Followers

Thursday, December 3, 2015

யோவ்!மழையில பைக்,காரை ஓட்டாதீர்கள்.

இருக்குற மழை மன அழுத்தம் பத்தாதுன்னு யாரோ ஒருவர் இந்தியாவிலிருந்து ரொம்ப அக்கறையா ஒரு காணொளியை தட்டி விட்டார்.
ஒரு பையன் கொஞ்சமா ஓடுகின்ற தண்ணீர்தானே என்று ஒரு கால்வாய் பாலத்தை கடக்க முயற்சி செய்ய பைக்கின் முன் சக்கரம் வழுக்கி அப்படியே பைக்கையும்,பையனையும் உள்ளே அமுக்கி விட்டது.பைக்கையும் காணோம் பையனையும் காணோம்.

முந்தைய பதிவில் சொன்ன மாதிரி வேடிக்கை பார்க்கும் நம்ம குண தோசத்தில் இந்தக்கரையில் படம் எடுப்பவர் பிலிம் காட்டிக்கொண்டும் மறுகரையில் கார் நின்று கொண்டிருக்க மெதுவாக பார்த்துக்கொண்டே நகர்ந்து கொண்டுள்ளார்கள்.

நான் பட்ட அவஸ்தை மற்றவர்கள் படக்கூடாது என்ற எண்ணத்தில் காணொளி ஒட்டாமல் தடை செய்யப்படுகிறது.

2 comments:

வேகநரி said...

பிரதமர் 1000 கோடி ரூபா கொடுக்க போகிறார்.தமிழகஅரசு அந்த பணத்தை ஊழல் செய்யாம, வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய பயன்படுத்த வேண்டும்.

ராஜ நடராஜன் said...

வேகநரு@ வாங்க.

இந்தியாவில் முக்கியமாக தமிழகத்தில் ஊழல்,நேர்மை குறைந்து போனது ஒரு பெரும் பிரச்சினை.பணம் ஒரு பெரும் பிரச்சினையே அல்ல.இந்திய அரசு போக உலக வங்கியில் கூட பணம் வாங்கி விடலாம்.ஆனால் கிடைக்கும் பணத்தை பங்கீடு செய்வதில் குழறுபடிகள்.முன்பெல்லாம் மனித வளங்களை மட்டுமே கட்டமைப்புக்கு உபயோகிக்க வேண்டிய சூழல் போய் ராட்சத இயந்திரங்கள் வந்து விட்டன. கச்சாப் பொருட்கள் நிறைந்து உள்ளன.தொழில்நுட்பங்கள் பரவியிருக்கின்றன.ஆனால் வெள்ளை வேட்டிகள் குழப்பி விடுகிறார்கள்.