனியா குடும்பத்திற்கோ கூட இருக்க கூடும்.இந்துத்வா பெயரில் திரியும் இண்டலக்சுவல் உளவியல் தீவிரவாதிகளுக்கு என்ன கோபம் இருக்க முடியும்? ராஜிவ் காந்தியை நண்பேண்டா சொல்வேன் என்று சுப்ரமணியன் சுவாமி சொல்ல முடியாதபடி சோனியாகாந்தி பற்றிய உண்மைகளோ அல்லது அவதூறுகளோ உங்கள் உதடுகளில் உதிர்த்த முத்துக்களாகவும்,எழுத்தாகவும் இணையம் முழுதும் கொட்டிக்கிடக்கிறது.என்.ராம்க்கு லங்கா ரத்னா கழுதைக்கு குட்டி சுவர் பரிசே சாட்சி.

விடுதலைப் புலிகள் இல்லாமல் இலங்கை தமிழர்கள் பற்றி விவாதிக்க இயலாது என்ற போதிலும் ஆயுதப் போராட்டத்துக்கு எதிர் என்ற முகமூடியிலாவது சோ போன்ற பத்திரிகையாளர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய இயலும்.இப்பொழுது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட விட்ட நிலையில் மக்க்ள மீதான மகத்தான அன்பு கொண்டவனாக இருப்பவன் அடக்குமுறைக்கு எதிர்த்து குரல் கொடுப்பவனாக இருப்பவனே உண்மையான பத்திரிகையாளன். போபர்ஸை வெளிக்கொண்டு வந்த ஆர்வம் இலங்கைத் தமிழர்களின் துயரங்களில் காட்டாமல் போனதன் காரணம் என்ன?இதோ தமிழகத்தில் நிகழும் பேரறிவாளன்,சாந்தன்,முருகன் மரணதண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலிக்கும் போது மூவரின் மரணதண்டனையை ரத்து செய்வதை எதிர்த்து  உங்களின் ஒட்டு மொத்த குரல் ஒலிப்பதன் காரணம் என்ன?

கலைஞர் கருணாநிதி அவரது சுயநலத் தேவையின் கணங்களில் மட்டுமே உதிர்க்கும் தமிழன் பார்ப்பனன் என்ற பிரிவினை உங்கள் ரத்த நாளங்களிலும் ஊறிக்கிடக்கிறதா?கமல்,ஞாநி,வாலி போன்றவர்கள் பூணூல் துறந்த மகத்தான மனிதர்களாக வலம் வரும்போது உங்களுக்கு மட்டும் ஏன் எந்த சம்பந்தம் இல்லாமல் அடுத்தவன் உயிர் போவதில் உள்ள மரணத்தின் மீதான பற்றுக்கு காரணமென்ன?ஜெயேந்திரர் மீதான குற்றங்கள் உறுதிப்படுத்தப் பட்டு இந்து மதத்திற்கான இழுக்கு என்ற பெயரில் மரணதண்டனை விதிக்கப்பட்டு ஜனாதிபதியாலும் நிராகரிக்கப்படும் நேரத்திலும் மரணதண்டனைக்கு எதிரான நிலையில் உங்கள் குரல் வெளிப்படுமா?

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் கல்லார் அறிவிலார்”

இந்த பதிவை இன்னும் நீட்டி முழக்கும் எண்ணம் இல்லை.

Monday, August 29, 2011

மரணம் வென்ற நாத்திகன் பகத்சிங்

இப்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் 1907 செப்டம்பர் 28ல் பிறந்து  1931ம் வருடம் மார்ச் 23ம் தேதி பிரிட்டிஷ் ராஜ் சட்டத்தில் தூக்கு கயிற்றால் பகத்சிங்குடன் ராஜ் குரு,சுக்தேவ் என்ற இருவருடன் மரணத்தை தழுவிக்கொண்ட இந்திய சுதந்திர வரலாற்று கால கட்டத்தில் சிறையில் பகத்சிங் எழுதிய நான் ஏன் நாத்திகனானேன் என்ற பகத்சிங்கின் உருது எழுத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பின் ஒரு பகுதியின் என்னால் இயன்ற தமிழாக்கம் இது.இன்றைய இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்படி பாகிஸ்தானியனான பகத்சிங் இந்தியனாகப் போற்றப்படுவது வரலாற்றின் முரண்.

// LTTE leader velupillai Prabakaran lived an elusive life with an admiration to Bhagat Singh and Subash Chandra Bose with a vision of freedom from Srilanka's Singala Chavanism.Yet he was brandized as an terrorist as Bhagat Singh was named by British.

Long live Bhagat singh's visionary thoughts.//

என்ற பின்னூட்டத்தின் பாதிப்பை இங்கே பதிவு செய்கிறேன். இனி பகத்சிங்  எழுதியதாக பகத்சிங்கின் வரிகளில்...

ஒரு புதிய கேள்வி உருவாகியுள்ளது.கர்வம் காரணமாக எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை மறுக்கிறேனா?

இது மாதிரியான கேள்வியை நான் எதிர்கொள்வேன் என்று நான் ஒரு போதும் கற்பனை செய்ததில்லை.ஆனால் எனது நண்பர்கள் சிலருடன் உரையாடும் போது நான் கடவுள் மறுப்பை செய்வது மிகவும் அதீத கர்வத்தின் காரணமாக எனது அவநம்பிக்கை என்பதாக மறைமுகமாக குறிப்பிட்டார்கள்.

இந்த பிரச்சினை ரொம்ப தீவிரமானது.

நான் தனி மனித குணங்களுக்கும் மேலானவன் என்று தற்பெருமை கொள்ளவில்லை. நான் ஒரு சாதாரண மனிதன் மட்டுமே. யாரும் மேலானவர்கள் என்று கருத இயலாது.என்னிடம் பலவீனங்கள் உள்ளன.கர்வம் எனது இயல்பான குணம்.எனது தோழர்களின் மத்தியில் நான் சுதந்திரமாய் நடப்பவன் என்று கூறப்படுகிறேன்.எனது நண்பர் பி.கே தத் அப்படி விளிக்கிறார்..சில நண்பர்கள் எனது கருத்துக்களை அவர்கள் மீது தீவிரமாக திணிப்பதாகவும் அதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்கிறேனென்று குற்றம் சுமத்துகிறார்கள்.இது ஓரளவுக்கு உண்மையே.இதனை மறுக்கவில்லை.இது தற்பெருமை பேசுவதாக கூட கருதப்படும்.சில பிரபலமான இனங்களுக்கு மாறாக நமது மரபு மீதான தற்பெருமை என்னிடம் உள்ளது.இந்த பெருமை நமது மரபுக்குரிய உரிமையே தவிர தற்பெருமையல்ல. 
 
தற்பெருமை,இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால் அகங்காரம் என்பது ஒருவர் மீதான தேவையற்ற தற்பெருமை.தேவையற்ற பெருமை என்னை நாத்திகனாக கொண்டு சென்றதா அல்லது மிகவும் கூர்ந்த பொருள் ஆய்விலும்,மிகவும் சீரிய ஆலோசனைக்குப்பின் கடவுள் நம்பிக்கை இழந்தேனா என்பதனை இங்கே விவரிக்கப் போகிறேன்.அதற்கு முன் கர்வமும், தற்பெருமையும் இரு வேறுபட்டவை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக தேவையற்ற பெருமையும்,வீண் புகழும் எப்படி கடவுள் நம்பிக்கையின்மைக்கு இடையில் நிற்கும் எனபதை புரிந்து கொள்ள தவறிவிட்டேன்.எந்த தகுதிகளும் இல்லாமல் அதற்கு தகுதியும் இல்லாமல் நானும் கூட ஒரு சிறந்த மனிதனின் சிறப்புக்களின் புகழ் ஓரளவுக்கு வந்தடைந்ததை நிராகரிக்கிறேன்.ஆனால்  தனிப்பட்ட கர்வம் காரணமாக எப்படி ஒரு மனிதனின் கடவுள் நம்பிக்கை நம்பிக்கையின்மையாக மாற இயலும்?

இதற்கு இரு வழிகள் மட்டுமே இருக்க முடியும்.ஒன்று மனிதன் கடவுளுக்கு எதிராக எண்ண துவங்கும் போது அல்லது தான் கடவுள் என்று நினைக்க துவங்கும் போது.

இரண்டு முறையிலும் அவன் உண்மையான நாத்திகனாக மாற முடியுமா? முதலாவதில் அவனுக்கு எதிராளி இருப்பதை மறுக்கவில்லை.இரண்டாவது விசயத்தில் கூட திரைக்கும் பின்னால் அனைத்து இயற்கை நிகழ்வுகளையும் வழிநடத்தும் சக்தி இருப்பதாக ஒப்புக்கொள்கிறான்.தான் அந்த சக்தியாகவோ அல்லது தனக்கும் அப்பால் இன்னொரு சக்தி இருப்பதாக உணர்வதோ இங்கே முக்கியமில்லை.அடிப்படையும் அதற்கான நம்பிக்கையும் இருக்கிறது.இவன் இந்த விதத்தில் நாத்திகனல்ல.எனவே நான் முதல் முறையிலோ அல்லது இரண்டாவது வரிசையிலோ இல்லை.

நான் கடவுள் உள்ளது என்ற உயர் நிலையையே மறுக்கிறேன்.நான் ஏன் மறுக்கிறேன் என்பதை பின்பு காணலாம்.இங்கே ஒன்றை விளக்க வேண்டும்.அதாவது நாத்திக கொள்கையை ஏற்றுக்கொள்ள தூண்டியது கர்வம் என்ற ஒன்றல்ல .நான் கடவுளுக்கு எதிராளியுமல்ல அல்லது கடவுளின் மறு வடிவமும் அல்ல.ஒன்று மட்டும் நிச்சயம்,எனது சிந்தனைக்கு தற்பெருமை காரணம் அல்ல.இந்த கூற்றை மறுக்கும் உண்மைகளை ஆராயலாம்.எனது நண்பர்களைப் பொறுத்த வரையில் டெல்லி அசெம்பளி குண்டு வெடிப்பும் மற்றும் லாகூர் சதி திட்ட நீதிமன்ற விசாரணைகளால் கிடைத்த தேவையற்ற புகழின் காரணமாக இந்த கர்வம் என்கிறார்கள்.அவர்கள் வாதம் சரியா என்று பார்க்கலாம்.

எனது நாத்திக சிந்தனைகள் இப்போதைய துவக்கமல்ல.நான் தெளிவற்ற சிறுவனாக இருக்கும் போதே கடவுளை நம்புவதை நிறுத்தி விட்டேன் என்பதை எனது மேற்சொன்ன நண்பர்கள் அறிந்திருக்கவில்லை.குறைந்த பட்சம் ஒரு கல்லூரி மாணவன் கர்வம் காரணமாக நாத்திகத்தில் தற்பெருமை கொள்வான் என்று கூற முடியாது. சில கல்லூரி ஆசிரியர்களுக்குப் பிடித்தமானதாகவும் பலரால் விரும்பபடாததாக இருந்த போதிலும்.நான் எப்பொழுதும் சிறந்த மாணவனாக இருந்ததில்லை.என்னால் அப்படி கர்வம் கொள்ளவும் இயலாது.

நான் இயற்கையிலேயே மிகவும் கூச்ச சுபாவமுடையவனாகவும் எதிர்காலம் குறித்த தோல்வி மனப்பான்மை கொண்டவனாகவே இருந்தேன்.அந்த நாட்களில் நான் முழு நாத்திகனாக இருக்கவில்லை.நான் எனது தாத்தாவின் பழமைக் கோட்பாடு சார்ந்த ஆரிய சமாஜ் தாக்கம் கொண்டவனாக வளர்க்கப்பட்டேன்.ஒரு ஆரிய சமாஜ்வாதி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் ஒரு நாத்திகனாக அல்ல.

எனது ஆரம்ப பள்ளி படிப்புக்குப் பின் லாகூரில் தயானந்த வேதாந்த பள்ளி(DAV-Dayanand Anglo Vedic School)யில் ஒரு வருடம் விடுதி மாணவனாக இருந்தேன்.அங்கே காலை மாலை இருவேளை பிரார்த்தனைக்குப்பின் காயத்ரி மந்திரத்தை மணிக்கணக்கில் பாராயணம் செய்தேன்.நான் ஒரு முழு பக்தனாக இருந்தேன்.பின்பு நான் எனது அப்பாவுடன் வாழ ஆரம்பித்தேன்.என் அப்பா முற்போக்காளராகவும் அதே சமயத்தில் மதத்தைப் பொறுத்தவரையில் பழமைவாதியாகவும் இருந்தார்.அவரது படிப்பினைகளால் மட்டுமே நான் சுதந்திரத்திற்காக என் வாழ்வை அர்பணிக்க தீர்மானித்தேன்.ஆனால் அப்பா நாத்திகவாதியல்ல.மாறாக மிகவும் கடவுள் நம்பிக்கையுடையவர்.நான் தினமும் பிரார்த்தனை செய்வதை ஊக்குவித்தார்.இப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன்.

ஒத்துழையாமை இயக்க நாட்களில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கேதான் நான் முற்போக்காக சிந்திக்கவும் மதங்களின் பிரச்சினைகளையும் கடவுளையும் கூட விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன். ஆனாலும் நான் மத நம்பிக்கையாளனாகவே இருந்தேன்.எனது வெட்டப்படாத நீண்ட முடியை வளர்க்கும் போது என்னால் புராணத்தையோ,சீக்கிய கொள்கையிலேயோ அல்லது வேறு எந்த மதங்களையோ   நம்ப இயலவில்லை.ஆனால் என்னிடம் கடவுள் இருக்கிறார் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.

