Followers

Friday, April 18, 2014

இந்திய தேர்தல் களம் 2014

ஆளும் கட்சியின் பலவீனங்களே எதிர்கட்சியின் பலம் என்பதை தி.மு.கவின் தோல்வியும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததைப் போல் காங்கிரஸின் பலவீனங்களே பி.ஜே.பியின் பலமாக இந்திய தேர்தல் களம் 2014 அமைய்ப் போகிறது.

ஆலமரமாக வளர்ந்து விட்ட இந்திய ஜனநாயகம் மோடியின் ஐந்து வருட ஆட்சியால் வீழ்ந்து விடப் போவதில்லை.மாறாக இந்திய ஜனநாயக்ம் தன்னை மீண்டுமொரு முறை புதுப்பித்துக்கொள்ளும் இன்னுமொரு சந்தர்ப்பமே.முன்பு ஐந்து வருட ஆட்சியின் மறுபடியும் தொடர் ஆட்சியால் மட்டுமே இந்திய மக்களுக்கு தொடர் பலன் கிட்டும் என்ற பொய்யுரையை காங்கிரஸ் நிரூபித்துள்ளது.மோடியையும் ஐந்தாவது ஆண்டில் ஓய்வெடுக்க சொல்லலாம்.

மதச்சார்பையின்மை என்ற போர்வையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க தங்களது சுயநலங்களை உள்வைக்கின்றன.கோத்ரா கலவரங்களுக்குப் பின் குஜராத்தில் வேறு மத கலவரங்கள் ஏதும் நிகழாதபடி மோடி ஆட்சி செய்துள்ளதாலும் தனது தவறை உணர்ந்து நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கையை முன்வைக்கலாம்.அதற்கு பதிலாக வெறுப்புணர்ச்சியை மட்டுமே தூண்டி விடுவதால் குளிர் காயப் போவது அரசியல் கட்சிகள் மட்டுமே.மோடி ஆட்சிக்கு வருவதால் மோடி மஸ்தானாக மாறி இந்தியாவின் பிரச்சினைகளையெல்லாம் தீர்ப்பார் என்ற சொப்பனத்தையும் மறபோமாக!

சவுக்கு தளத்தில் ஜாப்ர்சேட் அவர்கள் மன்னராட்சிதான் மேடம் என்ற சொம்படிக்கு இந்திய ஜனநாய்கத்தில் மன்னராட்சி முறைக்கு தற்காலிக விடுமுறை மட்டுமே.கம்யூனிஸ்ட்டுகள் குதிரை ஏறுவதை எப்போதோ தவிர்த்திருக்கலாம்.உண்டி எடுத்தே பணம் வளர்த்தேன் என்பவர்களுக்கு மாறாக உண்டி எடுத்தும் கட்சி வளர்க்கலாம்.முயற்சி செய்யுங்கள்.வங்காளம் தன்னை வளர்த்துக்கொள்ள வில்லையா? இப்ப மம்தா என்பவர்களுக்கு வங்காளத்துக்கும் ஒரு மாற்ற்ம வேண்டாமா?

ஊர் வம்படிக்க நேரமில்லாததாலும் ஓட்டுப்போட வாய்ப்பில்லாததாலும் இத்தோடு முடிக்கலாம் என்று நினைக்கும் போது ஜாக்கிசேகரின் அப்பாவித்தனமான பஞ்சம் பொளக்கப்போனவங்களுக்கெல்லாம் ஓட்டு கூடாது என்ற பதிவு நினைவுக்கு வந்தது.
சாம் மார்த்தாண்டன்! இந்த பச்ச புள்ளைகிட்டயா கிள்ளி விளையாடுறீங்க:)