பின் நான் புரட்சிகர கட்சியில் சேர்ந்தேன்.நான் சந்தித்த முதல் தலைவர் கடவுள் இல்லையென்பதை மறுக்கும் துணிவு இல்லாதவராக இருந்தார்.எனது தொடர்ந்த கேள்விகளால் தேவைப்பட்ட போது பிரார்த்தனை செய் என்றே சொன்னார்.நாத்திகத்தை தேர்ந்தெடுக்க குறைந்த தைரியமே இது மாதிரியானவர்களால் தேவைப்பட்டது.அடுத்து சந்தித்த தலைவர் மிகவும் இறை நம்பிக்கையாளர்.அவருடைய பெயரை இங்கே குறிப்பிடுகிறேன்.அவர் தோழர் சச்சிந்திர நாத் சன்யால்.இப்பொழுது கராச்சி சதி திட்டத்தில் ஆயுள் கைதியாக உள்ளார்.அவருடைய ஒரே புகழ் பெற்ற புத்தகமான் பந்தி ஜீவன் (Bandi Jivan) அல்லது மறுபிறவி வாழ்க்கையில் கடவுளின் கீர்த்தி பற்றி உணர்ச்சி ததும்ப பாடப்பட்டுள்ளது.அவரது அழகான இரண்டாம் பகுதியான கடைசி பக்கத்தில் வேதாந்தம் குறித்த கடவுள் மீதான புகழ்ச்சிகள் மீதான மிகவும் சந்தேகப்படும் எண்ணங்களை உருவாக்கியது

1925ம் வருடம் ஜனவரி 28ல் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்ட புரட்சிகர துண்டறிக்கை அவரது அறிவுத்திறனின் உழைப்பாக என்று அவர் மீதான குற்றப்பத்திரிகை சொல்கிறது.தவிர்க்க முடியாத ரகசிய வேலையில் முக்கியத் தலைவர் அவருக்கு விருப்பமான கருத்துக்களை வெளியிடுவதோடு அவற்றில் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அவரின் தொண்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.இந்த துண்டறிக்கையில் ஒரு முழு பாரா கடவுளுக்கும் அவரை தொழவும் செய்ய வேண்டுமென்று குறிப்பிடப்படுகிறது. இவை உளவியல் உள்ளுணர்வு மட்டுமே.நான் எதைக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன் என்றால் புரட்சிகர கட்சியிலும் கூட கடவுள் நம்பிக்கையின்மைக்கான எண்ணம் இல்லையென்பதே.புகழ்பெற்ற ககோரி தியாகிகள்-நான்கு பேர்களும் தங்களது கடைசி தினத்தை பிரார்த்தனையிலேயே கழித்தார்கள்.ராம் பிரசாத் பிஸ்மில் ஒரு பழமை ஆர்ய சமாஜ்வாதி.பரந்த சோசியலிச,கம்யூனிச சிந்தனைகளுக்கு மாறாக ராஜன் லகிரி உபநிசத்துப் பாடல்களையும் பகவத் கீதையையும் உச்சரிக்க தவறவில்லை.அவர்களில் ஒருவர் மட்டுமே பிரார்த்தனை செய்யவில்லை .”மனிதர்களின் கோழைத்தனத்திலும்,குறைந்த அறிவாலும் வருவதே தத்துவம்” என்று சொன்னவர் கூட கடவுளை எப்பொழுதும் மறுக்க துணியவில்லை.

இந்தக் காலகட்டம் வரையிலும் நான் புரட்சிகர கொள்கைகளில் காதல் கொண்டவன் மட்டுமே.இது வரையிலும் நாங்கள் கொள்கைகளைப் பின் தொடர்பவர்களாகவே இருந்தோம்.இப்பொழுது முழு பொறுப்பையும் தோளில் சுமக்கும் நேரம் வந்து விட்டது.தவிர்க்க முடியாத எதிர்ப்பு இல்லாத காரணமாக கட்சி முழுவதுமாக செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. ஆர்வமுள்ள தோழர்கள்-தலைவர்கள் அல்ல- எங்களை ஏளனம் செய்ய ஆரம்பித்தார்கள்.கொஞ்ச காலங்களில் நான் கூட எங்களது திட்டங்கள் பற்றிய பயனின்மை பற்றி நம்புவேனோ என்ற பயம் வந்து விட்டது.எனது புரட்சிகர வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.எனது மனதின் மூலைக்குள் “படி” என்ற எதிர் முழக்கம் கேட்டது.எதிராளிகளின் ஆழ்ந்த விவாதங்களை எதிர்கொள்ள நிறைய படி.உனது நம்பிக்கைகளையும் வாதங்களையும் காக்க இன்னும் நிறைய படி.நான் நிறைய படித்தேன்.
 

எனது முந்தைய நம்பிக்கைகளும்,திட நம்பிக்கைகளும் குறிப்பிட்டளவு மாற ஆரம்பித்தன.எங்களது முந்தையவர்களின் வழிமுறைகளில் வன்முறை மீதான பற்று மட்டுமே இருந்ததை இப்பொழுது தீவிரமான சிந்தனைகள் ஆட்கொண்டன.இனி மத நம்பிக்கைகள் இல்லை.குருட்டு விசுவாசம் இல்லை.இனி உண்மை மட்டுமே எங்கள் கோட்பாடு.வன்முறை தவிர்க்க முடியாத தேவையென்றால் மட்டுமே.வன்முறையின்மை தவிர்க்க முடியாத மக்கள் இயக்க கொள்கையானது.எதற்கு போராட வேண்டுமென்ற  தெளிந்த நம்பிக்கைகள் உருவாகின.வன்முறைப் போராட்டங்கள் இல்லாமல் போனதால் எனக்கு நிறைய உலகப்புரட்சிகளை வாசிக்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தன.நான் பகுனினை(Mikhail Alexandrovich Bakunin) வாசித்தேன்.கொஞ்சம் மார்க்ஸ்,அதிகமாக லெனினையும்,ட்ராட்ஷ்கி  மற்றும் தங்கள் நாடுகளில் புரட்சியை வெற்றிகரமாக உருவாக்கின அனைவரையும் வாசித்தேன்.இவர்கள் அனைவரும் நாத்திகர்களே.

பகுனின் கடவுளும் நாடும்(God and State) துண்டு துண்டாக இருந்த போதும் படிக்க ஆர்வமாக இருந்தது.பின்பு நிர்லாம்பா சுவாமியால் எழுதப்பட்ட காமன்சென்ஸ் வாசிக்க நேர்ந்தது.இது ஒருவகையான மத அடிப்படை நாத்திகம்.இதன் பொருள் எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது.1926ம் வருட இறுதிக்குள் எந்த அடிப்படையும்,ஆதாரமும் இல்லாத உலகை உருவாக்கி ஆளும் கடவுள் கொள்கைக்கு மாறான சிந்தனையாளனானேன்.எனது மூடநம்பிக்கைகளை கைவிட்டு விட்டேன்.இது குறித்த விவாதங்களை என் நண்பர்கள் முன்பு வைத்தேன்.நான் நாத்திகன் என விளிக்கப்பட்டேன்.ஆனால் இதன் பொருள் என்னவென்று இனி பார்க்கலாம்.

1927 மே மாதம் நான் லாகூரில் கைது செய்யப்பட்டேன்.இந்த கைது ஆச்சரியமானது.இதனை உணரவில்லை.உண்மையில் போலிஸ் தேடுவது தெரியும்.நான் ஒரு பூந்தோட்டத்தைக் கடக்கும் போது போலிஸ்காரர்களால் சுற்றி வளைக்கப் பட்டேன்.எனக்கு நானே ஆச்சரியமடையும்படி அந்த நேரத்தில் அமைதியாக இருந்தேன்.நான் எந்த உணர்ச்சியும் அடையவில்லை, அதே நேரத்தில் மகிழ்ச்சியும் அடையவில்லை.நான் போலிஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டேன்.அடுத்த நாள் நான் ரெயில்வே போலிஸ் லாக் அப் கொண்டு செல்லப்பட்டு ஒரு மாதம் வைக்கப்பட்டேன்.போலிஸ் அதிகாரிகளிடம் நிறைய பேச்சு வார்த்தைக்குப் பின் நான் ககோரி கட்சியுடனும்,புரட்சிகர இயக்கத்துடனும் தொடர்பு வைத்துள்ளதாக  குற்றப்பத்திரிகை என அறிந்தேன். குற்ற விசாரனையின் போது நான் லக்னோ சென்றதாகவும்,சில திட்டங்களை வகுத்ததாகவும்,அவர்கள் அனுமதி கிடைத்தவுடன் நாங்கள் சில குண்டுகளை தயாரித்ததாகவும்,1926ம் வருட தசரா பண்டிகையின் போது மக்கள் கூட்டத்தில் இதனை பரிசோதிக்கும் முறையில் வெடிக்க வைத்ததாகவும் சொன்னார்கள்.மேலும் நான் ஆச்சரியமடையும் படி புரட்சிகர கட்சியைப் பற்றி நான் தகவல்கள் சொன்னால் அப்ரூவராக கூட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் பரிசுகளுடன் விடுதலை செய்து விடுவதாகவும் தூண்டினார்கள்.நான் இந்த திட்டத்தை நினைத்து சிரித்தேன். இது ஒரு ஏமாற்று வேலை.

எங்களைப் போன்ற இயக்க கொள்கை கொண்டவர்கள் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் வீசுவதில்லை.ஒரு நாள் காலை அப்போதைய உளவுத்துறை சீனியர் சூப்ரடிண்டண்ட் மிஸ்டர் நியுமன் என்னிடம் வந்தார்.மிகவும் கருணையுடனான பேச்சுக்குப் பின் அவர்கள் கேட்டபடி எந்தவிதமான ஸ்டேட்மெண்டும் தரவில்லை என்றும் வருத்தமான செய்தியாக சதி செய்ததாக என்மீது குற்ற அறிக்கை தயார் செய்வதாகவும் ககோரி வழக்கில் பயங்கர கொலை வழக்காக தசரா குண்டு வெடிப்பில் சதி செய்ததாகவும் வழக்கு தொடரப் பட்டிருப்பதாக சொன்னார்..மேலும் அவர்களிடம் குற்றம் சுமத்தி தூக்கில் போட போதுமான ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.

அந்த நாட்களில் நான் அப்பாவியாக இருந்த போதிலும்,போலிஸ் தங்கள் விருப்பம் போல் செய்ய இயலும் என்பதை நம்பினேன்.அதே தினத்தில் சில போலிஸ் அதிகாரிகள் கடவுளை இரண்டு வேளையும் பிரார்த்திக்குமாறு என்னை தூண்டினார்கள்.நான் இப்பொழுது ஒரு நாத்திகன்.இப்பொழுது எனக்கு நானே மகிழ்ச்சியும்,அமைதியுமாக இருந்த காலத்தில் மட்டுமே கடவுள் மறுப்பாளனாக இருந்தேனா அல்லது மிகவும் சிக்கலான இந்த சூழலில் எனது நம்பிக்கை கொள்கைகளுடன் இருக்கிறேனா என்பதை தீர்மானிக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டேன்.மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு நான் கடவுளை நம்பவும் பிரார்த்திக்கவும் இயலாது என்பதை தீர்மானித்தேன்.நான் பிரார்த்திக்கவில்லை.இது உண்மையான பரிட்சையாகவும் இதில் நான் வென்றவனாக வெளிப்பட்டேன்.ஒரு நிமிடம் கூட எனது கொள்கையை விட்டு எனது கழுத்தை தூக்கு கயிற்றிலிருந்து தப்பிக்க விரும்பவில்லை.எனவே நான் தீவிரமான இறைமறுப்பாளன்.அது முதல் நான் அப்படியே இருந்தேன்.இது ஒன்றும் எளிதான பரிட்சையாக இருக்கவில்லை.

நம்பிக்கை துயரங்களை மென்மைபடுத்துவதோடு ஆனந்தமாக்கவும் செய்யும்.கடவுளை நம்புவன் மிகவும் தைரியசாலியாகவும் தன்னை பாதுகாக்கும் சக்தி இருப்பதாக நம்புவான்.கடவுள் நம்பிக்கையற்றவன் தன்னையே நம்பவேண்டிய சூழலில் இருப்பான்.தனது சொந்தக்காலில் நிற்பதற்கு நிறைய சூறாவளிகளையும்,புயலையும் சந்திக்கவேண்டி வரும்.இது குழந்தைகளின் விளையாட்டல்ல.இது போன்ற கணங்களில் கர்வம் என்று ஒன்று இருந்தால் மறைந்தே போய் விடும்.மனிதனால் இயற்கையான  நம்பிக்கையை மறுக்க இயலாது.அப்படி மறுத்தால் கர்வத்துக்கும் அப்பால் பலமான வலிமை அவனுக்கு இருக்கிறதென்று முடிவு செய்யலாம். இப்பொழுது இது போன்ற சூழலே.தீர்ப்பு ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று.இன்னும் ஒரு வாரத்தில் இது அறிவிக்கப்படும்.எனது வாழ்க்கையை மகத்தான காரணத்துக்காக அர்பணிக்கிறேன் என்ற ஆறுதலை விட வேறு என்ன இருக்க முடியும்?
கடவுளை நம்பும் இந்து மறுபிறவியில் தான் அரசனாகப் பிறக்க வேண்டும் என எதிர்பார்க்கலாம்.ஒரு கிறுஸ்தவனோ அல்லது இஸ்லாமியனோ தனது பாவங்களுக்கும்,தியாகங்களுக்கும் மேல் உலகின் வாழ்க்கை கனவு காணலாம்.ஆனால் நான் எதனை எதிர்பார்ப்பது? எனது கழுத்தை கயிறு இறுக்கும் போதும் எனது கால்களுக்கு அடியில் உள்ள கட்டை நீக்கப்படும் நேரமே எனது நிரந்தர நிமிடம் என்பதும் கடைசியான கணம் என்பதும் எனக்குத் தெரியும்.அல்லது இன்னும் குறிப்பாக  உடல்ரீதி பொருளில் சொன்னால் எனது ஆத்மா அடங்கும் கணம்.அனைத்தும் முடிவுக்கு வந்து விடும்.மேலும் ஒன்றுமில்லை.

மிகவும் பெரிய முடிவில்லாத,குறைந்த வாழ்க்கைப் போராட்டம் கொண்ட பரிசை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை என்னிடமிருக்கிறதென்ற கோணத்தில் இதனை எடுத்துக்கொள்கிறேன்.அவ்வளவுதான்.எந்த சுயநல குறிக்கோள், அல்லது அதற்கு பிறகு கிடைக்கும் பரிசுக்கான ஆர்வமோ இப்பொழுதும் இனிமேலும் இல்லை.எந்த சுய விருப்பமுமில்லாமல்,மாற்று வழியில்லாமல் எனது வாழ்க்கையை சுதந்திரத்திற்கு அர்பணித்துக்கொண்டேன்.அதிக எண்ணிக்கையிலான ஆண்களும்,பெண்களும் இதுமாதிரியான உளவியல் இருக்கும் நாட்களில்,மக்கள் தங்களை மனிதகுலத்திற்கு அர்பணித்துக் கொள்ளும் போது சுதந்திரத்திற்கான சகாப்தம் உருவாகும்.
 

Friday, August 26, 2011

கொத்துமல்லி சட்னி

சி.பி.செந்தில்குமார் ஒரு பத்து வகையான சட்னிப் படங்கள் போட்டு குத்துமதிப்பா போன மாசமோ அதுக்கும் முந்தின மாசமோ ஒரு பதிவு போட்டிருந்தார்.கவுஜக்கு எதிர்க் கவுஜ மாதிரி பத்து சட்னி வகைக்குப் பதிலா ஒரே சட்டினியில் பத்துவகை உணவு எப்படி செய்வது என்ற எதிர்ப் பதிவு இது:)

இட்லிக்கு கொத்துமல்லிச் சட்னி வீட்டிலோ அல்லது சரவணபவன் போன்ற ஓட்டல்களில் சாப்பிட்டுருப்போம்.இட்லிக்கு மட்டுமில்லாமல் கொத்துமல்லி சட்னியை மாற்று உணவுகளுக்கும் உபயோகப்படுத்துவது எப்படியென்பதை தயாரிப்பு முறையையும் பார்க்கப் போகிறோம்.இதைப் படிச்சோமா அடுத்த பதிவுக்கு தாண்டினோமான்னு இல்லாமல் நடைமுறையா அன்றாட வாழ்க்கையில் தினமும் அல்லது வாரம் இரண்டு மூன்று முறை உபயோகப்படுத்தப் போறீங்க.காரணம் என்னன்னா கொத்துமல்லி சட்னி இட்லிக்கு மட்டுமில்லாமல் எப்படியெல்லாம் மாற்று உணவுக்கும் உபயோகப்படுத்துகிறோம் என்பது மட்டுமல்லாமல் இது உங்கள் உடல் நலன் சார்ந்த இலவசம்..

இந்தியாவில் ஹெர்பல் எனும் தாவிரம் சார்ந்த மருந்துகளாய் அன்றாடம் காய்கறி,கீரை,கொத்துமல்லி,புதினா,வெங்காயம்,தக்காளி என உபயோகப்படுத்துகிறோம்.இதில் வெங்காய சட்னி,தக்காளி சட்னி, கொத்துமல்லி சட்னி என்பவைகள் போக பெரும்பாலும் வேகவைத்த பொருளாகவே உண்பதால் காய்கறிகள் விட்டமின் குறைபாடுகள் கொண்டு விடுகிறதென நினைக்கிறேன்.உதாரணத்துக்கு முட்டைக்கோசை KFCக்காரன் பண்ணுக்கு அரிந்தோ அல்லது மயனேஸ் சாலடுக்கோ உபயோகப்படுத்துவதை நாம் பொரியல் என்ற பெயரில் நன்றாக வதக்கி விடுகிறோம்.முழுவதும் வதக்குவதை விட பாதி வதக்கிய பதத்தில் உண்பது வித்தியாசமான ருசியாகவும்,நேரம் குறைவு,சத்து என்ற அடிப்படை விசயங்களும் அடங்கி இருக்கின்றன.கொத்துமல்லி சட்னிக்கும் இதே பார்முலாதான்.

அம்மாக்கள் அம்மி அரைச்சே அலுத்து விட்டார்கள்.இப்பத்தான் மிக்சி இருக்குதே!10 நிமிசத்துல அரைச்சு விடலாமே!ஏன் சொல்ல மாட்டாய்.24 மணி ஏர்கண்டிசன்ல உட்கார்ந்துகிட்டு வக்கணையா பதிவு போடற.மின்சார வெட்டுல லோல் படும் எங்களுக்கல்லவா மின்சார சிரமங்கள் தெரியும்ன்னு யாரோ மனசுக்குள் நினைப்பாங்கன்னு தெரிந்தும் உங்களுக்கு தெரிந்த கொத்துமல்லி சட்னியை சிபாரிசு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.காரணம் உங்கள் உடல்நலம் சார்ந்த சுகாதாரம் விசயம் என்பதோடு நேரம் மேலாண்மை (Time management),ஒரு பொருளின் பல உபயோகம் போன்ற நுணுக்கங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.மேலும் கமலஹாசன் இரண்டு மொக்கைப்படம் நடிச்சிட்டு ஒரு சீரியஸான படம் நடிக்கிறமாதிரி சீரியஸான பதிவிலிருந்து விலகி கொஞ்சம் மொக்கையும்,அதே நேரத்தில் உபயோகமான விசயங்களையும் சொல்லலாமே என்ற மாறுதலுக்காகவும் கூட.

வந்தோமா!ரெசிபி சொன்னோமோ,செய்முறை சொன்னோமான்னு போய்கிட்டே இல்லாமல் இது என்ன வந்து லொட லொடன்னு மிக்சி அரைக்கிறன்னு மனதுக்குள் திட்டுபவர்களுக்கு அதே! சட்னி மிக்சி சம்பந்தப்பட்டதென்பதோடு இந்த பதிவு உங்கள் உடல்,மன அழுத்தம் இன்னும் பல விசயங்கள் அடங்கியது.எனவே மோடி மஸ்தான் பாம்பை கீரியிடம் சண்டையிட விடுவது மாதிரி இன்னும் பல சொல்லி விட்டே கொத்துமல்லி சட்னி செய்முறை சொல்லப் போகிறேன்.

காலையில் அலுவலகம் போகும் அவசரத்துக்கு இட்லி சுட நேரமில்லையென்றோ தினமும் இட்லியா என்ற அலுப்புக்கும் கொத்துமல்லி சட்னி துணை நிற்கும்.


                                                        இந்தப் படம் சுட்ட இடம்


ஒண்டிக்கட்டை ஓட்டல் கனவான்கள் இதெல்லாம் பிரச்சினையான விசயமென்று ஓடி விட்டாலும் ரொட்டி ஜாம்ன்னு அலுத்துப் போன சாண்ட்விச்க்கு மாற்றாகவும் கொத்து மல்லி சட்னி இரண்டு சாண்ட்விச் போதுமா இன்னும் ஒன்னு வேணுமான்னு கேட்க வைக்கும்.ரொட்டி,பட்டர் ஜாம்க்கு பயந்து ஓடும் குழந்தைகளை வழிக்கு கொண்டு வர ரொட்டியோடவே சாப்பிடுவேனாக்கும் என்பதற்கும் கொத்துமல்லி சட்னி.சமையல் பிரியர்கள் நீலகிரி குருமான்னு ஒரு ரெசிபி கேள்விப்பட்டும், சமைத்தும் இருப்பீர்கள்.என் வழி குறுக்கு வழின்னு பதிவர் ராஜா நெத்தியில பொட்டு வச்சிக்கிற மாதிரி நீலகிரி குருமாவுக்கு குறுக்கு வழி கொத்து மல்லி சட்னி.மேலும் பிஷ் கல்தீரா (Fish Kaldera) என்று கோவா ரெசிபி ஒன்று உண்டு. பாம்ப்ரெட் மீன்(Pompret இது நம்மூர்ல என்ன பேரு?)வயிற்று நடுமுள்ளை அகற்றி அதற்குள் சட்னியை வச்சு திணிச்சு முழு மீனையும் பொரிச்சா பிஷ் கல்தீரா தயார்.

கோழி சாப்பிடனுமின்னா வழக்கமாய் "தகதகக் கதிரவனாக" சுட்ட கோழியோ, தந்தூரியோ அல்லது வழக்கமான மசாலாக்கலர் கோழிக்கு ருசி கூட்டவும் தேவை கொத்துமல்லி சட்னி.கண்ணுக்கு குளிர்ச்சி வேணுமா,மொட்டைத் தலையில் முடி வளருனுமா சாப்பிடுங்க சார் கொத்துமல்லி சட்னி (எப்படின்னு கேட்கிறவங்க இதுக்கு தனியா காசு கொடுத்து தாயத்து வாங்கி கட்டிக்கிடனும்:)

அடப் போங்க!தமிழகத்து ஆளுகளை மனசுல வச்சிகிட்டே நீ கலாய்க்கிற!நான் இருப்பதோ லண்டனில்,அமெரிக்காவில்ன்னு நினப்பவர்களுக்கு இந்த பதிவே உங்களுக்குத்தானுங்க!காரணம் நம்ம ஊர்ல பள்ளிக் குழந்தைகளுக்குத்தான் பட்டர் சாண்ட்விச்.உங்களுக்கோ காலை உணவே Butter,Toast,Fried egg and coffee.நாக்கே செத்துப்போச்சுன்னு புலம்புவீங்க!நீங்கதான் நமக்கு வருட சந்தாதாரரே.ஏனென்றால் காலையில சாப்பிட கொலாஸ்ட்ரல குறைக்க முட்டைய தூக்கி விட்டு டோஸ்ட்ல கொத்துமல்லி சட்னியை தடவி விடுகிறோம்.வார இறுதிப் பார்ட்டின்னா கெனாபில கூட சட்னியை தடவி விடலாம்.நண்டுப்பிரியர் குடுகுடுப்பை ஒருவேளை இந்தப்பக்கம் வந்தார்ன்னா அவருக்கும் தேவை கொத்துமல்லி சட்னி.

வேற யாரு கஸ்டமர்?சாம்பாருக்கு ருசி,ரசத்துக்கு மணம்,கஞ்சிக்கு தொட்டுக்க துவையல்ன்னு எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து கொத்துமல்லி சட்னி.இந்த மருந்து ரகசியத்தை எல்லோருக்கும் சொல்லித் தருவதில்லை.இங்கே கூடியிருக்கும் கூட்டத்துக்கு மட்டும் சொல்லித் தாரேன்.வீட்ல போய் செஞ்சு சாப்பிட்டுங்கின்னா அக்கா!போன அழகு திரும்பி வந்துடும்.அண்ணே!சம்சாரம் கோவிச்சுகிட்டு சமைக்காம குப்புறடிச்சுப் படுத்துகிட்டாலும் பிரிட்ஜை திறந்தோமா கொத்துமல்லி சட்னியை எடுத்தோமா நமக்கு பிடிச்சபடி அவசரத்துக்கு ரொட்டி அல்லது பழைய சோற்றுல பிசைஞ்சோமா,குழம்புல கலக்குனோமா கோவிச்சுகிட்ட மனைவியை சமாதானப் படுத்தி சாப்பிடக் கூப்பிட்டோமான்னு எல்லாவற்றுக்கும் உள்ள ஒரே லேகியம் கொத்துமல்லி சட்டினி.

வாங்கோ!வாங்கோ!சமையல் நுணுக்கத்தை பாருங்கோ!

தேவையான பொருட்கள்.

மிக்ஸி(ஆகா!இலவசத்துல ஏன் சேர்த்தின்னு இப்பத்தானே புரியுது)
மின்சாரம் ( இது இல்லைன்னா அம்மிக்கல்லு)
சம்சாரம் (இதுவும் இல்லைன்னா மச்சினி,அக்கா தங்கை,நண்பன் என யாராவது உதவிக்கு கூப்பிடவும்.இதுவும் இல்லைன்னா நளனாக்கும் நான் என்று கோதாவில் இறங்கிட வேண்டியதுதான்)
கொத்துமல்லி நாலைந்து பெரிய கட்டு (நாம் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு வருகிற மாதிரி செய்து வச்சிக்கப் போகிறோம்)
புதினா (கொத்துமல்லி அளவுக்கு பாதியளவு)
கருவேப்பிலை( புதினாவில் பாதியளவு)

புளி ஒரு கைப்புடி உருண்டை (உணவு உற்பத்தியாளர்கள் நமக்குப் புரியாத பெயரில் நீண்ட நாட்களுக்கு உணவுப் பொருட்கள் கெடாமல் சேர்க்கும் தடுப்பான் நமக்கு இயற்கையாகவே புளியமரமா வந்து வாய்த்திருக்குது!பச்சை மிளகாய் இரண்டு (டாஸ்மாக் பார்ட்டிகள் ஊறுகாய் தொட்டுக்குவதில் பதில் இன்னும் கொஞ்சம் மிளகாய் காரம் சேர்த்து தொட்டுக்கவோ சைடு டிஸ்க்கு அல்லக்கையாக கூட  சட்னியை வைத்துக்கொள்ளலாம்.

நாடு சுத்துறவங்களுக்கு சூப்பர் மார்க்கெட் இருக்குது.தமிழகத்தில் வீட்டுக்குப் பக்கத்தில காய்கறி மார்க்கெட் இருக்குது.கிராமப்புறங்களுக்கு பசுமையா கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, புளின்னு எல்லாம் கிடைக்கிற பொருட்கள்தான். ஒரு விழுது புளியை கொஞ்சம் தண்ணீரில் உறவிட்டு பாகு பதத்தில் எடுத்து வைக்க வேண்டும்.கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா, இரண்டு பச்சை மிளகாய் நன்றாக கழுவி தண்டிலிருந்து அரிஞ்சு வைச்சுகிட்டா இனி அரைக்க வேண்டியது மட்டுமே வேலை.இலைகளை அரைக்க தனியாக நீர் சேர்க்காமல் புளிக்கரைச்சலையே உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

இலவச மிக்சியோ காசு போட்டு வாங்கின மிக்சியோ வேகத்துக்கு தகுந்த மாதிரி 5 முதல் 10 நிமிடம் வரை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அரைச்சு புளிக்கரைச்சல் மிச்சம் ஏதாவது இருந்தால் அதனையும் சேர்த்து ஒரு கலக்கு மிக்சியிலிட்டு எடுத்து வைத்துக்கொண்டால்

சாண்ட்விச்
தந்தூரிக்கு கம்பேனியன்(Accomplishment)
நீலகிரி குருமா
பிஷ் கல்தீரா
டாஸ்மாக் ஊறுகாய்
சாம்பார்
ரசம்
மோர்
டீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.
இட்லி தோசைக்கு சட்னி
என அனைத்து கலவைக்கும் கொத்துமல்லி சட்னி தயார்.

பசங்க சும்மா இருந்தாலும்,அடுப்பங்கரையிலிருந்து சம்சாரத்தின் மின்சாரக் குரல்.பதிவை இணைச்சுடறேன்.

Wednesday, August 24, 2011

கொனாசியர்

சாரு நிவேதிதா தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் மதன் பாபுவின் குடும்பத்தின் மகிழ்ச்சியின் ரசனை பற்றிக் குறிப்பிடும் போது கொனாசியர் என்று மதன் பாபுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.கொனாசியர்(Connasseur)என்ற பதத்தை தமிழில் வேறு யாராவது உபயோகிப்படுத்தியுள்ளார்களா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. இந்த சொல் பிரெஞ்சிலிருந்து வருவதால் எனது eur உச்சரிப்பு தவறானதாகக் கூட இருக்கலாம்.பிரெஞ்சு தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் நல்லது.இல்லைன்னா யாருக்கும் தெரியவில்லையென கொனாசியர் சொற் பதத்திற்கு நானே உரிமை கொண்டாடுவேன்:)

 கொனாசியர் என்பது பெரும்பாலும் உணவு,டீ,பீர்,வைன்,கலை போன்ற ரசனைகளை குறிப்பிடப்படும் சொல்.இதனை தமிழில் உணவு ரசனையாளனை சாப்பாட்டு ராமன் என்றும் மது குடிப்பவனுக்கும்,எப்படி மது அருந்துவது என்று குடியை ரசிப்பவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குடிகாரன் என சொல்லிக் கொச்சைப்படுத்தி விடுகிறோம்.(I advocate for a total prohibition in Tamilnadu or occassional drink if possible)பல உணவுகளை ரசித்தும் ருசித்தும் சாப்பிடுவது ஒரு கலை.ஆனால் டீ,பீர்,வைன் ருசிப்பவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது. காரணம் இவற்றை வாயில் கொப்பளித்து உமிழ்ந்த பின் நாசியில் உணரும் மணம்(aroma),நாக்கில் உணரும் உவர்ப்பு போன்ற ருசிகளை வைத்து தேயிலை, பீர்,வைன்களின் தரத்தைக் கண்டு பிடிப்பவர்களுக்கு கொனாசியர் என்று பெயர்.இன்னும் வேறு எந்த துறையில் இந்த சொற்பதம் உபயோகிக்கப் படுகிறதென்று கூகிளை கேட்டால் இந்தப் பெயரிலேயே பலான படம் இருப்பதாக தகவல் சொல்கிறார்.
 
டீயின் கசப்பை சுவைத்து டீயின் மதிப்பீடு செய்பவர்களை டீ டெஸ்டர் என்று தனியாக ஒதுக்கி விடுகிறார்கள்.எனக்கு ரெட் லேபிள்,லிப்டன் இரண்டு வகையான டீ கிடைக்கிறது.கட்டஞ்சாயா குடித்தாலும் சரி,அஸ்கா பால் சாயா குடிச்சாலும் சரி,லிப்டனின் ருசி நாக்கில் நிற்கும்.நெஸ்கபே மட்டுமே மார்க்கெட்டில் பரவலாகக் காணக் கிடைக்கிறது.துருக்கிய காபி அரேபியர்களுக்குப் பிடித்தமான காபி.பிரேசில்,கொலம்பியா போன்ற காபிகள் சூப்பர் மார்க்கெட்டில் கிடைத்தாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.நம்ம சேட்டன் கடையில் 150Fil(ரூ.25) குடிக்கும் நெஸ்காபியை கொஞ்சம் கெபசினோ, கிரிம், சாக்லெட் கலந்து ஸ்டார்பக்ஸ் காரன் 1.500 தினாருக்கு(சுமார் IRS.250) விற்று விடுகிறான்.எனவே 10 காபி குடிக்கலாமே என்ற எண்ணத்தில் குறிப்பிட்ட பேர்களே  ஸ்டார்பக்ஸ் அருந்துகிறார்கள்.

எனது நண்பன் ஒருவர் நீண்ட நாட்களாக மது அருந்துபவர்.பாட்டிலை திறந்ததும் வரும் நெடி அல்லது கிளாசில் ஊற்றியதும் வரும் வாசத்தை நுகர்ந்தே சரக்கு எப்படியென்று சொல்லி விடும் வல்லமை உடையவர்.உணவுப் பிரியர்.சமீபத்தில்  நடிகர் மோகன்லால் தனது விருப்பங்களில் ஒன்றாய் ஓவியங்களை சேர்ப்பது பற்றிக் கூறியிருந்தார்.அவரது கலைப்பொருட்கள் (Antiques) தேடலும் கூட கொனாசியர்தனமே.முன்பு காபி வித் அனு பதிவில் Koffe with karen என்ற இந்தி நடிகர்களின் கலந்துரையாடல் பற்றி சொல்லியிருந்தேன்.ராஜ் கபூரின் மகன்களான ரந்தீர் கபூர்,ரிஷி கபூர்,ராஜிவ் கபூர் மூவருடன் ரிஷி கபூரின் மனைவி நீட்டு சிங் உரையாடிய நிகழ்வைக் காண நேர்ந்தது.காலை உணவு(நாஸ்டா) நேரத்திலெயே மதியம் என்ன சாப்பிடலாம் என்று திட்டமிடுவதாகவும்,மதிய உணவு வேளையில் இரவு உணவுக்கு மெனு தயாரித்து விடுவதாகவும்,நீண்ட கூட்டுக் குடும்பமாகவும் வாழ்வதால் தங்களுக்குள்ளேயே கும்மியடித்து மகிழ்வதாகவும்,ராஜ் கபூரின் மனைவி கிருஷ்ணாவுக்கு நகைச்சுவை ரசனை அதிகம் என்றும் குறிப்பிட்டார்கள்.அனைவரின் உப்பிப் போன உடம்பும் உணவு பற்றிய சிந்தனையும் கூட கபூர்களை கொனாசியர் பேர்வழிகள் என்றழைக்கலாம். பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான் பதிவுலகப் பழமொழிக்கு அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது:)

சமையல் ரெசிபிக்கும் அடுப்பாங்கரை அனுபவங்களுக்கு மிடையான பல நுணுக்கங்கள் ஆராயப்படுவதில்லை யென்றாலும் அசராமல் சமையல் பதிவுகள் போடுபவர்களும் கூட கொனாசியர் ரசனையாளர்களே.வீட்டில் மனைவியின் சமையலைப் புகழ்ந்து என்னமா சமைக்கிறேன்னு புகழ்ந்தோ வஞ்சப் புகழ்ச்சியாக கூட புகழ்ந்து ருசித்து சாப்பிடுவர்களும் கொனாசியர்களே:)சில சமயம் சமையல் நல்லாயில்லையென்று சொல்லி என்னை மாதிரி வாங்கிக் கட்டிக் கொள்பவர்களை கோணாசியர்கள் என்று  வேண்டுமானால் இனிமேல் அழைக்கலாம். வாங்கி கட்டி இப்ப பாடம் கற்றுக்கொண்டு விட்டதால் நானெல்லாம் அடுத்த வகுப்புக்கு புரமோசனாகி விட்டேனென்ற குறும் தகவலையும் சொல்லி வைக்கிறேன்:) தொலைக்காட்சியில் பாட்டுப்போட்டிக்கு சரிகமபதநி யெல்லாம் கரைச்சுக்குடிச்சு தயாரா வந்து எல்லோரையும் அசத்தும் புதுப்பாடகர்களை நொள்ளை சொல்லும் அனுபவ இசை மேஸ்திரிகளான நீதிபதிகள் மாதிரியானவர்கள் கொனாசியர்களா கோணாசியர்களா என்று பட்டிமன்றம் வைக்கலாம்!முன்பு ஒரு முறை இப்போது களத்தில் காணாத பதிவர் குடுகுடுப்பை அமெரிக்க நண்டு சமையல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.நண்டு சாப்பிட்டாலும் நடுத்துண்டு நமக்குன்னு ருசிக்கும் ரசனையும் கொனாசியர் இலக்கணத்துக்குள் வந்து விடும்.எழுத்தின் மீதான காதலும்,ரசனையாளர்கள் கூட கொனாசியர்களே.நடிப்பு மீதான காதல் கொண்ட சிவாஜி,கமல் போன்றவர்கள் கொனாசியர் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியவர்கள். வாழ்க்கையை ரசிப்பவர்கள்,ருசிப்பவர்கள் மகத்தான கொனாசியர்கள். சுப்ரமணி பாரதி தாத்தா நினைவில் வந்து போகிறார். 

டிஸ்கி:கொனாசியரும் கொத்துமல்லி சட்னியும் என்று ரிதமாக தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன்.தலைப்பு கூகிளிக்குள் இடம் பிடிக்க வேண்டுமென்பதால் சுருக்கி விட்டேன்.அடுத்து கொத்து மல்லி சட்னி பற்றி பார்க்கலாம்.சமையல் பதிவர்கள் எங்க ஏரியாவுல வந்து இப்படி மொக்கை போடுறீயேன்னு கோபித்துக்கொள்ள வேண்டாம்:)பதிவுகளில் சமையல் பகுதி ஏன் பின்கட்டைப் பிடித்துக்கொள்கிறது?வெறுமனே ரெசிபி மட்டும் சொல்வதனாலா என்ற மரபை முறிக்கும் முயற்சியாகக் கூட மொக்கைகள் கலந்த சமையல் பதிவுகளை சொல்ல விரும்புகிறேன். 

பட உதவி:
http://en.wikipedia.org/wiki/File:Mona_Lisa,_by_Leonardo_da_Vinci,_from_C2RMF_retouched.jpg 


http://en.wikipedia.org/wiki/File:Produits_r%C3%A9gionaux_-_photo_CPPR.jpg

Monday, August 22, 2011

கடாபி வெர்சன் 1.1

கடாபி பற்றி முன்பே இங்கே சொல்லி விட்டதால் இது கடாபி வெர்சன் 1.1

நடப்பவை நன்றாகவே நடக்கிறது.ஆனால் பிப்ரவரி 2011 லிருந்து மிகவும் தாமதமான விடுதலை லிபியாவின் ராணுவக் கிளர்ச்சியாளர்களின் லிபியா தலைநகரம் கைபற்றல் எப்பொழுதென்று எதிர்பார்த்தது நிகழ்ந்தே விட்டது.லிபியாவின் ராணுவப்புரட்சியை நான் வரவேற்பதை விட உணர்வு பூர்வமாக மகிழ்ச்சி அடைபவர்கள் ராணுவக் கிளர்ச்சியாளர்களும் அவர்களைச் சார்ந்த மக்களுமே.ஆட்சி மாற்றத்தில் நிகழும் மாற்றங்களால் நேட்டோ படைகளின் குறிக்கோள்!(Mission accomplished) முடிந்தது.பெட்ரோல் விலையைக் கொஞ்சம் குறைங்கப்பா:)

மேற்கத்திய நாடுகளின் பொருளாதார சந்தை உறுதிப் படுத்தப் பட்டு ரஷ்யா,சீனாவின் ராணுவ சந்தை பின்படுத்தப்படும்.இவற்றை விட உடும்பிப் பிடி கடாபியின் சர்வாதிகார கரம் வலுவிழந்ததும் இன்னொரு வாரிசு அரசியல் நிகழாமல் போவதும் வரவேற்க தக்கது.நேற்று இரவு சூடான செய்தி பார்க்கும் போது இயல்பாய் தோன்றிய ஒன்று லிபிய கிளர்ச்சி உருவான துவக்கம் முதலே தனி மனிதனாக கடாபியின் சர்வாதிகாரம் ஒழிய வேண்டுமென்று நினைக்கும் போது இந்திய அரசின் வாலையும்,தலையையும் காட்டும் (obstain) வெளியுறவுக்கொள்கை மனதில் வந்து போனது.உலகரங்கில் பிரச்சினை ஏற்படும் போது எது சரியென்ற தீர்க்கமான முடிவுகள் எடுப்பது அவசியம்.

வலைப்பின்னல்கள் இல்லாத பிரச்சினைகள் என்று எதுவுமே இல்லை.அன்னா ஹசாரே,இலங்கை,லிபியா என எந்த உள்,வெளிநாட்டுப் பிரச்சினை யென்றாலும் காங்கிரஸ் அரசின் குழம்பும் நிலை மட்டுமே தெரிகிறது.முன்பெல்லாம் வலுவான இந்தியாவிற்கு ஒரே ஆட்சி மீண்டும் நிலவுவது நல்லது என்றே மன விளம்பரம் செய்தார்கள்.இரண்டாம் முறை ஆட்சி நிர்வாக சீர்கேடுகளையும்,செய்த ஊழல்களை திடப்படுத்துவதற்கு மட்டுமே உதவுமா என்ற ஐயப்பாட்டை உருவாக்குகிறது.இரண்டாம் முறை ஆட்சி செய்யும் ஐக்கிய முன்ணணி கூட்டணியின் இப்போதைய நிர்வாகத் திறன் என்ன?மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வந்திருந்தால் நிகழ்வுகள் எப்படியிருந்திருக்கும்?

மீண்டும் லிபியா பக்கம் பார்வையை செலுத்தினால் முறையான பயிற்சிகள் இல்லாத கட்டமைப்பில்லாத,கட்டுக்கோப்பில்லாத லிபிய ராணுவ புரட்சியாளர்கள் வெற்றியின் பின் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு என்ற வலுவான ஆயுதம் இருக்கிறது.மேற்கத்திய நாடுகளின் எண்ணைப் பொருளாதார சந்தையை கட்டுப்படுத்தும் சுயநலங்கள் இருக்கின்றன.

விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்பான தரை,கடல்,விமானப்படைகள் தனித்துவமாய்(Unique) சரியான காரணங்களுடன் இயங்கி சாதிக்க இயலாத ஒன்றை அமெரிக்க ஆதரவிலான நேட்டோ படைகளின் துணையோடு லிபிய ராணுவப் புரட்சி சாதித்துள்ளது.மேற்கத்திய நாடுகளின் தேவையென்றால் ஆயுதம் தூக்குவதில் தவறில்லை.மேற்கத்திய நாடுகளின் தேவை நிறைவேற்றப் படாவிட்டால் ஒசாமா பின்லேடன்,தலிபான்களுக்கு மட்டுமே சொந்தமான தீவிரவாதத்தை டெரரிஸ்ட் என்ற சொல் பிரயோகி!மேற்கத்திய நாடுகளின் சுயநலங்கள் லிபியா விசயத்தில் நிர்வாணமான உண்மையாய் தெரிகிறது.இருந்தாலும் தன் நாட்டு மக்களையே நாய்கள் என்றும்,கருணையே காட்ட மாட்டேன் என்று அறைகூவல் விட்ட கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் உதவிய மேற்கத்திய நாடுகளின் சுயநலம் வரவேற்க படவேண்டியதே. 

லிபிய புரட்சியாளர்களின் போராட்டங்களுக்கான நியாயங்களை விட ஆயிரம் மடங்கு வலுவான காரணங்களும்,வரலாற்று நிகழ்வுகளும்,வலிகளும் இலங்கையில் வாழும் வட,கிழக்கு மற்றும் புலம்பெயர் தமிழர்களுக்கு இருக்கிறது.இதனை அடிக்கடி பதிவு போட்டு தமிழர்களுக்கு நினைவு படுத்த வேண்டியிருக்கிறது.இல்லையென்றால் விடுதலைப் போராட்டத்துக்கு குரல் கொடுக்கும் வை.கோ மேல் நொள்ளை, சீமான் மீது அவதூறுகள், திருமா,ராமதாஸ் போன்றவர்களின் சுயநல அரசியல் பிறழ்வு,தி.மு.கவின் குடும்ப நலத்தில் பின் தள்ளப்பட்ட ஈழம்,தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாய் அ.தி.மு.கவினால் மட்டுமே இயலும் என்ற தற்போதைய சூழல் என்ற அனைத்தையும் மறந்தே போய் விடும்.

மேலும்  விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டம் துப்பாக்கியை கீழே போட்டு மரணித்து விட்ட  நிலையில் புதிதாய்ப் பிறந்த நாடு கடந்த தமிழீழ அரசு நம்பிக்கையான ஒன்றாகவே காணப்பட்டது.இப்பொழுதும் அதன் மூலமே தமிழர்களின் குரலையும் கூட ஒலிக்க வேண்டியுள்ளது.லிபியாவின் ராணுவப் புரட்சியாளர்களுக்கும் அப்பால் மேற்கத்திய நாடுகளோடு இணைந்து உடன்பாடு காணும் அமைப்பான Transitional National Council என்பது நாடு கடந்த தமிழீழம் போன்ற ஒன்றே.எனவே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அனைத்துலக அங்கீகாரத்திற்கான உரிமைகள் உண்டு.அமைப்பை இன்னும் ஆக்கபூர்வமாக இயங்க செய்வதிலும்,தமிழகம்,தமிழ் தேசியக் கூட்டமைப்புக்களுடன் இணைந்து வலுவாக செயல்படுவதும் அவசியம்.இலங்கை,இந்திய அரசுகள் தவறுகள் செய்கின்றன என்ற போதிலும் அவைகளுக்கான அங்கீகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கட்டமைப்பு என்ற வலிமை.

அன்னா ஹசாரேவின் மக்கள் உணர்வுகளுக்கான நியாயமான இயக்கத்திற்கே மத்திய அரசு குழப்புவது,சிறையிலிடுவது,இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்வது என்று செயல்படும்போது ராஜீவ்காந்தியின் கொலை,சோனியாவின் இத்தாலிய சினம் என்ற வலுவான காரணங்கள் இருக்கும் போது சீனாக்காரனுக்கு செக் வைக்கிறேன் பேர்வழியென பொய் முகத்துடன் இலங்கைக்கு ஆதரவும்,போர்க்குற்றங்களுக்கு துணையாக கள்ள மௌனம் சாதிக்கவும் செய்வதுடன் தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது.

உண்மையில் காங்கிரஸ் அரசின் நோக்கம் சீனாவின் வணிக நலன்களைக் கட்டுப்படுத்துவதாகவும்,தனது தென் எல்லைகளை பாதுகாப்பதாகவும் இருந்தால் துவக்கம் முதலே சீனாவுக்கு செக் வைத்திருக்க வேண்டும்.இதோ இந்தியாவின் தலையீட்டையும் மீறி இலங்கை சீனாவுடனான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் முகமாக ராஜபக்சே கடந்த வாரங்களில் சீனா போய் விட்டு வந்துள்ளார்.

இந்த இடத்தில் பதிவை வாசிப்பவர்களுக்கு  வெளியுறவு,நாட்டு நலன் ஒப்பீடு ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன்.ஈரானிலிருந்து எண்ணைக் குழாய்களை பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்பு ஈரான்,பாகிஸ்தான்,இந்திய கூட்டமைப்பில் நிகழ்ந்தன.இந்த ஒப்பந்தம் போகாத ஊருக்கு வழிகாட்டின மாதிரியென்ற போதிலும் இந்தியா,பாகிஸ்தான் பெட்ரோலிய எண்ணை தேவைகளைப் பூர்த்தி செய்யும் நல்ல திட்டமே.அதற்கு மூன்று நாடுகளின் நீண்ட நல்லுறவு முக்கியம்.ஈரானுக்கும்,இந்தியாவுக்குமான உறவு கடந்த காலங்களில் வலுவான ஒன்றே என்ற போதிலும் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஈரான் - பாகிஸ்தான் என்ற முக்கோணம் சரியான அரசியல் உறவாக இல்லை.இதனை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்ல ஈரானிடம் எண்ணைப் பொருளாதாரத்தை வாங்காதே,அமெரிக்கா இந்தியாவுக்கு எதிர்கால எரிபொருள் மின்சார உதவிகளை செய்யும் என்று ஜார்ஜ் புஷ் அரசினால் அமெரிக்க சட்டங்கள் தளர்த்தப்பட்டதே இந்திய அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தங்கள்.இப்போது ஈரான் - இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்த திட்டங்களின் நிலை என்ன?இதுவே அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை வெற்றியும், பொருளாதார ரீதியாக நாடுகளை கட்டுப்படுத்தும் நுணுக்கங்களும்.

சீனாவிலிருந்து இலங்கைக்கான தூரமும் புவியியல் ரீதியாக இலங்கையை இந்தியா கட்டுப்படுத்த இயலும் என்ற போதிலும் தனது நாட்டு நலன்களையும் பின் தள்ளி விட்டு இந்தியாவின் தென்னக மக்களுக்கு எதிர்காலத்தில் இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை,பிரபாகரனின் மக்களுக்கு ஒரு கண்னாவது போகவேண்டுமென்ற வஞ்சினமல்லவா இந்திய வெளியுறவுக் கொள்கையாய் இலங்கையில் செயல்படுகிறது.காங்கிரஸ் கட்சிக்கு உண்மையில் தேசநலன்களில் அக்கறை இருந்தால் இலங்கையை  பணிய வைக்க,சீனாவின்  இலங்கையில் மூக்கு நுழைப்பு ஆதரவை இழக்க வைக்கும் வல்லமையை இலங்கை இந்திய புவியியல்,தமிழர்களின் கோபம் என்ற காரணங்கள் போதும்.நேராகவே நோக்கினாலும் கூட இலங்கை,இந்திய உறவு,தமிழ்,சிங்கள கலாச்சாரத்தை காத்தல் போன்றவற்றிற்கு இரு அரசுகளும் துணை புரிய வேண்டும்.மாறாக நிகழ்வது என்ன? பாகிஸ்தான் - இந்திய மக்களின் வெறுப்பு அரசு கட்டமைப்புக்களில் எப்படி ஊட்டி வளர்க்கப்பட்டதோ அதே போன்றதொரு வெறுப்பை மட்டுமே இப்பொழுது இந்திய-இலங்கை அரசுகள் கடல் ஊட்டி வளர்க்கின்றன.
இந்த லட்சணத்தில் சட்டசபை தேர்தலில் வீணாய்ப் போன தங்கபாலு காங்கிரஸ் அரசுக்கு 30 லட்சம் ஈழத்தமிழர்களையும்,7 கோடி இந்திய தமிழர்களையும் காக்க வேண்டிய தலையாய கடமையும்,சீனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய தலையாய கடமையின் காரணமாகவே ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளிக்கிறது என்று அறிக்கை விடுகிறார்.இந்தியாவில் தமிழக மக்கள் இலங்கைக்கான எதிர்ப்பு சக்தி என்பதை உணர்ந்துதானே ராஜபக்சே சீனாவின் உறவுகளை மேம்படுத்தினால் இந்தியா தன்னிடம் கைகட்டி நிற்குமென்ற கணக்குப் போட்டுத்தானே செயல்படுகிறார்?அரசியல் அரிச்சுவடி படிக்காத நமக்கே விளங்கும் உண்மைகள் தங்கபாலுவுக்கும்,அவரது அண்ணாத்தைகளுக்கும் விளங்காமலா போகும்?

இப்ப லிபியா பக்கம் பார்வையை திருப்புவோம்.நேற்று லிபியக் கிளர்ச்சியாளர்கள் அறிக்கையின் படி கடாபியின் ஒரு மகன் சய்ஃப் அல் இஸ்லாம் கடாபியும்,இன்னொரு மகனான சாதி கடாபியும் சரணடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கடாபி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன.ராஜபக்சே? 


Saturday, August 20, 2011

இந்திய ஊழல் பெருச்சாளிகளும் விக்கிலீக்ஸ் பிரபலங்களும்

நேற்று வின் தொலைக்காட்சியில் நீதியின் குரல் நிகழ்ச்சியில் வரலாற்றுப் பேராசிரியர் ஒருவர் (இடையில் நுழைந்ததால் பெயர் தெரியவில்லை) ஜன் லோக்பால் சட்டத்திற்கு எதிராக ஊழலை ஒழிக்க வேண்டுமானால் கிராம நிர்வாக அலுவலர் என்கிற வி.ஏ.ஓ விடமிருந்து துவங்க வேண்டும்.மேலிருந்து கீழே என்பது முறையல்ல என்ற வாதிட்டார்.
 எறும்பு அரித்து மாபெரும் கட்டிடம் அழிவதில்லை.ஆனால் புற்றுநோய் அரித்து மனிதன் மரணித்து விடுகிறான்.எறும்புக்கு மருந்து எளிது.புற்றுநோய்க்கு மருந்து கடினம்.அரசாட்சியில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் மற்றவர்கள் திருடுவது குறையும்.மந்திரிகள்,எம்.பி, எம்.எல்.ஏ என்பவர்களுக்கான சலுகைகள்,வசதிகளுக்கும் அப்பால் பண ஆசை கொண்டவர்களாக இருப்பதும்,இவர்களை தூண்டி தவறான வழிகளைச் சொல்லும் பீரோகிராட்டிக் துவங்கியே ஊழல் இந்தியாவில் அடிமட்டம் வரை வருகிறது.அங்கிங்கு எனாதபடி எங்கும் காண்பது இந்திய ஜனநாயகத்தின் அழுக்கான முகத்தில் ஒன்றாய் ஊழல் மறைந்து கிடக்கிறது.ஊழல் கரங்களின் பட்டியல் இதோ:

http://www.corruption.mobi/list-of-indians-holding-swiss-bank-account-names/

டி.டி.கிருஷ்ணமாச்சாரி பொருளாதார மந்திரி - முந்த்ரா ஊழல் - 1957
இந்திரா காந்தி - நாகர்வாலா ஊழல் - 1965
ஏ.ஆர் அந்துலே - இந்திரா பிரதிஸ்தான் -
கமல்நாத் - குயோ எண்ணை பரிவர்த்தனை - 1980

ஹர்சத் மேத்தா - 4000 கோடி -1991

லலித்மோடி - ஐ.பி.எல் கிரிக்கெட் -

ஹவாலா - 18 மில்லியன் டாலர் - 1996 -அத்வானி உட்பட கறுப்பு பணத்தில் அடிபட்ட பெயர்

லாலு பிரசாத் - மாட்டுத்தீவன ஊழல் - 1996 - 900 கோடி

போபர்ஸ் - 1980 - ராஜிவ் காந்தி - 16 மில்லியன் டாலர்

ஜெயலலிதா - டான்சி நில ஊழல் இன்னும் பல - 

சத்யம் கம்ப்யூட்டர் -ராமலிங்க ராஜு 14000 கோடி -

அப்துல் கரிம் தெல்கி - 20000 கோடி

கல்மாடி - காமன் வெல்த் விளையாட்டு - 2010

எடியூரப்பா - நில ஊழல் வழக்கு - 2010

ஆ.இராசா - 2G ஸ்பெக்ட்ரம் - 1,76,000 கோடி - 2011

கலைஞர் தொலைகாட்சி - 200 கோடி - 2011

ஜன் லோக்பால் சட்ட வரைவுக்கு எதிரானவர்கள் ஊழல்வாதிகளும்,கறுப்பு பணம் சேமிப்பாளர்களும்,அரசியல் சுயநலவாதிகளும் மட்டுமே.இவர்களுடன் சேர்ந்து ஜன்லோக் பால் சட்ட வரைவுக்கு எதிர்க்குரல் கொடுப்பவர்களும் ஊழலுக்கு துணை நிற்பவர்களே.

டிஸ்கி:.விக்கிலீக்ஸ் அசாங்கேவின் தொலைபேசி எண் கிடைக்காததால் பட்டியல் வரிசை உண்மையா என்பதனை உறுதி செய்ய முடியவில்லை.

ரோடியோ குதிரையும் ப.சிதம்பரமும்!

தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தன் பிரதமராகும் தகுதியுண்டு என்ற முந்தைய காலத்து எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டதுமல்லாமல் நிஜ வில்லனாகவே ப.சிதம்பரம் மாறிப்போனது காலத்தின் கோலம்.இந்த லட்சணத்துல முன்பொரு முறை ஜோதிஜி ப.சிதம்பரம் படைசூழ பந்தாவெல்லாம் காட்ட மாட்டாரே என்ற சந்தேக தொனியை வேறு ஒரு பின்னூட்டத்தில் காண்பித்திருந்தார்.அவர் விரும்பாவிட்டாலும் அவரோட பதவிக்கு படைசூழ பாதுகாப்பு அவசியம்.சரி அதை விடுங்க!

நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் அன்னாஹசரே எங்களுடன் பேசமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.எது ஜனநாயக கட்டமைப்பு என்று அன்னா ஹசாரே நினைக்கிறார்?இந்த கட்டிடமா!இந்த மேசையா!இந்த இருக்கையா! ஜனநாயக தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுத்து வந்த நாங்கள் அல்லவா ஜனநாயகத் தூண்கள் என்ற பொருள்படும்படியான விவாதத்தை முன் வைத்து தாங்களே பாராளுமன்ற பிரபுக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அஃறிணைப் பொருட்கள் அசையாமல் நின்றாலும் அவை எப்பொழுதுமே பாராளுமன்ற பாரம்பரியத்துக்கு சொந்தமானவை. எத்தனை தில்லாலங்கடிகளை நீங்கள் உட்பட கண்கூடப் பார்த்திருக்கும் இவைகள்! அசைபவர்களாய் இருந்த நீங்கள் அசையாத ஒரு கிழவனிடம் தோற்றுப் போனீர்களே!துவக்கம் முதல் காங்கிரஸ் செய்தியாளர் மனிஷ் திவாரியின் குரலும்,பேச்சுத்தோரணையுமே காங்கிரஸ்க்கு முதல் ஆப்பு.அதற்குப் பின் கபில் சிபல் என்ற கிரிமினல்(மூளை)லாயர்!கூடவே நம்ம அண்ணாத்தே ப.சிதம்பரம் நாந்தான் ஜெயிப்பேனாக்கும் கோதாவில்.

Entertainment City என்ற ராட்சத ரங்கராட்டினம் போன்ற பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுக்கு குடும்பதோடு சென்றிருந்தோம்.அங்கே ஒரு மரத்தாலான மின்சாரத்தால் இயங்கும் குதிரை ஒன்று உள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் போன்ற இடங்களில் நிகழும் ரோடியோ(Rodeo) குதிரை விளையாட்டு என்ற குதிரை மாடல் அது.மரக்குதிரையை இயக்குபவர் ஒரு பெங்களாதேசி.அது ஒன்றும் பெரிய விசயமில்லை.மெதுவான வேகம்,மிதமான வேகம்,தள்ளி விடும் வேகம் என்ற மூன்று பட்டன்கள் உள்ளன.டிக்கட் எடுத்து ரோடியோ மரக்குதிரையில் அமரந்தால் முதலில் மெதுவான வேக பட்டனையே பெங்களாதேசி தொடுவார்.ஒரு நிமிடம்தான்.மறுநிமிடம் மிதவேக பட்டனை தொடுவார்.தாக்குப்பிடிக்க இயலாதவர்கள் மித வேகத்திலேயே பாதுகாப்பான பிளாஸ்டிக் தரையில் விழுந்து விடுவார்.இதற்கும் மசியாத விடாக்கண்டன்கள் சிலர் இருக்க கூடும்.குதிரையின் கழுத்தைப் பிடித்தால் ரோடியோ குதிரை எந்த குதி குதித்தாலும் கீழே விழாமல் இருக்க முயல்வார்கள்.
கபில் சிபல் ஓட சிதம்பரம்  குதிரையிலிருந்து விழும் கணங்கள்.
நீங்கள் சில ஆங்கிலப்படங்களிலோ ரோடியோ ரைடர்ஸ்களைப் பார்த்திருக்கலாம்.குதிரை குதிக்கிற வேகத்தில் கும்மியடிக்கப்போனவன் கீழே விழுந்தே போவான்.இப்படித்தான் கபில்சிபலும், ப.சிதம்பரமும் அன்னாஹசாரே என்ற சண்டிக்குதிரையை அடக்குவது நீயா?நானா என்ற போட்டியில் குதிரையிலிருந்து குப்புற விழுந்ததுமல்லாமல் குதிரை இருவரையும் குழி தோண்டிப் புதைச்சு விட்டு எங்கய்யா ரோடியோ ஓனர் மன்மோகன் சிங்ன்னு கனைச்சுகிட்டு நிக்குது:) அவரோ ஆளை விட்டா போதும்ன்னு அரக்க பரக்க மைதானத்தை விட்டே ஓடுகிட்டிருக்கார்.இந்தக் குதிரை எப்படியும் உங்களை உதைக்கும்ன்னு தெரிஞ்சும் அதற்கு கடிவாளம் போடப் போக எதிர்பார்க்காமல் எட்டியே உதைத்து விட்டது.சுத்தட்டும் இரண்டு ரவுண்டு ஜெ.பி மைதானத்துலன்னு விட்டிருக்கலமோன்னு இப்ப கவலைப்பட்டு என்ன பலன்?குதிரை காட்டுன வேகத்துல  குதிரைக்கு நிறையவே ரசிகர்கள் கூடிவிட்டார்கள். இனி நீங்களாச்சு!குதிரையாச்சு.

Friday, August 19, 2011

நிருபனுக்கு கடிதம்

நிருபன்!நலமா?நலமறிய ஆவல்
இங்கே தாத்தா கருணாநிதியும்
அம்மாவும் நலமே!
இரண்டு பேருக்கும் எப்பவுமே சண்டை
அது மட்டுமே இங்கே பிரச்சினை
அண்ணன்,அக்கா,தம்பி,தங்கை அனைவரும்
உங்களை கேட்டதா சொல்லச் சொன்னாங்க

அண்ணன் பிரபாகரன் செய்தி
கேட்டு வருத்தமடைந்தேன்
நிழலோடு அருமை வெயிலில்
தெரியும் பழமொழி தெரியும்தானே!

நிருபன்! நிலத்தில் சூடு அதிகம்
என உறவொன்று சொல்லக்கேட்டேன்
உங்களுக்கு தலை சுற்றி உள்ளதாக சொன்னார்

நிருபன்! உடலை பார்த்துக்கொள்ளவும்
கனடாவிலிருந்து ரதி அனுப்பிய மருந்து கிடைச்சதா?
ஒருவேளை பதிவு மருந்தையும் மறுவேளை
பின்னூட்ட மாத்திரைகளையும் கலந்து குடிச்சா
இரண்டு நாட்களில் சரியாகி விடும்


பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்கிறான்?
ராணுவக்காரன் சண்டைக்கு வந்தானா?
உறவினர்கள் கஷ்டத்தில் இருப்பதாக
ஊர் முழுக்க பேசிக்கொள்கிறார்கள்
லண்டனிலிருந்து அனுப்பும் பணத்தையெல்லாம்
பாவிகள் புடுங்கி கொள்வதாக பேச்சு!மெய்யாலுமா?

டக்ளஸு மேலே கேஸ் இருக்குது
தமிழ்நாடு பக்கம் வந்தா
களி திங்கனும்ன்னு சொல்லி வையுங்கோ

பிள்ளையானும்,கருணாவும்
இன்னும் சண்டை போடுறாங்களா?
நல்லதுக்கில்லைன்னு சொல்லி வையுங்கோ

உறவுகள் நிலத்தை ராணுவக்காரன்
பிடுங்கி கொண்டதாகவும் தகவல் வந்தது
கோர்ட்டில் கேஸ் போட்டிருக்கோம்
தீர்ப்பு நமக்கு சாதகமா வருமென்று
அம்மா சொல்றா!பொறுத்திருப்போம்

உறவுகளை கேட்டதா சொல்லுங்கோ
நட்பா இருக்கும் சிங்களக் குட்டி பசங்களையும்
கேட்டதா சொல்லுங்கோ
மற்றவை பதில் கண்டு பதில்

இப்படிக்கு
அன்புள்ள
சகோ.

Wednesday, August 17, 2011

ஐக்கிய முன்னணி கூட்டணி vs அன்னா ஹசாரே குழு

முந்தைய பதிவுகளில் இந்திய அரசியல்வாதிகளைப் பற்றிய கடுப்பே அதிகமாய் இருந்தது.இப்போதைய அரசு vs அன்னா ஹசாரே இழுபறியில் ஆளும் காங்கிரஸ் மூக்கறு பட்டாலும் கூட,அன்னா ஹசாரே குறித்த நேர்,எதிர்மறை விவாதங்கள் வலம் வந்தாலும் கூட இந்திய ஜனநாயகத்தின் புதிய பரிமாணமும்,கூடவே ஆளும் காங்கிரஸின் ஜனநாயகத்திற்கு வலுவூட்டிய தற்போதைய எதிர் நிகழ்வுகள் மகிழ்ச்சியையே தருகிறது.

இருபக்க நிலைப்பாடுகளையும் ஊன்றிக் கவனிப்பவர்களுக்கு அன்னா ஹசாரே குழுவினரின் ஊழலுக்கு எதிரான குரல் மக்கள் குரலாகவே ஒலிப்பதும்,காங்கிரஸின் திசை திருப்பும் முயற்சிகள் அவர்களுக்கு எதிராகவே திரும்பி விட்டதும் நன்கு புரியும்.
அன்னா ஹசாரே குழுவினரை இன்னும் கவிழ்க்கும் சகுனித்தனங்களுக்கான வல்லமை காங்கிரஸ்க்கு இருப்பதாகவே தெரிகிறது.சோனியா அமெரிக்க படுக்கையிலும்,பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புக்கு சப்பாணி சென்சிடிவ் மேனாக இருப்பதாலும் தற்போதைக்கான உண்மையான வில்லன்கள் ப.சிதம்பரமும்,கபில் சிபல் மட்டுமே.காங்கிரஸ் கூட்டணி கவிழும் நிலையிலோ அல்லது நொண்டிக்குதிரையாகவே இனி வரும் நாட்களில் பயணிக்கும்.வாரிசு ஸ்...பின் அரசியல்  ராகுல் காந்திக்கு வழி திறப்பதும்,அன்னா ஹசாரே குழுவின் நிழலில் பி.ஜே.பி அறுவடை செய்வது மட்டுமே இனி மேல் இந்திய அரசியலில் நிகழும் முன் ஜோஸ்யங்கள்.

இந்திய ஜனநாயகம் அதிக கூச்சலிட்டாலும் பயணிக்கும் பாதை சரியாகவே செல்கிறது.ஐக்கிய முன்னணி கூட்டணிக்கும் அன்னாஹசாரே குழுவுக்கும் வாழ்த்துக்கள்!.

தமிழும் நிழலாய்

சிலேட்டு
பென்சில்
அ.ஆ இ.ஈ

பேனா
புத்தகம்
கட்டுரை வரைக

அப்பாவுக்கு கடிதம்
அம்மா நலமா?
பணம் அனுப்பவும்

காதலிக்கு கடிதம்
கண்ணே!மணியே
எப்பொழுதும் உன் நினைவாய்

மனைவிக்கு கடிதம்
பிள்ளை  படிச்சானா
பணம் அனுப்பி வைக்கிறேன்

வலையில் பகிர்வு
தமிழ் மட்டும் 
கூடவே நிழலாய்.

(குறிப்பு:மூன்று மூன்று வரிகளின் காலங்களில் தமிழ் )


பதிவுலக ரயில் பயணம்.

ரயில் பெட்டி எண்ணை தேடும் பரபரப்பு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இருக்கை.
அடுத்த இடு(க்)கையில் யார் என்ற தேடல்.


இல்லாதவர்கள் நின்று பயணிக்கும் பின்னூட்டங்கள்

சக பயணிகளோடு பயணிக்கும் அனுபவம்
பெரும்பாலும் பயண அனுபவ புது நண்பர்கள்.


சாயா,முறுக்கு,கடலை விற்பனைகள்
சிலர் நண்பர்களாய் கலாய்த்துக் கொள்ளும் சப்தங்கள்.
குடும்பமாய் உணவைப் பரிமாறிக்கொள்ளும் உபசரித்தல்.


என்றைக்காவது பயணிகள்
வார விடுமுறைப் பயணிகள்
அலுவலும் அலுவலகமே பயணிகள்.

கழிவறையின் மூத்திர நெடிகள்
பரிதாபத்துக்குரிய ஊனங்கள்
ஓட்டு பிச்சைப் பாத்திரங்கள்.


முகமூடி போடுவதே குளிருக்கு எனும் நல்ல அண்ணா னிகள்
முகமூடி போடுவதே திட்டி வைக்க எனும் அனானிகள்
முகமூடி போடாதவன் யோக்கியமா கேள்வி கணையாளிகள்.

தெரியாமல் கால் பட்டும் தெரிந்தே கால் மிதிக்கும் குற்றங்கள்
பொதுப்பயணத்தில்  கெட்ட வார்த்தை மது நெடி மூக்கு சுழிப்புகள்
இரு பெட்டிகள் ஆட்டமாய் எது சரியென்று விவாத குழப்பங்கள்.


எல்லைகளை இன்றோ நாளையோ மறுதினமோ எட்டும் இலக்குகள்
மரங்கள் மாதிரி இருப்புக்கள் கடக்கும் மனிதர்கள்,நிகழ்வுகள்
விபத்தான ஈழப் படுகொலைகளை உரக்க சொல்லும் செய்தியாளர்கள்.

கூ...கி...ள் என்று சத்தம் போடும்  நீண்ட பெட்டிகள்
ஆயுத சாலை  தயாரிப்பு மென்பொருள் வல்லுநர்கள்
இத்தனை பாரங்களையும் சுமக்கும் மகத்தான இயக்குநர்கள்.


ஸ்டேசன் வந்துடுச்சு  போயிட்டு வாரேன் மன தேம்பல்கள்
அப்பாடி!போய் சேர்ந்தா சரியென கையசைப்புகள்:)
 
போன பின் திரும்பாத வாழ்க்கை பயணங்கள்!  

நெஞ்சம் தட தடக்க வைக்கும் வாசிப்பின் ஆச்சரியக் குறிகள்
தனிமையில் புத்தக வாசிப்பான ஏகாந்த நிலை
கும்மியில் விசிலடிக்கும் சிரிப்பான நயனம்.

பதிவுலகம் தட தட  சத்தங்களின் நீண்ட ரயில் பயணம்...

Monday, August 15, 2011

சுதந்திர இந்தியா!

உலக அதிசயங்களில் ஒன்று பல்வேறு மொழிகள்,கலாச்சார விழுதுகள் கொண்ட மக்களின் ஒன்றிணைந்த மாநிலங்களாக இந்தியா என்ற நாடு.தனித் தனி தீவுகளாய் இருந்த மன்னராட்சி முறையை ஒன்றிணைத்த தொலை நோக்குப் பார்வையே இந்திய நாடும் அரசியல் சட்ட வரைவும்.

போராடும் குணமுள்ள மனிதர்களால்  இந்திய மாநிலங்கள் சிறப்படைகிறதா என்ற புது ஞானத்தை தருகிறது இந்திய சுதந்திர தினம்.காலிஸ்தான்,தனி தமிழ்நாடு போன்ற குரல்களுக்குப் பின்பே பஞ்சாப்பும்,தமிழகமும் வளர்ச்சியுற்ற மாநிலங்களாக உள்ளன.வாய் மூடிக்கிடந்த அஸ்ஸாம்,நாகலாந்து,பீகார் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் பின் தங்கிப் போய் விட்டன.மனித உரிமை மீறல்கள்,வன்முறை,காவல் துறை அடக்குமுறை,ஊழல்,அரசியல் சுயநலம்,சுகாதாரப் பின் தங்கல் என்ற பல காரணங்கள் உலக தரத்தில் இன்னும் வளர்ச்சியற்ற இந்தியாவை படம் பிடித்துக் காட்டுகின்றன.

இவைகளையெல்லாம் மீறி தனிமனித நற்குணங்களும், கலாச்சார, பண்பாடு விழுமியங்களும் கலாச்சார பூமியென்ற இந்தியாவை இறுக கட்டிப் போட்டிருக்கின்றன.மத குரோதங்களும், மத தீவிரவாத விரோதங்களும் தனி மனித வெறுப்புக்களை வளர்க்கின்றன.அதனையும் மீறி மாற்று மதத்தை மதிக்கும் மனித நேயமே எஞ்சி நிற்பதால் உலக வரைபடத்தில் இன்னும் இந்தியா ஒரு ஆச்சரியமான பூமியே.ஒரே மொழியின் கீழ் பல்வேறு கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளை விட பல கலாச்சார,பன்மொழி மக்களை ஒன்றிணைப்பது சவலான ஒன்று.சவாலை 64 ஆண்டுகளாக இந்தியா சாதனையாக மாற்றி உலக அரங்கில் வலம் வருகிறது.21ம் நூற்றாண்டும்,இணைய தகவல் பரிமாற்றங்களும், விஞ்ஞானமும்,குறைகள் களைந்து இந்தியாவை இன்னும் முன்னேற்றப் பாதையில் நிச்சயம் கொண்டு செல்லும்.

வேற்றுமையில் ஒற்றுமையென்ற இந்திய பாடத்தை இலங்கையும் கற்றிருந்தால் ஒன்றிணைந்த இலங்கையென்பதே சரியாக இருந்திருக்கும்.நிகழ்ந்தவையோ இந்திய ஜாலியன்வாலாபாக்கையும் மிஞ்சிய மனிதப் படுகொலைகள்.தீர்ப்புக்கள் எதுவென்று ஈழ மக்கள் தீர்மானிக்கட்டும்.

தீவிரவாதிகளாய் ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட அனைத்து சுதந்திர தேசபக்தர்களுக்கும் இந்த பதிவு காணிக்கை.

Saturday, August 13, 2011

தமிழக சட்டசபையா?ஓமந்தூரார் கட்டிடமா?


இந்த பதிவை சென்ற பதிவிற்கு முன்பே இட வேண்டியது.சென்ற பதிவில் புதிய சட்டசபை கட்டிட திட்டத்திற்கு பாராட்டுக்கள் சொல்லிகருணாநிதிக்கும் பாராட்டுக்கள் தெரிவித்திருந்தேன்.ஆனால் ஜெயலலிதாவிற்கு கொடுத்த மதிப்பெண்கள் அதிகமென்றும் ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு அரசியல் நோக்கங்கள் கொண்டது என கோத்தபய ராஜபக்சே போலவே பின்னூட்ட நண்பர்களும் சொல்லியிருந்தார்கள்.ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து மேலும் கணிக்க நாலே முக்கால் ஆண்டுகள் உள்ளன.

இப்போதைக்கு ஜெயலலிதாவின் சமச்சீர் கல்வி செயல்பாட்டுக்கு அடுத்து கேள்விக்குறியாக இருப்பது புதிய சட்டசபை கட்டிடம்.கருணாநிதி அவர்கள் புதிய சட்டசபைக் கட்டிடத்தை திறந்த காலத்தில் கட்டிடம் குறித்த வியப்பே அதிகமாய் இருந்தது.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் புதிய சட்டசபையில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சொல்லி ஜார்ஜ் கோட்டையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதும்,கட்டிட ஊழல் என்ற அவரது குற்றச்சாட்டும்,கட்டிடம் அழகாயில்லை எண்ணைச் சட்டி மாதிரி இருக்கிறதென்ற பதிவுலக விமர்சனங்களும் என மாற்றுப் பார்வைகளையும் முன் வைத்துள்ள நிலையில் கட்டிட ஊழல் பற்றி இன்னும் சரியான உண்மைகள் வெளிப்படாத போது காலத்துக்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும், வசதிக்கும்  ஏற்றார் போல் புதிய சட்டசபை உருவாக்கியது கருணாநிதியின் ஆட்சியின் சிறந்த முடிவே எனலாம்.ஆனால் முடிவுக்குப் பின்னால் உள்ள சுயநலங்களாய் ஊழல் என்று இருந்தாலும் இந்தக் கட்டிடத்தை கிடப்பில் போட்டு விடுவது சிறந்த முடிவாக இருக்குமா என்றால் இல்லையென்றே கூறலாம்.

                                  தி.மு.க அரசு கண்ட கனவு
   http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2331534.ece

பாபர் மசூதி இடிக்கப் பட்டபின் புதியதாக இந்தக் கட்டிடத்தை எப்படி உபயோகிக்கலாம் என இந்தியா டுடே பத்திரிகை வாசகர்களுக்கு கருத்துக் கேட்டமாதிரி புதிய சட்டசபைக் கட்டிடத்தை என்ன செய்யலாம் என ஹிந்து பத்திரிகை இப்பொழுது வாசகர் கருத்து கேட்கிறது.புதிய சட்டசபை ஒன்றும் வில்லங்க நிலமல்ல.இதில் விவகாரமே ஊழல் என்ற ஒன்றைத் தவிர ஜெயலலிதாவின் பிடிவாதமும்,தமிழர்களுக்கு இயற்கையாகவே உள்ள வாஸ்து என்ற வஸ்து மூட நம்பிக்கையும் கூட.பதிவர் பழமைபேசிக்கு காளமேகப் புலவர் கனவில் வந்து போகிற மாதிரி பெரியார் நினைவில் வந்து போகிறார்.

  ஜெர்மன் கட்டிடக் கலை நிறுவனம் பிலிம் காட்டியது
    http://www.gmp-architekten.de/en/projects.html


புதிய சட்டசபையின் பின்புலம் என்ன?.ஓமந்தூரார் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்ட புதிய சட்டசபை 9.3 லட்ச சதுர அடி கொண்ட ஏழு அடுக்கு மாடி கொண்ட நான்கு வட்ட வடிவம் கொண்டது.சுருக்கமாக சொன்னால் 4 பெரிய எண்ணைச் சட்டிகளின் வடிவம்:)இவை 600 சதுர அடிமுதல் 2000 சதுர அடிவரையிலான 700 அறைகள் கொண்டவை.முந்தைய ஆட்சியில் அனைத்து அரசு துறைகளும் செயல்பட்ட போதும் சட்டசபை செயலகம் மட்டும் பழைய ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்பட்டது.
                                       சட்டசபை வளாகத்தின் வரைபடம்
 http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2331513.ece
 
500 கோடிக்கு திட்டமிடப்பட்ட புதிய சட்டசபை கட்டிடம் தற்போது 1,092 கோடிகளைத் தாண்டுமென கணிக்கப்படுகிறது என ஹிந்து பத்திரிகை சொல்கிறது.விலை, சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையில் விலையேற்றம் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றா?.இதனை நாம் ஒரு வீடு கட்ட துவங்கும் காலத்திற்கு திட்டமிடும் பட்ஜெட்டுக்கும்,நமது பொருளாதார சிக்கலால் ஒரு வருடம் இரண்டு வருடமென தள்ளிப் போய் விட்டால் நாம் எதிர்பார்த்த செலவுக்கும் அதிகமாகவே போய் விடும்.சந்தைப் பொருளாதாரத்தோடு கிடைத்த வரை லாபம் பார்க்கும் சுபாவம்,பதுக்கல்  எதிர் பொருளாதார காரணிகளும் சேர்த்தியே.

மத்திய கிழக்கு நாடுகளில் தனியார் துறை கட்டிடங்களோ,அரசு துறை டெண்டர்களோ குறிப்பிட்ட கால வரையறை செய்து கொண்டு,குறிப்பிட்ட முன் பட்ஜெட்டில் கட்டிடங்களை செய்து முடித்து விடுகிறார்கள்.திட்டம் உறுதியானவுடன் அஸ்திவார மண்ணைத் தோண்டிய கணத்திலிருந்து மின்சார விளக்குகள் கண்ணை பளபளக்க குளிர்சாதன வசதிகளுடன் கட்டிடத்திற்குள் நுழைவது வரையிலான திட்டங்களை நினைத்தால் பெருமூச்சே வருகிறது.இதற்கான முக்கிய காரணம் ஊழல்,அரசியல் தலையீடு,தனி மனித விரோதம் என எந்த எதிர் நிலைகளும் இல்லாததே.திருட்டுப் பணத்தை துபாயில் பதுக்கும் அரசியல்வாதிகள் துபாயின் புர்ஜ் கலிபா உயர்ந்த கட்டிடம் மாதிரியான தகுதிகளைநாமும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பதேயில்லை.நம்மைப் பொறுத்த வரையில் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எல்.ஐ.சி கட்டிடமே போதும் என்ற தேக்கமும்,,பூதம் காத்த பணமாக ஸ்விஸ் வங்கி கள்ளப்பணமே கனவு.
                                 துபாய் பூர்ஜ் கலிபா கட்டிடம்
கூகிள் தேடலில் பதிவர் ராஜராஜேஸ்வரி தளத்த்தில் சுட்டது.

புதிய சட்டசபை தேவையென்ற எண்ணமே ஜெயலலிதாவினால் முந்தைய அவரது ஆட்சியில் முன் வைக்கப்பட்டதும்,கருணாநிதியின் தூண்டுதலால் அப்போது சுற்றுப்புற சூழல் மந்திரியாக இருந்த டி.ஆர். பாலு அனுமதி மறுத்து விட்டார் என்று ஜெயலலிதா குற்றம் சுமத்துகிறார்.
 
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் என நக்கீரன் செய்திக்கு ”ஐயா! பைபிள் கூறுகிறது,பாவியான ஒரு மனுஷன் எல்லாவித நன்மைகளையும் கெடுப்பான் என்று|” ஞானசேகரன் என்பவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.இந்தப் பின்னூட்டம் கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்குமே பொருந்தும் என்ற போதிலும் பட்டம்,கோப்பை என வாங்குவதில் கருணாநிதியே சிறந்தவர் எனபதை பதிவுலகம் இன்னும் பறைசாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறது.
 
தூரப்பார்வையில் இன்னும் வளரும் ஜனத்தொகையின் அடிப்படையிலும், நிர்வாகத் தேவை கருதியும்  ஜார்ஜ் கோட்டையும்,புதிய சட்டசபையும் தமிழக சட்டசபைகளாகவே இயங்க வேண்டுமென்பதே எதிர்காலத்திற்கு கருணாநிதி,ஜெயலலிதா விட்டுச் செல்லும் நினைவுச் சின்னங்களாகும். அவைகள் நிகழாத வரை கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்களை பொதுநலம் கருதி விமர்சிப்பது வயது,தகுதிகளுக்கு அப்பாலான பதிவுலகத்தின் கடமையாகும்.  

Friday, August 12, 2011

ஜெயலலிதா 100க்கு எத்தனை மார்க்?

 2011ம் வருட சட்டசபை தேர்தலின் வெற்றியில் தி.மு.க தரப்பில் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியாத இன்னுமொரு வாய்ப்பு அ.தி.மு.கவுக்கு அமையுமா என்ற கேள்வியுடன் 100 நாட்களுக்கான அ.தி.மு.க வின் ஆட்சியை விமர்சனம் செய்யும் நேரம் வந்து விட்டது.பல முறை கருத்துக்கள் வெளியிட கை பரபரத்தும் நிகழ்வுகளின் அடிப்படையில் கருத்து சொல்லாமல் வெறுமனே விமர்சிக்கலாமென நினைப்பது சரியாக இருக்காது.என்னைப் பொறுத்த வரையில் முந்தைய தி.மு.க மீதான கோபம் மலை தூக்கும் வல்லமையுடைவன் மலை முழுங்கி மகாதேவனாகப் போனதிலான ஈழப்பிரச்சினையில் திசை திருப்பியதில் துவங்கியதே எனலாம்.இதன் மீதான எதிர்வினைகளைத் தொடர்ந்து தி.மு.க மீளமுடியாத சாக்கடைக்குள் சிக்கிக்கொண்டுள்ளதை பத்திரிகை ஊடகங்களும்,பதிவுலகமும் படம் போட்டுக் காண்பித்தன.எனவே தி.மு.க மீதான விமர்சனம் பல தி.மு.க சார்பு நிலையாளர்களுக்கும் அ.தி.மு.க என்ற அமைப்பு என்று சொல்வதை விட ஜெயலலிதா சார்பாளர்கள் தி.மு.க மீது சேறை வாரி இறைக்கிறார்கள் என்ற கோபத்தையே உண்டாக்கியிருக்கும்.


மடங்கள் போலவே தி.மு.க இயக்கமும் மாறிப்போனதை விமர்சிக்காதவன் பகுத்தறிவுள்ள தி.மு.க சார்பு நிலையாளனாக இருக்க முடியாது.தன்னை தி.மு.க காரன் என்று இன்னும் பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள் தி.மு.க இயக்கத்தில் மந்திரி ஏனைய பதவிகள் மற்றும் ஏதாவது ஒரு விதத்தில் பலனடைந்தும்,எந்த பலனும் அடையாமல் தொண்டன் என்ற நிலையில் தி.மு.க இயக்கத்தை நேசித்து பட்டா எழுதிக்கொடுத்த வட்டத்துக்குள் வருபவர்களாகவே இருக்க முடியும்.எத்தனை ஆண்டுகள்,எத்தனை மனிதர்களின் உழைப்பும்,சமூகம் சார்ந்த மாற்றங்களும்!கடந்த ஐம்பது ஆண்டுகள் தமிழக வரலாற்றிலும்,வளர்ச்சியிலும் தி.மு.க என்ற இயக்கத்துக்கு நிறையவே பங்குண்டு.கூடவே சுயநலங்களால் விளைந்த பக்க விளைவுகளாய் மனிதர்களை காவு கொடுத்தலும் ஆரிய,திராவிட,மலையாளி பிரித்தலும்,லஞ்சத்தின் உச்சங்களும்,சுயநலத்தின் திசை திருப்புதலாய் மாற்றுக்கட்சிக்காரன் என்ற வெறுப்புணர்வும் அடங்கியதே எனலாம்.

ஏனைய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்ச்சியும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றே என்ற போதிலும் சாய்ந்தால் சாயும் மாடுகள் மாதிரியான கட்சி என்ற வட்டத்துக்குள் மட்டுமே சிந்திப்பது என்ற ஒற்றைப் பார்வையினாலே அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றும் சூழல்களே உருவாகின எனலாம்.

ஜெ அரசு பற்றி சொல்வதற்கு முன் தி.மு.க என்ற பார்வையை முன் வைப்பதற்கு காரணம் தி.மு.க இயக்கமாக இயங்கிய போதும் கருணாநிதி, எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற  மூன்று தனிமனித ஆளுகைக்கு உட்பட்டே தமிழக அரசியல் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறதெனலாம்.கருணாநிதி தனது சுய உழைப்பால் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட அதே வேளை எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்ற தனி மனிதர்களையும் வளர்த்து விட்ட பெருமை கருணாநிதிக்கே சாரும்.ஜெயலலிதாவையும் கூட மக்கள் எப்படி ஆட்சி பீடம் வரை கொண்டு வருகிறார்கள் என்றே எனது முந்தைய பார்வையாக இருந்தது:).இன்னும் கூட ஒரு முழுமையான அரசியல்வாதியா என்ற சந்தேகத்துக்கும் காரணம் அவரது மூன்று கால் முயல் சுபாவம்.தமிழக,இந்திய கால சூழ்நிலைகளும்,சராசரி மனிதர்களும்,கருணாநிதியும் மட்டுமே ஜெயலலிதாவின் வெற்றிக்கு பங்காளிகள்.

தனது கடந்த கால அரசியலில் ஜெயலலிதா தற்போது பாடங்கள் கற்றுக்கொண்டதாகவே தெரிகிறது.இல்லையென்றால் 90 டிகிரி நிலைப்பாட்டிலிருந்து 180 டிகிரிக்கு சோமர்செட் டைவ் அடிக்கும் சாத்தியமேயில்லை.கூடவே வயது, அனுபவத்திற்கேற்ற மெச்சூரிட்டியும் இருப்பதை மறுப்பதற்கில்லை.இலவசங்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்தே திரும்ப கொடுக்கப்படுவதால் கருவூலத்தின் பணம் பெரும் திட்டங்களுக்கு உதவ இயலாமல் நெல்லுக்கு நீர் என சொல்லி புல்லுக்கும் பாயும் வித்தைகளுடன் உலக வங்கி கடன் வாங்கி அதன் வட்டியையும், மக்களே சுமக்க வேண்டிய நிலைகளை இரண்டு கழக ஆட்சிகளுமே ஊக்குவிக்கின்றன.இது ஒரு சுழல் வட்டம்.இதனை சுழற்சியிலிருந்து மாற்று அரசியல் இல்லாத வரை தமிழகம் இதனை சுமந்து கொண்டே திரிய வேண்டியுள்ளது.

எந்த ஆயுதத்தை தேர்ந்தெடுப்பது என்பதை எதிரியே தீர்மானிக்கிறான் என்ற வாக்கியங்கள் ஜெயலலிதாவுக்கும் பொருந்தும் என்பதால் முந்தைய தி.மு.க வின் இலவச திட்டங்களுக்கு எதிர்க்கணை என்ற விதத்தில் ஜெயலலிதாவின் யுக்தியும்,வெற்றிக்குப் பின் வாக்குறுதிகளை செயல்படுத்தும் விதம் பாராட்டுக்குரியது.

ஹிந்து பத்திரிகை கடந்த சில தினங்களுக்கு முன் புதிய சட்டசபையை என்ன செய்யலாம் என்று மக்கள் கருத்தை கேட்கும் விதத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.கூடவே படங்களும்.ஜெர்மன் கட்டிடக்கலை நிறுவனமான http://www.gmp-architekten.de/en/projects.html அப்படியொன்றும் 2G ஸ்வான் கம்பெனி மாதிரி டுபாக்கூர் நிறுவனமல்ல. பல உலக நிறுவன கட்டிடங்களைக் கட்டி முடித்து தனது பெயரை தக்க வைத்துக்கொண்டுள்ள நிறுவனம்.இதனை தேர்ந்தெடுத்த அரசு அதிகாரிகளும்,ஆலோசனையாளர்களும், முக்கியமாக கருணாநிதியும் பாராட்டுக்குரியவர்களே.ஆனால் தி.மு.க அரசு எதிர்பார்த்த கட்டிட கனவுக்கும் கிடைத்ததோ பதிவர் கோவி கண்ணன் தமிழக சட்டசப்பை குறித்து சொன்னது போல் எண்ணை சட்டிக்கும் நிறையவே வித்தியாசம்.இன்னும் புரிதலுக்கும்,ஜெயலலிதாவின் நிலைப்பாடு சரியா தவறா என்ற விவாதத்திற்கும் இடமளிக்கும் என்பதால் சட்டசபை கட்டிடம் குறித்து தனியாகவே ஒரு பதிவிடுவது நல்லது.
                                                       நினைச்சது ஒண்ணு!

பாஞ்சாலி சபதம் மாதிரி புதிய சட்டசபைக்குள் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்ற கட்டிட வேலை நேரத்திலேயே ஜெயலலிதா சூளுரைத்த காரணத்தால் சமச்சீர் கல்வி மாதிரியான பிடிவாதமா அல்லது ஜெயலலிதாவின் வாதப்படி சட்டசபை கட்டுவதில் தில்லுமுல்லுகள் என்பது சரியா எனபதையும்,தேன் எடுத்தவன் கையை நக்காமல் விடமாட்டான் என்ற கருணாநிதியின் முந்தைய காலத்து கூற்றுப்படி தேன் தொட்ட கையை நக்கிய சாத்தியங்களும் இருக்கலாம் என நம்பலாம். சமச்சீர் கல்வி மாதிரி உச்சநீதிமன்றம் மட்டுமே தீர்ப்பை வழங்க இயலும்.
                                                      கிடைச்சது ஒண்ணு!
            
இப்போதைய  நில அபகரிப்பு என்ற பெயரில் தி.மு.க சார்ந்தவர்கள் கைது படலங்கள் மேலும் அதிர்ச்சியையே தமிழக மக்களுக்கு வழங்குகிறது.தி.மு.க தோல்விகளின் திசை திருப்பும் படலமாகவே சிறை நிரப்புவோம் கோசம் ஒலிக்கிறது எனலாம்.எல்லோர் மீதும் பொய்க்குற்றம் சாட்டி கைது செய்து விட முடியாது.எனவே தவறு செய்தவர்கள் களி தின்னட்டுமென்றே மக்கள் நினைப்பார்கள்.

ஜெயலலிதாவுக்கு எதிரி ஜெயலலிதாவே என்பதை சமச்சீர் கல்வி விசயத்தில் நிருபித்திருக்கிறார்.துவண்டு போயிருந்த கருணாநிதிக்கு வைட்டமின் மாத்திரை கொடுத்து உசுப்பி விட்டிருக்கிறார்.விடுதலைப்புலிகள் இல்லாமல் ஈழப்போராட்டமா?முந்தைய ஜெயலலிதாவின் ஈழம் குறித்த அணுகுமுறை ஆலோசனை குரு சோ வின் அணுகுமுறையைச் சார்ந்தது.முந்தைய ஜெயலலிதாவின் ஈழம் குறித்த அணுகு முறையில் தவறுகள் உண்டு என்பதும் தமிழக அரசியலில் ஈழ விடுதலைப் பின்தள்ளப்பட்டதற்கும்,திசை மாறிப்போனதற்கும் ஜெயலலிதாவும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை.ஆனால் புதிய மனுசியாக ஈழம்,இலங்கை குறித்த அவரது நடவடிக்கைகள்,கருணாநிதிக்கு வைக்கும் செக்மேட் என்று கருதுவதா அல்லது போரின் துயரங்களின் காணொளிகள் கண்டு மனம் மாற்றம் அடைந்துள்ளாரா என்பது இன்னும் வினாக்குறியே.
 
சட்டசபை தீர்மானங்கள் தி.மு.கவின் காலத்திலேயே கூட நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.இப்பொழுதும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இரண்டு தீர்மானங்களுக்குமுள்ள வித்தியாசங்கள் தி.மு.கவின் தீர்மானங்கள் கருணாநிதிக்கு பயத்தை தந்தது. அ.தி.மு.கவின் தீர்மானம் ராஜபக்சேக்களுக்கு பயத்தை தருகிறது.டெல்லிக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்ற அறிக்கையை விட தமிழகத்தில் உள்ள அகதிகளுக்கும் ஓய்வூதியம் என்ற அறிக்கை உலக தமிழர்களை மகிழ்ச்சியில் திளைத்தது எனலாம்.தன்னை எதிர் கால வரலாற்றில் பதித்துக்கொள்ள வேண்டுமென திட்டமிட்டு ஒவ்வொரு கட்டிடங்களையும்  கருணாநிதி எழுப்பியும் வரலாற்றுக் கறையாக ஈழப்பிரச்சினையில் துவக்கம் முதல் சார்பு நிலையிலிருந்தும் ஆட்சி பறிபோன பரிதாப நிலையிலிருந்தும் மாறி துரோகி என்ற முத்திரையை இறுதியில் பதித்துக்கொண்டார்.

தமிழக வரலாற்றிலும்,இந்திய,உலக வரலாற்றிலும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கு தமிழீழ மக்களின் உரிமையை மீட்டுத்தருவதற்கான அஸ்திவாரத்தை காலம் தந்திருக்கிறது.இதனைப் பயன்படுத்திக்கொள்வது ஜெயலலிதாவின் கரங்களில் உள்ளது.அந்த திசையில் பயணம் செய்வார் என்பதற்கு நம்பிக்கையாக முந்தா நாள் ஹெட்லைன்ஸ் டுடேவுக்கு கோத்தபய ராஜபக்சே கொடுத்த பேட்டியில் Jayalalitha trying to get a political milage என்பதற்கு, எங்கே குத்தினால் கோத்தபயலுக்கு வலிக்கும் என்று மத்திய அரசின் செயல்படாற்ற நிலையால்தான் கோத்தபய தமிழக அரசின் தீர்மானத்தை கேலி செய்வதாகவும் இந்திய தூதரகம் மூலம் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் குரல் எழுப்பியுள்ளார்.கூடவே ஈழத்தமிழ் மக்களுக்கான சம உரிமை வாழ்க்கையைப் பெற்றுத்தராமல் தனது தலைமையிலான அரசு ஓயாது என்ற சட்டசபை அறைகூவலும்.இதனை ராஜபக்சே பணிவிடையாளன் ஹிந்துப் பத்திரிகை தலைப்புச் செய்தியிடுவது இன்னும் ஆச்சரியம்!

குறைகள் இல்லாத மனிதனா?விமர்சனம் இல்லாத அரசியலா? சமச்சீர் கல்விக்கு 15 மதிப்பெண்களை குறைத்து விட்டு ஜெயலலிதா வாங்கும் மதிப்பெண் 100/85%

பொறுப்பி: நல்லாப் படிச்சதுக்கு மட்டுமே பாஸ் மார்க் கொடுக்கப் பட்டிருக்கிறது.நல்லா ஆப்படிச்சதுக்கு கொடுக்கப்பட்ட மார்க் என  மாத்தி வாசிச்சு  பக்கத்து பெஞ்சிலிருந்து தி.மு.க சார்பாளர்கள் முருங்கை மரம் ஏறிக்கொண்டால் விமர்சக வகுப்பு வாத்தியார் பொறுப்புக் கிடையாது:)   

Thursday, August 11, 2011

அப்சல் குருவின் தூக்குத்தண்டனை

வாஜ்பாய் அரசின் பி.ஜே.பி காலத்து சம்பவங்களில் பொக்ரான் அணுகுண்டு சாதனைக்கு மாற்றாக ஜனநாயக தோல்விகளில் முக்கியமானவைகளில் இரண்டு தலிபான்களால் December 24, 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814  ஆப்கானிஸ்தானுக்கு கடத்தப்பட்டதும்,13 December 2001ல் இந்திய பாராளுமன்றத் தாக்குதலும் எனலாம்.

இந்திய பாராளுமன்றத் தாக்குதலில் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு 2004ம் வருடம் உச்சநீதி மன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முகமது அப்சல் எனும் அப்சல் குரு மரண தண்டனை October 20, 2006ல் நிறைவேற்றப்பட்டு  அவரது மனைவியின் கருணை மனு ஜனாதிபதியின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்திய உள்துறை அமைச்சகம் அப்சல் குருவின் கருணை மனுவை ஏற்க வேண்டாம் என கூறியுள்ளது.இதில் இந்திய உள்துறையின் உள்குத்து வேலையில் முக்கியமானது என்னவென்றால்  June 23, 2010ல் ஜனாதிபதிக்கு அப்சல் கருணை மனுவை ஏற்கவேண்டாம் என்ற சிபாரிசை January 7, 2011ல் விக்கிலீக்ஸ் மாதிரி indianleaks.in வெளிப்படுத்திய அப்சல் குருவின் பைல் ஜனாதிபதியிடம் வந்து சேரவேயில்லையென்பதைக் கண்டு பிடித்த பின் நம்ம சிதம்பரம்  Feb 23, 2011ல் அது உண்மைதான் என ஏற்றுக்கொண்டார்.இப்பொழுது மீண்டும் August 10, 2011ல் மீண்டும் சிதம்பரம் தலைமையிலான உள்துறையே ஜனாதிபதிக்கு இதனை வலியுறுத்துகிறது.இதே போன்ற உள்குத்து வேலைகள் நளினியின் தண்டனைக்காலம் முடிந்தும் கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழக உள்துறையால் செயல்படுத்தப்பட்டது என்பதும் இங்கே நினைவுக்கு வருகிறது.

ஒருவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு 5 ஆண்டுகள் அரசு செலவில் பாதுகாத்த பின்பும் மரண தண்டனை நிறைவேற்றுவது என்பது காலம் கடந்த செயலாகவே கூறலாம்.அரசியல் சார்ந்த இதுபோன்ற மரண தண்டனைகள் காந்தி-கோட்சே போன்ற லெகசியை மட்டுமே எதிர்காலத்தில் பதிவு செய்யும்.

கருணை மனுவை ஏற்று அப்சல் குரு விடுவிக்கப்படுவது எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடப்பதற்கும்,அதிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பான முன்மாதிரியாகவும் அமைந்து விடக்கூடும்.


இரண்டுமே சரியானதல்ல எனும்பட்சத்தில் வாழும் வரை அரசு செலவிலே இருந்து விட்டுப்போகட்டும் என்பதும் குற்றங்கள் செய்து சிறை நிரப்பும்!!! நிகழ்வாகவே அமைந்து விடும்.

மேற்கூறிய காலம் கடந்த மரணதண்டனை,கருணை மனு,வாழ்ந்து விட்டுப் போகட்டும் என்ற மூன்று நிலைகள் மிகவும் சிக்கலானவை.இவற்றிற்கு குற்றங்களின் அடிப்படையில் மட்டுமே உச்சநீதி மன்றம் மூன்று நிலைகளில் எது சரியானது என்ற தீர்ப்பை வழங்க முடியும்.

ஒரு மனிதன் செய்த குற்றத்திலிருந்து இன்னொரு மனிதன் பாடம் கற்றுக்கொள்வதே இல்லை.இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று குற்றம் சுமத்தப்பட்டவர் மீதான குற்றமே முன்வைக்கப் படுவதாலா என்பதும் குற்றம் செய்தவரின் மனக்குரலையும் சரியாக பதிவு செய்து வைக்காமல் போகும் மனபாவங்களும் ஒருவரின் குற்றத்திலிருந்து ஆளும் அரசோ அல்லது சமூகமோ பாடங்களைக் கற்றுக்கொள்வதுமில்லை.இப்போதைய நிலையில் அப்சல்,நளினி போன்றவர்களின் மனநிலைகள் எப்படியிருக்குமென்ற உண்மைகள் எதுவும் சமூகத்திற்கு வெளிப்படுவதேயில்லை.

காந்தியின் துப்பாக்கி சூடு முன்வைக்கப் ப்ட்ட அளவுக்கு கோட்சேயின் பக்கத்து நியாயம் என்ன என்பதெல்லாம் சுதந்திர இந்தியாவில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவும் இணைய தள தகவல் பரிமாற்றங்களுக்குப் பின்பே கோட்சேயின் குரலும் கூட கேட்க ஆரம்பிக்கின்றன.அதே போல் அப்சல்,நளினி போன்றவர்களின் குரலும் கூட காலம் கடந்தே கேட்கப்படுமா என்ற கேள்வியும் வருவதை தவிர்க்க இயலவில்லை.

குற்றங்கள் குறைந்த நாடுகள் என பறைசாற்றப் பட்ட நார்வே,லண்டன் போன்ற தனி மனித,குழு மனித மனித கோபங்களுக்கு காரணமென்ன என்பதும் இங்கே கேள்விக்குறியே.